வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, July 30, 2011

குல்லுகப்பட்டரின் சீடர் சோ ராமசாமி இப்பொழுது அந்தர்பல்டி அடிப்பது ஏன்?


கடந்த வார துக்ளக்கில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஒரு வார்த்தைகூட எழுதாத திருவாளர் சோ ராமசாமி இந்த வார இதழில் (3.8.2011) தன் ஆற்றாமையை வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பித் தீர்த்துள்ளார்.

கடைசியில் வேறு வழியில்லாமல் அ.தி.மு.க. அரசுக்கு ஊரோடு ஒத்துப் போகச் சொல்லியிருக்கிறார்.

சென்ற அரசின் சமச்சீர், சமத்தாழ்வுதான்; அதை நீதிமன்றம் ஏற்றது சரியல்ல; கொள்கை முடிவில் நீதிமன்ற குறுக்கீட்டாகத்தான் இது காட்சியளித்தது.

ஆனால் சரியோ, தவறோ, நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தபோது - நிச்சயமற்ற தன்மை தொடர்வதால், மாணவர்களுக்கு ஏற்படுகிற பிரச்சினையை மனதில் கொண்ட புதிய அரசு, இந்த ஆண்டு அதையே அமல் செய்து, அடுத்த ஆண்டுக்கு மாற்றங்களுடன் கூடிய புதியமுறையை வகுத்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் அப்பீல்கள் செய்து, தமிழக அரசு மாணவர்களின் குழப்பத்தை நீட்டித்தது; இது தவிர்க்கப்பட்டி ருக்க வேண்டும் என்ற விமர்சனத்தில் நியாயம் இருக்கிறது என்று துக்ளக் தலையங்கம் கூறுகிறது.

தொடக்கம் முதல், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியைத் தாழ்கல்வி என்று தரக் குறைவாக விமர்சித்து தமிழக அரசின் செயல்பாட்டுக்கு ஜெ போட்டு வந்த திருவாளர் சோ ராமசாமி இப்பொழுது அந்தர்பல்டி அடிப்பது ஏன்?

இது போன்ற சந்தர்ப்பவாதிகளின் ஆலோசனையை நம்பினால் அது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம் என்பதை இது முதற் கொண்டாவது தமிழக முதல் அமைச்சர் உணர்வாராயின், அது நல்லதே!

இந்தப் பிரச்சினையில் அ.தி.மு.க. அரசு நீதிமன்றம் சென்றபோதே இந்த அறிவுரையைச் சொல்லியிருந்தால் அதில் அர்த்தம் இருந்திருக்கும். உயர்நீதிமன்றம், அதற்குப்பின் உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்ற ஆணையின்படி மறுபடியும் சென்னை உயர்நீதிமன்றம் - உயர்நீதிமன்றத்தின் கறாரான உத்தரவுக்குப்பின் மீண்டும் உச்சநீதிமன்றம் என்று சென்றதற்குப் பிறகு இந்த அப்பீல்களைக் குறைகூற ஒருவர் முன்வருகிறார் என்றால், அவர் எப்படிப்பட்ட அறிவாளி என்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.

இதில் இடுக்கோடு இடுக்காக நீதிமன்றத்தின் தீர்ப்பைக் குறை சொல்வதைக் கவனிக்க வேண்டும். அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் குறுக்கிட்டுவிட்டதாம்! அப்படிப் பார்க்கப் போனால் மாநில அரசோ, மத்திய அரசோ தீர்மானிக்கும் எந்த ஒரு திட்டமும் அந்த அரசுகளின் கொள்கை முடிவுகள்தாம். அதில் எல்லாம் நீதிமன்றங்கள் குறுக்கிட்டபோது இந்தக் குல்லுகப்பட்டரின் சீடர் எழுதுகோலை எங்கே போய் ஒளித்து வைத்திருந்தார்?

இட ஒதுக்கீடு என்பதுகூட அரசுகளின் கொள்கை முடிவுதான் அதில் எல்லாம் நீதிமன்றங்கள் குறுக்கிட்டனவே - அப்பொழுது அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் குறுக்கிட்டது குற்றம் குற்றமே என்று நக்கீரன் பாணியில் எழுதியதுண்டா?

பாபர் மசூதி இடிப்புப் பிரச்சினையிலோ, குஜராத் நரேந்திரமோடி சம்பந்தப்பட்ட பிரச்சினையிலோ நீதிமன்றமோ, விசாரணை ஆணையமோ இரண்டொரு வார்த்தைகளில் சாதகமாகக் கருத்துத் தெரிவித்திருந்தால் அவற்றையே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு பார் பார் நீதிமன்றமே அடித்துக் கூறி விட்டது. விசாரணை ஆணையமே விண்டுரைத்துவிட்டது என்று வீராவேசத்துடன் எழுது கோல் கோலாட்டம் அடிப்பார். அதே நேரத்தில் நரேந்திர மோடியை நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்றம் சொன்னால் உப்புக்கண்டம் பறி கொடுத்த பழைய மொட்டைப் பார்ப்பனத்திபோல மூலையில் முடங்கிக் கொள்வார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி என்று - ஆபிடூபேயின் பார்ப்பனர்பற்றிய படப்படிப்பை அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயையில் அர்ச்சித்ததுதான் இப்பொழுது நினைவுக்கு வந்து தொலைகிறது.

விமர்சனத்தோடு விமர்சனமாக சன்னமான தனது நச்சுக் கொள்கையும் இதில் இந்த அய்யர் நீட்டியிருப்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது.

இந்த ஆண்டு அதையே (பழைய சமச்சீர் பாடத்தையே) அமல் செய்து, அடுத்த ஆண்டுக்கு மாற்றங்களுடன் கூடிய புதிய முறையை வகுக்கலாம் என்று விஷ(ம)யதானம் செய்துள்ளார்.

நான்கு ஆண்டுகாலம் தக்க கல்வியாளர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தை ஒரே ஆண்டுக்குள் மாற்றி விட வேண்டுமாம். யார் வீட்டுப் பணம்? மக்கள் வரிப்பணம் நாசமாகப் போனால் பார்ப்பனர்களுக்கு என்ன வந்தது!

பெரியார் பற்றியும், அண்ணா பற்றியும், காமராசர் பற்றியும், வெள்ளுடை வேந்தர் பிட்டி. தியாகராயர்பற்றியும் தேவதாசி ஒழிப்பு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி மனுதர்மத்தின் மண்டையில் அடித்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றியும் பாடங்களில் இடம் பெற்றால், அவற்றை தொடர்ந்து படிக்க மாணவர்களை அனுமதிக்கலாமா?

திலகர் பற்றியும், குலக் கல்வித் திட்டம் கொண்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியில் கொள்ளி வைத்த ஆச்சாரியார் பற்றியும் (ராஜாஜி) சத்தியமூர்த்தி அய்யர் பற்றியும் சொல்லிக் கொடுத்தால் அதுதானே தரத்தில் உயர்ந்த கல்வி, மற்றவையெல்லாம் அவர்கள் பார்வையில் தாழ்கல்வியாயிற்றே!

2011ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்களைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள - தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை எதிர்ப்போர் வழி வகுத்துக் கொடுத்து விட்டனர்.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பார்ப்பனர்களின் மனுதர்மம், சம்பூகனைப் படுகொலை செய்த இராமன், ஏகலைவன் கட்டை விரலைக் காணிக்கையாக பெற்ற துரோணாச்சாரியார் பற்றியெல்லாம் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டி, பார்ப்பன எதிர்ப்புணர்வுப் பூகம்பத்தை கிளப்பினால்தான் சரி வரும். கெட்டதிலும் ஒரு நல்லது என்ற முறையில், இந்தப் பிரச்சாரத்துக்கு, இந்தச் சந்தர்ப்பம் பயன்படட்டும்! கொழுந்து விட்டு எரியட்டும் - குல்லுகப் பட்டர் கும்பலின் பாசிசத்துக்கு எதிரான பிரச்சாரம்!

-------------விடுதலை தலையங்கம் (30-07-2011)


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]