வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label திருப்பதி. Show all posts
Showing posts with label திருப்பதி. Show all posts

Wednesday, January 13, 2010

அபசாரம்! அபசாரம்! தண்ணீரின் புனிதத் தன்மை கெட்டே விட்டது..

திருப்பதி மூலஸ்தான பிர-காரத்திற்கு ஒரு கிணற்-றி-லிருந்து தண்ணீர் எடுக்-கப்பட்டு வருகிறது. இந்தக் கிணற்றின் அருகில் சமை-யல் கூடம் உள்ளது. இங்கு-தான் திருப்பதி லட்டு தயாரிக்கப்படுகிறது. கிணற்றுத் தண்ணீரில் கிரு-மிகள் இருக்கும் என்ப-தால், கிணற்று நீரில் குளோ-ரின் தூளைக் கலந்தார்-களாம்.


அபசாரம்! அபசாரம்! தண்ணீரின் புனிதத் தன்மை கெட்டே விட்டது என்று தலையில் அடித்துக் கொண்-டார்களாம் அர்ச்சகர்கள்!

தண்ணீரைத் தூய்மைப்-படுத்த, கிருமிகளை அழிக்க குளோரினைப் பயன்படுத்தினால் புனிதம் கெட்டுப் போய்விடுமாம். அப்படியென்றால் அழுக்க-டைந்து நோய்களை உண்-டாக்கும், கிருமிகள் குடியி-ருக்கும் நீர்தான் புனித-மானதா?

புனிதத்தின் யோக்கி-யதை எந்தத் தரத்தில் இருக்கிறது பார்த்தீர்களா! கடவுளுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படும் அந்தத் தண்ணீரில் உள்ள கிருமிகளைஅழிக்க ஏழு-மலையானுக்கு சக்தி-யில்லை என்றால், கட-வுள் சக்தி உள்ளவரா? கிரு-மிகள் சக்தி உள்ளனவா என்ற கேள்விதான் எழு-கிறது.

திருப்பதியில் லட்டு வாங்கி சாப்பிடும் பக்தர்-களுக்கும் ஒரு தகவல் இதன் மூலம் கசிந்துள்-ளது. திருப்பதி லட்டு கிரு-மிகள் உள்ள தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்படு-கிறது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதன் சுற்றுச் சூழல் பற்றி இந்திரா காந்தி என்ற பெண்-மணி ஓர் ஆய்வு செய்-தார்.

கோயில் கருவறையில் மூல விக்ரகத்திற்கு அபி-ஷேகம் செய்யப்படும் தண்ணீரில், பால், சந்தனம் வகையறாக்கள் ஒரு சாள-ரத்தின் வழியாக வெளியே வரும். பிரகாரத்தைச் சுற்றி வரும் பக்தர்கள் சாமிக்கு அபி-ஷேகம் செய்யப்பட்டு வெளியில் வரும் அந்தத் தண்ணீரைப் புனித நீர் என்று மதித்து கையில் பயபக்தியாக எடுத்து, மொடுக் மொடுக்கென்று குடிப்பார்கள்.

அந்த (சாக்கடை)த் தண்ணீர் தப்பித் தவறிக் கூட கீழே சிந்திவிடக் கூடாது என்பதற்காக (பக-வானைக் குளிப்பாட்டிய ஜலமாயிற்றே!) இரு கைகளை-யும் அப்படியே தலையில் தடவிக் கொள்வார்கள்.

ஆய்வாளர் இந்திரா காந்தி என்ன செய்தார்? அந்தத் தண்ணீரை ஒரு பாட்டிலில் எடுத்து கிண்டி-யில் உள்ள கிங் இன்ஸ்டி-டியூட்டுக்குப் பரிசோத-னைக்-காக அனுப்பினார்.

பல கொடிய நோய்க் கிரு--மிகள் அதில் இருப்ப-தாகத் தெரிவித்தனர் (ஸிமீஜீஷீக்ஷீ).

உண்மை இவ்வாறு இருக்க, அழுக்கடைந்த நீரை சுத்தப்படுத்த குளோ-ரினைப் பயன்படுத்தினால், தண்ணீரில் புனிதம் கெட்டு-விடும் என்று கூச்சல் போடுகிறார்கள் என்றால் இவர்களின் பம்மாத்தை என்னவென்று சொல்ல! பக்தியின் பெயரால் இந்தப் பயங்கரம்! பக்தர்கள் கொஞ்சம் புத்தியைச் செலவழிக்கக் கூடாதா?


-விடுதலை (13.01.2010) மயிலாடன் எழுதியது

Tamil 10 top sites [www.tamil10 .com ]