வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Sunday, July 24, 2011

வரலாறு காட்டும் ஆரியர் நம்பிக்கைகள், சமயச் சடங்குகள், வழிபாட்டு முறைகள்

ஆரியர்கள்தாம் யாகங்கள், வேள்விகள் செய்தல், பலியிடுதல் முதலிய வழிபாட்டு முறைகளைத் தென்னாட்டில் சிறிது சிறிதாகப் புகுத்தியவர்கள்.

அந்தணர், முனிவர் எனப்பட்ட வர்களின் வாழ்க்கை முறை, கடமை முதலியவற்றைப் பற்றிய செய்திகள் திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, புறநானூறு முதலிய சங்க நூல்களில் உள்ளன.

அந்தணர் காலையிலே வேதம் ஓதுவர். அவர்கள் வேதம் ஓதி எழுப் புகின்ற ஓசை தாது உண் தும்பி போதைச் (மலர்) சுற்றியிருக்கும் ரீங் காரத்தை ஒத்திருக்கும் என்கிறது மதுரைக் காஞ்சி இவ்வாறு:

தாதுண்டும்பி போது முரன்றாய்
கோத அந்தணர் வேதம்பாட
(மது. 655_65)

என்கிறது மதுரைக் காஞ்சி. அவர் கள் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளைத் தவறாது செய்து ஒழுகுவர் என்பதை மந்திர விதியின் மரபுளி வழாக்அ
வந்தணர் வேள்வி வேரார்க்கும்மே! என்கிறது திருமுருகாற்றுப்படை.

இவ்வாறு அவர்கள் தாம் வேதம் ஓதினர் என்பதையும், யாகங்கள் செய் தனர் என்பதையும் மதுரைக் காஞ்சி கூறுகிறது. அந்தணர் வேதத்தை நன்கு பயின்றவர் ஆதலால், அறம்புரி கொள்கை நான் மறை முதல்வர் (புறம் 93) அறுதொழிலந்தணர் (புறம் 397) என்று புறநானூறு கூறும். அந் தணர் அந்திக் காலத்திலே செய்தற் குரிய கடனாகிய முத்தீவளர்ப்பர் என்பதனை அந்தியந்தணரருங் கடனிறுக்கும் முத்தீ என்றும் கூறும். வேள்வி செய்ததற்கு அன்றைய நாளில் அரசர்கள் ஏமாந்திருக்கின்றனர். பார்ப்பனருக்கு அவர்களுடைய நனைந்த கை நிறையும்படியாக பொற்காசு, பொற்பூ ஆகியவற்றை நீரோடு அட்டிக் கொடுத்துள்ளனர். அதாவது தாரை வார்த்துக் கொடுத் துள்ளனர்.

இதையும் புறநானூறு ஆதாரங் காட்டுகிறது.

கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அருங்கல நீரோடு சிதறி (361)
ஏற்ற பார்ப்பார்க்கீர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து
ஆரியர் யார், தமிழர் யார் என்பதனைத் திருமுருகாற்றுப்படைப் பாடல் கூறும் ஆதாரம் வழியாகவே அன்றே அறிந்து இருந்தனர்.

திருமுருகாற்றுப்படை
அந்தணர் என்றால் ஆறுதொழில் உடையவர். அந்தணர் என்றால் முப்புரி நூல் அணிபவர். அந்தணர் என்றால் முத்தீ வளர்ப்பவர். நாற்பத்து எட்டு ஆண்டுகள் நிறைந்த நல்லிளமையை விதிமுறையில் கழித்தவர், வேதங்களைத் தவறாமல் ஓதுபவர்.
நான்கிரட்டியளமை நல்லியாண்
டாறிளிர் கழிப்பில் வறளவி கொள்கை
மூன்று வகை குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப்பாளர்
பொழுதறிந்து நுவல ஒன்பது
கொண்ட மூன்று புரிநூண்ஞாண்
(திருமுருகாற்றுப்படை 176-187)
குறுந்தொகை,
செம்மையாகிய பூவையுடைய முருக்கின் நல்ல பட்டையை நீக்கி விட்டு அதன் தண்டோடு ஏந்திய தாழ்கின்ற கரகத்தையும், விரத உணவையுமுடைய பார்ப்பான்
எனும் பொருளில்

செம்பூமுருக்கினைன்னார் களைந்து
தண்டோடு பீடித்த தாழ் கமண்டலத்து படிவ உண்டிப் பார்ப்பன மகளே
(குறுந் 956) என்று கூறும்.

இந்தப் பார்ப்பனர்கள் இன்று அக்கிரகாரம் என்று தனித்து வாழ்கின்றார்களே அது போல் அன்றும் வாழ்ந்து இருக்கின்றனர் என்பதைக் குறுந்தொகை, பெரும் பாணாற்றுப்படை ஆகிய நூல்கள் வாயிலாக அறிகிறோம். குறுந்தொகை அந்தணர் வீடுகளில் நாய் இல்லாது அகன்ற வாயில் இருக்கும். அங்கே செந்நற்சோற்று அமலையும் மிளவெள்ளிய நெய்யும் கிடைக்கும் என்கிறது. (குறுந் 277)

பெரும்பாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப் படை அந்தணர் குடியிருந்த ஊர் ஒன்றைப் பாடல் வாயிலாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. சிறிய மரத் தூண் களைக் கொண்ட குடில்களில் பசுக் கள் கட்டுப்பட்டுள்ளன. அவ்வூரி லுள்ள வீடுகள் சாணத்தினால் மெழு கப்பட்டுள்ளன. அவ்வீடுகளில் பல உருவங்கள் உண்டு. அவற்றைச் சுற்றியுள்ள இடங்களில் கோழிகளும், நாய்களும் காணப்பட்டன. வளைந்த வாய்களையுடைய கிளிகளும் மறை பயிற்றும் மரையவர் அவ்வீடுகளில் வாழ்வர் (பெரும்பாண் 297)

பார்ப்பனர்களின் ஆதிக்கம் நகரங்களில்தான் ஓங்கியிருந்துள்ளது. பட்டினப்பாலை காவிரிப் பூம்பட் டினத்து வணிகர், தெய்வங்களுக்கு அவி வழங்குவது, அமரரைப் பேணு வது, பகடு ஓம்புவது, பார்ப்பனர் பெருமை கூறுவது ஆகியன செய் தனர் என்று கூறுகிறது.
உலகத்தைக் குறித்த ஆரியத் தத்துவக் கருத்துகள் தமிழ்நாட்டில் புகுந்ததற்குப் பெரும் பாணாற்றுப் படையில் சான்று இருக்கிறது. உலகத்தைப் பெரும்பாணாற்றுப் படை நாவலந் தண்பொழில் என்று கூறுகிறது. அரசர்களில் சிலர் ஆரியர்க்கு அவர்தம் வேள்விக்கு அடிமையாகி விட்டுள்ளனர்.

எரிக்காட்டூர்த் தாயங்கண்ணனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை,

அறுதொழில் அறம்புரிந்தெடுத்த
தீயொடு விளங்குநாடன் (புறம் 397)
அதாவது அவனுடைய நாட்டில் எங்கும் வேள்வி நிகழ்ந்தது எனக் கூறுகிறார். நெட்டிளமையார் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் பல வேள்விகள் செய்தவன் எனக் கூறுகிறார். சோழன் கரிகால் பெருவளத்தான் பார்ப்பன வேள்விச் சடங்கிற்கு அடிமை யானதைக் கருங்குழலாதனார் என்ற புலவர் கூறும் புறநானூற்றுப்பாடல் வழி அறிகிறோம்.

வேள்விகள் எப்படி நடைபெற்றன?

அந்நாளில் வேள்விகள் எவ்வாறு நடைபெற்றன என்பதற்கு, அது தமிழர் சடங்கல்ல, ஆரியர் சடங்கு, ஆரியர் அதனைப் புகுத்தி முறைப்படுத்தினர் என்பதற்கும், சங்க காலப் பாடல்களில் புறநானுறு சான்றாக விளங்குகிறது. பூஞ்சாற்றுப் பார்ப்பான் கௌணியன் விண்ணத் தாயன் என்பவன் எவ்வாறு வேள்வி செய்தான் என்பதை ஆவூர் மூலங் கிழார் என்பவர் பாடிய பாடல் வழி யாக நன்கு அறிகிறோம். (புறம் 224)

விண்ணத்தாயன் தோல் உடையை அணிந்து அவன் தன் மனைவி யரோடு அவர்கள் துணை புரிய வேள்வி செய் தானாம். அவ்வேள்வி யில் நீர் நாணும்படி நெய்யை ஊற்றி னானாம். வேள்வியின் இறுதியில் பெரு விருந்து நிகழ்ந்துள்ளது. இவ் வாறு அவன் செய்த வேள்விகள் எண்ணில் அடங்காதவை.

இவ்வாறு ஆரியர் அங்கே தம் ஆதிக்கத்தைப் பரப்பிட அன்றும் அரசாள்வோர் ஆரியத்திற்கு அடிமை யாகி வேள்வி செய்தால் பெருமை என்று இறங்கியுள்ளனர்.

வேள்விக்கு அடிமையான சேரர்கள்

பாண்டியர், சோழர் போல் சேரரும் வேள்விக்கு அடிமையாயினர். பெருஞ்சேரல் இரும்பொறை யாகம் (வேள்வி) செய்வதற்குரிய விதிகளைக் கேட்டு, விரதம் மேற்கொண்டு தன் கற்புக்கரசியோடு வேள்வி செய்த தாகவும் இதன் பயனாக அவள் வயிற் றிலிருந்த குழந்தை கருவிலிருந்தே அரசுத் துறைக்கு வேண்டுவன எல்லாவற்றையும் பெற்ற நல்லறிவுடன் விளங்கியது என்றும் பதிற்றுப் பத்து கூறுகிறது.
ஆக வேள்விகள் பெருகப் பெருக அந்தணர் செல்வாக்கும் பெருகியது. அரசர்கள் அந்தணர் சொல்படி அரசாளத் தலைப்பட்டனர். ஆரிய ஆதிக்கம் பெருகியது. அந்தணருக்குப் பணிதலை அல்லாமல் பிறருக்குப் பணிதலை அறியாதவர்கள் ஆயினர் அரசர்கள் என்பதைப் பதிற்றுப் பத்து

பார்ப்பனர்க்கல்லது பணிவறியவையே என்றும் ஆறு புரிந்தொழுகும்
அறம் புரியந்தணர் வழி மொழித்
தொழுகி என்று கூறும்
நீடுழி வாழ்க எனப் பார்ப்பனர் வாழ்த்திடும் கையின் முன்னேயே அரசரின் முடி வணங்கியது என்று புறநானூறு கூறுகின்ற அளவிற்கு ஆரியச் செல்வாக்கு தலையெடுத்து விட்டது. காரி என்ற மன்னனுடைய நாடு வேள்வித் தீயைப் பாதுகாக்கும் அந்தணர்க்குரியது என்ற கொள்கை பரவியது.

இப்படி வேள்விகளின் பெருக்கம் மிகுதி மிகுதியாகப் பூணூல் அந் தணர் ஆதிக்கம் பரவியதோடு நின்று விடாமல் ஆரியக் கொள்கையான நிலையாமை என்னும் கொள்கை பரவியது.

இதனால் இயற்கை வாழ்வு வாழ்ந்த தமிழர் நிலையாமைக் கொள்கைக்கு ஆட்பட்டனர்.

இளந்திரையன் என்னும் அரசன் தன் வாழ்வு என்றும் நிலை பெற்று நில்லாது என்பதனை உட்கொண்டு தன் புகழை நிறுத்த விரும்பினான். மதுரைக் காஞ்சி என்ற புகழ் பெற்ற சங்க நூலே பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நிலையாமையை உணர்த்த எழுந்த நூல். இந்நிலை யாமையை புலவர் நூலில் பல இடங் களில் அறிவுறுத்திச் செல்கிறார்.

மதுரைக்காஞ்சியில் ஓரிடத்தில் (205_-204) புலவர் இவ்வாறு கூறு கிறார்.

நல்வினை இயற்றுவதினால் வரும் புகழை நீ விரும்புகிறாய். புலன்களி னால் நுகரப்படும் பொருள்களிலே உனக்குப் பற்றுதல் இல்லை. போரைப் புரியச் செய்யும் உன் பொய் உணர்வு கெடுவதாக என்று அவனுடைய வீரத்தையே மழுங்கச் செய்கிறார்.

நிலவினைப் பார்க்கிறோம். நிலவின் அழகில் மயங்குகிறோம். நில வின் தன்மை நம்மைக் குளிர்விக் கிறது. இதெல்லாம் இயல்பாக எவருக்கும் ஏற்படும் உணர்வு. சோழன் நலங்கிள்ளியைப் பாடிய உரையூர் முதுக்கண்ணன் சாத்தனார் என்ற புலவருக்கு நிலவு நிலை யாமையை உணர்த்துகிறதாம்.

நிலவையும் விட்டுவைக்காத ஆரியம்
நிலவு கல்வியறிவில்லாத மட வோருக்குக் கூட நிலையாமையை அறிவுறுத்துகின்றது என்கிறார். உலகம் பொய், மனிதன் வாழ்வு பொய், எல்லாம் பொய் என்று போதிக்கும் ஆரியம் நிலவையும் விட்டு வைக்கவில்லை.
வளர்ந்த தொன்று பின் குறைதலும்
குறைந்ததொன்று பின் வளர்தலும்,
பிறந்ததொன்று பின் இறத்தலும்,
இறந்ததொன்று பின் பிறத்தலும்
உண்டு என்பதைக் கல்வி அறி வில்லாத மடையனும் அறியும்படி நிலவு காட்டுகிறது என்று கூறும் புலவர் பாடல் வரிகள் இவை:
தேய்தலுண்மையும் பெருகலுண்மையும்
மாய்தலுண்மையும் பிறத்தலுண்மையும்
அறியாதோரையு மறியக் காட்டித்
திங்கட புத்தேடிரி தருமுலகத்து (புறம் 27)
பிரமளார் என்ற புலவர் மற்றொரு புறநானூற்றுப் பாடலில் (357)

குன்றுகளோடு கூடிய மலை களைத் தன்னிடத்துப் பிணைத்துக் கட்டி நிற்கும் மண்ணுலகத்திலே, பொது வெனக் கருதப்பட்ட மூவேந் தருடைய நாடு மூன்றையும் பொது வாகக் கருதாது தமக்கே உரியன எனக் கொண்டு ஆண்ட வேந் தருக்கும் வாழ்நாட்கள் கழிந்தன. அவர் சேர்த்து வைத்த செல்வமும் அவருடைய உயிருக்குத் துணையாக விளங்கவில்லை என்று கூறுகிறார். விழாக் காலங்களில் ஆடும் கூத்தரது வேறுபட்ட கோலம் போல, முறை முறை தோன்றி இயங்கி மறை யும் தன்மையை உடையது உலகம் என்கிறது மற்றொரு புறநானூற்றுப் பாடல் (29)

இப்படி உலக வாழ்வு மாயை -_ மனை வாழ்க்கை பொய், மனைவி பொய், _ தவம்தான் சிறந்தது, வீடு பேறு அடைவதுதான் சிறந்தது என்று போதித்தனர். ஆரியர்.

தவம்தான் உயர்ந்ததாம்!

தவம்தான் உயர்ந்தது என்று கூடப் போதிக்கும் அளவிற்கு ஆரியச் செல்வாக்கு பரவிய நிலையைப் பார்க்கிறோம். துறவு, தவம்தான் நிலையானது எனும் ஆரியக் கருத்து பின்வரும் பாடலில் தலை தூக்கி நிற்கிறது.

பருதி சூழ்ந்த விதப் பயங்கெழு மாநிலம்
ஒரு பகலெழுவரெய்தியற்றே
வையமுந்தவமுந்தூக்கிற்ற வைத்துக்
கையவியனைத்துமாற்றாதாகலிந்
கைவிட்டனரே காதலரதனால்
விட்டோரை விடா அடிருவே
விடாதோரி வள்விடப்பட்டோரே (புறம்)
இப்பாடலின் பொருள் இது.

ஞாயிற்றினால் சூழப்பட்ட இப்பெரிய உலகம் ஒரு நாளில் ஏழு அரசர் தலைவராக வருவதற்குரிய அத்தகைய நிலையாமையை உடை யது. அதனால் உலகியலாகிய இல் லறத்தையும், அருட் பயிற்சியாகிய துறவறத்தையும் சீர்தூக்கிப் பார்த்தால், தவத்திற்கு உலகம் சிறு கடுகு அளவு கூட நிகர் உள்ளதாகத் தெரியவில்லை. அதனைத் தெரிந்தே வீடு பேற்றை அடைய விரும்பி யவர்கள் இல்வாழ்வில் பற்று விட் டனர். அவ்வாறு அவர்கள் கைவிட்டு நீங்கிய போதும் திரு அவர்களைக் கைவிடுவதில்லை. தன்னிடம் பற்று டையோரைத் திரு அதாவது செல்வமகள் இலட்சுமி நீங்குவார். ஆதலால் தவமே சிறந்தது, செய்யத் தக்கது எனச் சான்றோர் கண்டனர்.

தலைவிதி, ஊழ் என்னும் ஆரியக் கருத்துகள்

தலைவிதி, தலையெழுத்து, விதி, ஊழ்வினை ஆகியன எல்லாம் ஆரியக் கருத்துக்கள். கன்மம் என்பது வடசொல். சங்க நூல்கள் கன்மம் என்ற வட சொல்லை, ஊழ் என்னும் தமிழ்ச் சொல்லால் உணர்த்துகின்றன. ஊழ் போலவே மறு பிறப்பு நம்பிக்கையையும் ஆரியர் தமிழ்ச் சமுதாயத்தில் புகுத்திவிட் டனர் எனலாம்.

பொருநராற்றுப் படையில் பொருநனைப் பார்த்துப் புலவர் உன்னை நான் காணும்படி செய்தது உன்னுடைய நல்வினைப்பயனாகும் (ஆற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே) என்று கூறுகிறார்.

குறிஞ்சிப் பாட்டில் தலைவ னுடன் ஏனையுலகத்தில் இயைவது தனக்கு உண்டெனத் தலைவி, தன்னைத் தேற்றிக் கொள்வதிலிருந்து அக்காலத்தில் மறு பிறப்பில் நம்பிக்கை இருந்ததென அறியலாம்.

இவ்வுலகில் வாழ்வதற்கென வரை யறுக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் நன்றாக வாழ்தலே வேண்டப்படுவது, வாழ்வதற்கு ஏதுவாகிய நல்வினை யன்றி இறக்கும்பொழுது உயிர்க்குத் துணையாவது வேறு ஏதும் இல்லை என்ற கொள்கை பரவியது. உயிர்கள் அனைத்தும் தாம் தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும் செல்வமும் வறுமையும் எய்தும் என்ற கருத்துப் பரவியது.

உயர்ந்த விருப்பத்தை உடைய உயர்ந்தோக்குத் தாம் செய்த நல் வினையிடத்து அதனை அனுபவித் தல் உண்டாம். ஆதலால், அவர்க்கு இரு வினையும் செய்யப் படாத தேவ ருலகத்தின் கண் இன்பம் அனுபவித் தலும் கூடும். அவ்வுலகத்தின் கண் நுகர்ச்சி இல்லையாயின் மாறிப் பிறத் தலை உடைய பிறப்பின்கண் இன்மை எதுவும் கூடும் என்று புறநானூறு கூறும்.

போரைச் செய்யும் வலியினை யுடையோர் நீண்ட இலையை உடைய வேலாற் புண்ணுற்று வடுப்பட்ட உடம்போடு மேலுலகும் புகுவர் என்று பரணர் கூறுகிறார். சங்க நூல்களில் இவ்வாறு ஆரிய நம்பிக்கைகளும், சமயக் கோட்பாடு களும் கூறப்பட்டிருந்தாலும், மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை இடம் பெறவில்லை. ஆனால் நகர வாழ்க்கையில் அவற்றின் செல்வாக்கு சிறிது சிறிதாகப் பெருகிக் கொண்டே வந்தது.

ஆரிய, தமிழ்ப் பண்பாடுகள்

முதலில் சங்க காலத் தமிழர் பண்பாடு குறித்துக் கண்ட நாம் இப் போது ஆரிய வழிபாட்டு முறை களைக் கண்டோம். எனவே இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றும்கூட நம்மால் ஆரியப்பண்பாடு எது என்று சுட்டிக் காட்ட முடிகிறது. ஆரியச் செல்வாக்கு உயர உயரத் தமிழ்ப் பண்பாடு பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஆரியம் உயர்ந்தது என்ற தவறான சிந்தனை, கருத்து ஆகியன புகுந்து விட்டன.
---------கட்டுரையாளர் ந.க.மங்களமுருகேசன், விடுதலை ஞாயிறு மலர்


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]