வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Wednesday, March 07, 2012

இப்படி இருந்தா, ஆணுக்கு நிகராக பெண்ணுரிமை என்பது முயற்கொம்பே!


உலக மகளிர் தினம் என்றால் கூட.....ஒரு குறிப்பிட்ட பெண்கள் கூட்டம், புதிய பட்டு புடவை கட்டி, தலை நிறைய பூ வச்சுகிட்டு, நகைய மாட்டிகிட்டு......கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து....அலுவலகம் செல்வார்களாம்...இன்னும் சில  பெண்கள், ஒரே கலர் புடவை கட்டிக்கிட்டு ஆபீஸ் வர அறிவுரை சொல்லுது.....இதற்க்கு பெயர் மகளிர் தினமாம்.......இப்படி மகளிர் தினம் கொண்டாடும் பெண்களே...இன்னும் ஏலே ஏழு தலைமுறைக்கு முயற்ச்சித்தாலும் ஆணுக்கு நிகராக பெண்ணுரிமை என்பது முயற்கொம்பே.

இந்த அருமையான தினத்தில் ஆணுக்கு நிகர் சம உரிமை பெற உறுதி கொள்ளுங்கள்.....அடக்கி ஆளும் ஆண் வர்க்கத்தை கேள்வி கேளுங்கள்...அரசியல்,சமுகம், பொருளாதாரம் பற்றிய பகுத்தறிவை வளர்த்துகொண்டு பொது வெளி விவாதங்கள் செய்யுங்கள்.......தந்தை பெரியார் சொன்னது போல, ஆணுக்கு என்ன என்ன உரிமை இருக்கோ அத்துனையும் பெண்ணுக்கும் வேண்டும் என்று உறுதி மொழி எடுங்கள்......

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பெண் குழந்தை இந்த புவிக்கு
வரும்போது எப்படி வரவேற்கிறார் பாருங்கள்...

மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!
மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!

வேண்டா சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
புண்ணிற் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!

தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!

எல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே!

ஒவ்வொரு பெண்களும் புரட்சிகவிஞர் வரிகளை அசை போட்டு அவர் சொன்னது போல புரட்சி பெண்ணாக இருக்க இந்த மகளிர் தினத்தில் உறுதி
எடுங்கள்........எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.


1 comment:

பாண்டியன் said...

72 வயது பெரியவர் - 26 வயது பேத்தி வயதுள்ள பெண்ணை மணம் முடித்ததை ஆதரிப்போர், பிறர் மகளிர் தினம் கொண்டாடுவதை பழிப்பது ஆச்சரியம்மா இருக்கு.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]