வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, September 04, 2011

கடவுள் தன்மை உடையவன் திருடினான் என்றால் திருட்டு கிடையாதா?


இந்து என்றால் திருடன் என்று கலைஞர் சொல்லி விட்டார்  என்று சிலர் தாண்டிக் குதித் தனர். அது கலைஞர் தன் கற்பனையில் கூறிய சரக்கு அல்ல; கமலபதி திரிபாதி என்ற உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல் அமைச்சர் எழுதிய நூலிலிருந்தே ஆதாரம் காட்டினார்.

பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள ஞான சூரியன் எனும் நூலான பெட்டகத்தில் சுவாமி சிவானந்த சரஸ்வதி கூறி யுள்ளார். பாரசீக மொழி யில் இந்து என்றால் திருடன் என்று குறிப் பிடப்பட்டுள்ளதை எடுத் துக்காட்டியுள்ளார்.

அவ்வளவு தூரம் போவானேன்? திரு மங்கை ஆழ்வார் வைணவ ஆழ்வார்களுள் ஒருவன்; அவன் என்ன செய்தான் தெரியுமா?

நாகப்பட்டினத்தில் புத்தர் தெய்வம் பசும் பொன்னால் செய்திருந் தது. அதனை ஆலிநாடர் (திருமங்கை ஆழ்வார்) களவில் கொண்டு வந்து திருவரங்கத்து மதில் செய்வித்தார். அவர் அச் சமயத்தில் கடவுள் தன் மையராய் விளங்கினார். அவரைக் குற்றம் கூறுநர்

ஒருவரும் இலர் - இப்படிக் கூறுவது திராவிடர் கழக வெளி யீடல்ல - திராவிடர் கழ கத் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் கூற்றும் அல்ல.

சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்ட தஞ்சைவாணன் கோவை (பக்கம் 7  - வரிகள் 26-30) பறைசாற்றுகிறது. குரு பரம்பரப்பிரபாவம் என்ற வைணவ  நூலும்  இதனை வழிமொழிகிறது.

நாகப்பட்டினத்தில் இருந்த பசும்பொன்னா லான புத்தர் சிலையைத் திருமங்கை ஆழ்வார் என்ற ஆழ்வார் திருடி னான் என்று கூறிவிட்டு, அவன் திருடிய நேரத்தில் கடவுள் தன்மை உடைய வனாக இருந்தான் என்பதால் அவனைக் குற்றம் கூற முடியாது என்று அடித்துக் கூறப் படுகிறது.
ஒன்று மட்டும் திட்ட மிட்ட முறையில் தெளிவா கிறது. கடவுள் தன்மை உடையவன் ஒருவன் திருட்டு வேலை செய் திருக்கிறான் என்பதை தஞ்சைவாணன்  கோவையே கூறித் திருட்டை நியாயப்படுத் தியுள்ளது.

திருட்டு என்பது திருட்டுதான். அவன் கடவுள் தன்மை உடையவ னாக இருந்தால் என்ன? இல்லாமல் இருந்தால் என்ன?

கடவுள் தன்மை உடையவன் திருடினான் என்றால், திருட்டுக்குத் தெய்வீக அங்கீகாரம் கிடைத்து விட்டதாகப் பொருளாகவில்லையா?
இந்து என்றால் திருடன் என்று சொன் னால் சீறிஎழும் சிரோன் மணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகி றார்கள்?   

- மயிலாடன், விடுதலை,04-09-2011

 


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]