வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, December 30, 2011

உண்மை....பொய்

பூமி என்ற நாம் வாழும் கிரகத்திலிருந்து சனி என்ற கிரகம் எவ்வளவு தூரத்தில் உள்ளதென்றால்... 1,321,416,800 கிலோமீட்டர்களாம். அதாவது 132 கோடியே 14 லட்சத்து 16 ஆயிரத்து 800 கிலோமீட்டர். யப்பா...இவ்வளவு தூரத்தில் உள்ளது சனி கிரகம்.

ஆனால், சென்னையிலிருந்து வெறும் 260 கிலோமீட்டர் தூரமே பயணித்து சனி கிரகத்தை அடைந்து விடுகிறான் நம்ம ஊர் ஆள்...காரைக்காலுக்கு 250 கி.மீ அங்கிருத்து 10 கி.மீ திருநள்ளாறு.

அதாவது, நம்மிடம் இருந்து உண்மை 132 கோடி கிலோமீட்டர் தாண்டியிருக்கிறது.....பொய்....அதாவது மூடநம்பிக்கை, அறியாமையானது ரொம்ப பக்கத்தில் 250 கி.மீ. தூரத்திலயே உள்ளது.

----சடங்குகளின் கதை!, அக்னிஹோத்திரம் ராமானுஞ்ச தாத்தாசாரியார்.


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]