வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label அய்யப்பன். Show all posts
Showing posts with label அய்யப்பன். Show all posts

Saturday, December 26, 2009

அய்யப்பன் கோயில் பஞ்சாமிர்தம்.....




அய்யப்பனும் தெய்வமா? மகர சோதியும் உண்மையா? என்ற துண் டறிக்கை வினியோகித்ததாகவும், அதைப் பெற்றுக் கொண்ட வக்கீல் நாகராசன் என்பவர் மனம் புண்பட்டு இதைப் பற்றிக் கேட்டதாகவும் அதில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாகவும், எனக்கெதிராக வழக்கொன்று பதிவு செய்தார். அந்த வழக்கு கடந்த மூன் றாண்டாக எந்தவித முன்னேற்றமும் இன்றி அப்படியே இருக்கிறது.


குற்றப் பத்திரிகை தரவோ, சாட்சி விசாரணையோ ஏதுமின்றி வழக்குத் தள்ளிப் போடப்பட்டுவருகிறது. வாய்தாவிற்கு வாதி பல நாட்கள் வருவதில்லை. அதனாலேயே வாய்தா மாற்றி வைக்கப்பட்டு, வருடங்கள் போய்க் கொண்டே இருக்கின்றன. இவ்வழக்கில் பிரதிக்கு தண்டனை கிடைக்காது, அவரை நீதிமன்றத்திற்கு அலைய விடுவதுதான் தண்டனை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென் றால், துண்டறிக்கை வினியோகம் செய்ததாகச் சொல்லப்பட்ட நாளில், பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்காக சென்னைக்கு நான் இரயிலில் சென்று கொண்டிருந்தேன்.

அய்யப்பப் பக்தரும் வக்கீலுமான ஒருவர் பொய் வழக்குப் போட்டுள் ளார். இதில் ஆச்சரியப்பட ஒன்று மில்லை. ஏனெனில் அவர் குமரி மாவட்ட இந்து முன்னணி பொறுப் பாளர்களில் ஒருவர்.

வாய்தாக்களுக்கு நீதிமன்றத்திற்கு அலைய வைப்பது தான் தண்டனை என அவர் எண்ணிக் கொண்டிருக் கிறார். ஆனால் நானோ வாய்தா நாள்களில் நீதிமன்ற வளாகத்தில், கருப்புச் சட்டைத் தோழர்களுடன் கொள்கை பரப்பும் துண்டறிக்கை வினியோகம், பத்திரிகை சந்தா சேர்த்தல், புத்தக விற்பனை போன் றவற்றை செய்து வருகிறோம். அவர் தண்டனை என்று எண்ணுவதைப் பயனுள்ளதாக மாற்றிவிடுகிறோம் வாழ்வியல் சிந்தனை பயின்று வரும் கழகத் தோழர்கள்.

சென்ற வாய்தாவிற்கு நீதிமன்ற அறையின் முன் நின்று கொண்டி ருந்தபோது எனக்குத் தெரிந்த அன்பர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். நீதிமன்றம் வருபவர்கள் வயதான வரானாலும், நோயாளியானாலும் நிற்கத்தான் வேண்டும். பெண்களெல் லாம் நிழல் உள்ள தரை, படிக்கட்டு களில் அமர்ந்திருப்பதைக் காண வருத்தமாயிருக்-கும்.

அன்பர், மிகவும் நல்ல மாதிரி, வம்பு தும்பு எதற்கும் செல்வதில்லை. அவருண்டு அவரது வியாபாரமுண்டு என்றிருப்பவர். அவரிடம் மெதுவாக, ‘என்ன இங்கு நிற்கிறீர்களே?’ என்று கேட்டேன். அவர், அய்யோ! அதை ஏன் கேட்கிறீர்கள்? என் கடையி லிருந்து மிட்டாய்களை, சுகாதாரத் துறையினர் எடுத்துச் சென்றனர். “சோதனைக்கு பின் அதில் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப் பிடப்படவில்லை என வழக்குத் தொடர்ந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அலைந்து கொண்டி ருக்கிறேன். இது வியாபாரம் நன்கு நடைபெறுகிற நேரம். இங்கு காத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது என வருத்தப்பட்டார்.

மிட்டாய் கம்பெனிகளிலிருந்து வாங்கி, அய்ந்து அல்லது பத்து லாபத் திற்கு விற்கும் கடைக்காரர் மீது வழக் குத் தொடர்வது என்ன நியாயமோ தெரியவில்லை.

இது மாதிரி வழக்குகள் கோயில் பிரசாதத்திற்கு பொருந்தாது போலும். பல கோயில்களில் தின்பண்டங்கள் பிரசாதம் என்ற பெயரில் டின்களில் அடைத்து விற்கப்படுகின்றன. அவற் றில் எதுவுமே குறிப்பிடப்படுவ தில்லை. சுகாதாரத் துறையும் அதனை கண்டு கொள்வதில்லை. கடவுள் மீதுள்ள பக்தியினாலா? பயத்தி னாலா? என்பது தெரியவில்லை.

எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வங்கியில் பணி புரிந்து வருகிறார். அவர் சபரிமலைக்கு, உண்டியல். பணம் எண்ணுவதற்காக அனுப்பப் பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஒரு வாரம் பணி. அதை முடித்து விட்டு வரும்போது அய்யப்பன் பிரசாதம் வாங்கி வந்துள்ளார். அதில் ஒரு டப்பா எங்களுக்கும் தந்தார். அதில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, சரணம் அய்யப்பா, சபரிமலை தேவவஸ்வம் அரவணை பிரசாதம் 250 என டப்பாவின் இரு பக்கங் களிலும் அய்யப்பன் படத்துடன் கூடிய அச்சடித்த தாள் ஒட்டப்பட்டி ருந்தது. அந்த டப்பாவின் பக்கங்கள் மேல் கீழ் என டப்பாவைச் சுழற்றி சுழற்றி பார்த்தேன். ஒரு இடத்தில் கூட தயாரிக்கப்பட்ட நாளோ முடிவுறும் காலமோ, எண்களோ, சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களின் பெயர்களோ எதுவும் இல்லை, எந்த சுகாதாரத்துறை அதிகாரிக்கும் சோதிக்கத் தோன்ற வில்லையே.

பக்தர்களைப் பாதுகாக்க சுகா தாரத் துறை பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. காவல்துறை வேறு கண்ணும் கருத்துமாய் செயல்படுகிறது. ஆனால் தேவஸ்வம் போர்டு விற்பனை செய்யும் தின் பண்டங்கள் பற்றி யாரும் எண்ணிப் பார்க்க வில்லையே.

அய்யப்பப் பக்தர்களை நோய் நொடிகளிலிருந்தும், திருடர்களிட மிருந்தும் விபத்துக்களிலிருந்தும் காப்பாற்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ள அரசு, உணவுப் பண்டங் கள் விற்பனையில் கவனம் செலுத்த வேண்டாமா? ஏற்கெனவே அய்யப் பன் பிரசாதத்தில் ஈ., கரப்பான் பூச்சி கள் கிடந்ததாக குற்றச்சாற்றுகள் உண்டே!

 -விடுதலை ஞாயிறு மலர் 26.12.09 ப.சங்கரநாராயணன் தலைவர், திராவிடர்கழகம்,
கன்னியாகுமரிமாவட்டம் அவர்கள் எழுதியது

Wednesday, December 02, 2009

அய்யப்பனும் - அயோக்கியத்தனமும்!

அய்யப்பனுக்கு அபார சக்தியிருக்கிறது என்றும், அய்யப்பனுக்காக விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை சென்று வந்தால் தீராத நோய்-கள் எல்லாம் தீருமென்றும், தீவினைகள் எல்-லாம் அகலும் என்றும், சதா பிரச்சாரம் செய்தும் குறுந்தகடுகளை வெளியிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.


ஆனால், நடப்பது என்ன? அய்யப்பப் பக்தர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி மரணம் என்கிற பரிதாப செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மாரடைப்பு ஏற்பட்டு பக்தர்கள் சபரிமலையிலேயே மரணம் என்றும் ஏடுகள் செய்திகளைப் போடுகின்றன. போதும் போதாதற்கு அய்யப்பன் கோயிலில், பிரத்தி-யேகமாக உள்ள மருத்துவர்கள் இப்பொழுது அறிக்கையினைக் கொடுத்துள்ளனர்.

இதய நோயாளிகள், ரத்த அழுத்தம், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) பாரம்பரிய இதய-நோய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், 55 வயதுக்குமேல் ஆனவர்கள், சபரிமலை ஏறும்-போது தேவையான முன்னெச்சரிக்கை நட-வடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

பயணத்திற்குமுன் மருத்துவரிடம் பரி-சோத-னை-கள் மேற்கொள்ளவேண்டும். இத-யத்--தின் செயல்பாட்டைத் தெரிந்து-கொண்ட பின்னரே பயணம்பற்றி முடிவெடுக்கவேண்டும்.

அவ்வாறு வரும்போது, வியாதிபற்றிய குறிப்பு--களும், சாப்பிடும் மருந்துபற்றிய குறிப்பு-களும் டைரியில் எழுதிக்கொண்டு வர-வேண்டும்.

மலை ஏறுவதற்கு முன்னர் பம்பையில் அதிக உணவு சாப்பிடக் கூடாது. லேசாக சாப்பிட்டு-விட்டு மலையேறவேண்டும். வயிறு நிறைய சாப்பிட்டால் இதயத்தின் வேலைப் பளு-வும் கூடும். மலை ஏறும்போது நெஞ்சு வலியோ, மூச்சுத் திணறலோ, அசாதாரண நிலையோ ஏற்பட்டால், உடனடியாக மலை ஏறு-வதை நிறுத்தி, மருத்துவர்களின் ஆலோ-சனைகளைப் பெற-வேண்டும். ஏறும்போது நாடித் துடிப்பு நிமிடத்துக்கு 140_க்குமேல் இருக்கக்கூடாது.

மலையேறும்போது அய்கோர்டின் மாத்தி-ரையை அதிகமாக நாக்குக்கு அடியில் வைப்ப--தால் ரத்த அழுத்தம் குறைந்து தலை சுற்றல் போன்றவை ஏற்படும்.

மேலும் வழக்கமாக மருந்து சாப்பிடுபவர்-கள் மலையேறும்போது ரத்தத்தில் சர்க்கரை குறைந்து உடல் தளர்ச்சி ஏற்படலாம். இதற்-காக அவர்கள் கையில் குளுகோஸ் வைத்துக் கொள்ள-வேண்டும்!

இவ்வாறு அய்யப்பன் கோயில் சன்னிதான மருத்துவர் ஹரீந்திரபாபு கூறியுள்ளதாக தினமலரே (1.12.2009) கூறியுள்ளது.

இது முழுக்க முழுக்க அய்யப்பன் சக்தியைக் கேலி செய்வதாக இல்லையா? தன்னை நாடிவரும் பக்தர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியாத கடவுள் அய்யப்பன், சக்தி வாய்ந்தவன் என்றும், பக்தர்களின் குறைகளை, கஷ்டங்களை, நோய் நொடிகளை, பாவங்களைப் போக்குபவன் என்றும் சொல்லுவதெல்லாம் பச்சையான பித்தலாட்டம் அல்லவா?

வில்லாளி வீரனே
வீரமணி கண்டனே,
தாங்கி விடப்பா
ஏந்தி விடப்பா
தூக்கி விடப்பா
ஏற்றி விடப்பா

என்று அய்யப்ப சரணம் பாடிச் செல்லும் பக்தர்-களைக் காப்பாற்றும் சக்தி அய்யப்பனுக்கு இல்லை என்பதைத்தானே சன்னிதான மருத்து-வரின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

எந்தப் பக்தராவது _ இது கடவுளை அவ-மதிக்கும் செயல் என்று சொல்லவில்லையே, ஏன்?

இவற்றையெல்லாம்விட மிகக் கேவலமானது _ அய்யப்பன் பெயரால் நடத்தும் மகரஜோதி பித்தலாட்டம்!

கேரள மின் வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்கள் செயற்கையாக சூடத்தைக் கொளுத்திக் காட்டு-கின்றனர் என்பதை கேரள மாநில முதலமைச்சர், இந்து அறநிலையத் துறை அமைச்சர், அறக்-கட்ட-ளைத் தலைவர், கோயில் தலைமை அர்ச்-சகர் வரை ஒப்புக்கொண்ட பிறகும் மகர-ஜோதியை அனுமதிப்பது எந்த வகையில் சரி?

பக்தியின் பெயரால் எந்தப் பித்தலாட்டத்தை-யும் அரசு அங்கீகாரத்தோடு அரங்கேற்றலாம் என்-றால், பக்தியின் யோக்கிய-தையையும், அரசின் தன்மையையும் தெரிந்துகொள்ளவேண்-டாமா?

கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது விளங்குகிறதா?

விடுதலை தலையங்கம் 02.12.2009

Tamil 10 top sites [www.tamil10 .com ]