வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Friday, November 25, 2011

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு அய்யாவின் அறப்போர் வரலாறு (26-11-1957)

(உலக வரலாற்றில் தந்தை பெரியார் அறிவித்து நடத்திய - ஜாதி ஒழிப்பை முன்னிறுத்தி, அதனைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டம் 1957 நவம்பர் 26 அன்று தமிழ் நாடு முழுவதும் நடைபெற்றது. பத்தாயிரம் பேர் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்- மூவாயிரம் பேர் கைதானார்கள். அந்த நாளையொட்டி (நவம்பர் 26) இந்தக் கட்டுரை இங்கே.)

26-11-1957 இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலே எந்த அரசியல், சமூக, சமய சீர்திருத்தப் போராட்டத் தலைவனும் மேற்கொண் டிராத - உயர்ந்தது - புனிதமானது என்று கதைத்து வந்த இந்திய அரசமைப்புச் சட்ட நகலை எரிப்போம் வாரீர் என்று தன் மானத் தலைவர் தந்தை பெரியார் அறிவு ஆசான் அறைகூவல் விடுத்து மேற் கொண்ட அறப்போர் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு சரித்திர வரலாறு.

17-9-1968 ஆம் ஆண்டு பகுத்தறிவுப் பகலவன் அறிவாசான் பெரியார் விடுதலை நாளிதழ் வெளியிட்ட அவர்தம் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மலரில் எழுதுகையில், எனக்கு ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர் (நாத்திகர்கள்) ஆக வேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. இதற்காகத்தான் காங்கிரஸில் கூப்பிட்ட உடன் சேர்ந் தேன். நான் காங்கிரசை விட்டதற்கும் இதுதான் காரணம்.

ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) எனும் பார்ப்பனரல்லா கட்சியில் சேராமலே அதற்கு நான் ஆதரவளித்ததும் இதற்காகத்தான். ஜஸ்டிஸ் கட்சித் தலைமை ஏற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் இதற்காகத்தான். அக்கட்சியின் தலைமையை ஏற்றவுடன் அக்கட்சியின் கொள்கையாக இம்மூன் றையுமே ஏற்படுத்தி விட்டு அரசியலில் எலெக்ஷனில் (தேர்தல்) நிற்பதில்லை, பதவி ஏற்பதில்லை, பிரவேசிப்பதில்லை என்ற திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டதும் இதற்காகத்தான். காங் கிரஸ் கட்சி பதவியில் இருந்து விலக்கப் பட்ட போதும், பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளியதும் இதற்காகத்தான்.

வெள்ளையன் போனபின்பு 1957இல் நடந்த தேர்தலின் போது கூட நான் காங்கிரசை எதிர்த்து வேலை செய்த போது என் கழகத்தில் இருந்து ஒரு வரைக் கூட நிறுத்தாமல் கம்யூனிஸ்டு களுக்கும், காங்கிரஸ் எதிரிகளுக்கும் ஆதரவளித்துக் காங்கிரசைத் தோற் கடித்ததும் இதற்கு (என்னுடைய மேற் கண்ட கொள்கைகளுக்கு) ஆகத்தான்.

இப்படி வாழ்நாள் முழுமையிலும் 93 ஆண்டுகளும் சாதிப் பேய்க்கு எதிரா கவே, பகுத்தறிவு தழைக்கவே பாடுபட்ட தலைவர் இந்தியாவில் எங்குத் தேடினா லும் பெரியார் அய்யா ஒருவர் தவிர வேறு ஒருவரைக் காண இயலாது. அவருடைய போராட்டங்களின் உச்ச கட்டம்தான் அரசியல் சட்ட எரிப்பு. இது ஏன்?

திராவிடர் கழகத்தின் முதலாவது கொள்கை ஜாதியை ஒழிப்பது. சுதந்திரம் வந்து இன்றைக்குப் பத்து வருஷமா கின்றன. இது ஒழிவதற்குப் பதிலாக மேலும் மேலும் பலப்பட்டு வருகிறது. எங்களுடைய முயற்சிக்கு ராசகோபாலாச் சாரி முதல் எல்லோரும் எதிரிகள். நாங்கள் இதை எளிதில் ஒழிக்க முடியு மென்று எண்ணினோம். பிராமணாள் என்று போர்டு (பெயர்ப்பலகை) போடக் கூடாது; பார்ப்பான் மணியடிக்கிற கோவிலுக்குப் போகக் கூடாது என்று திட்டங்களை வைத்து முதல் திட்டத் திற்குக் கிளர்ச்சியை ஆரம்பித்தோம். இன்றைய தினம் வரை 650 பேர் சிறைக்குப் போயிருக்கிறார்கள்.

இந்தக் கிளர்ச்சி இந்த அளவிற்குப் பலப்பட்ட பின்பும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று யோசித்தேன். ராசகோபாலாச்சாரி சொன்னார். நாங்கள் எப்போது சொன்னோம். ஜாதி ஒழியவேண்டுமென்று எங்கே சொன் னோம்? என்றார். உடனே நான் ஏதோ சூது இருக்கிறது என்று அரசமைப்புச் சட்டத்தை வாங்கிப் பார்த்தேன்.

அதில் அடிப்படை உரிமைகள் தந்திருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு வனுக்கும் அவனுடைய ஜாதியை, மதத் தைக் காப்பாற்ற உரிமை தந்திருக்கின் றான். ஒருவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்ளலாம். பிராமணன் என்ற தன்மையில் வாழலாம். அதைக் காப்பாற்றித் தர அரசாங்கம் உத்திரவாதம் அளித்திருக்கிறது.

இந்தச் சட்டம் இருக்கிறவரை ஜாதியைக் காப்பாற்ற அரசமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கும் வரை,நம்முடைய நிகழ்ச்சி எந்த வகையில் பயன்படும் என்று கேள்வி கேட்ட அறிவு ஆசான், நம்முடைய சூத்திரத்தன்மை என்றுமே இருப்பதா? இந்தக் காலத்தில் கூட இந்தத் தன்மையை மாற்றும் முயற்சியில் ஈடுபடாமல் இருப்பதா? என்று வினா எழுப்பியதோடு நின்றுவிடவில்லை.

8-10-1957 இல் வலங்கைமானில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் - தம் சொற்பொழிவில் முதல் போராட்ட அணுகுண்டை ஆகவே இந்த நிலையில் ஜாதியை ஒழிக்க அரசமைப் புச் சட்டத்தை, ஜாதியை, மதத்தைக் காப்பாற்றுகிற சட்டத்தைக் கொளுத்தப் போகிறேன் என்று அறிவித்த அவர், ஜாதி ஒழியவேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தூக்குக் கயிற்றுக்கு உங்களைத் தயாராக் கிக் கொள்ளுங்கள்.

இளைஞர்களா கியிருப்பவர்கள் இரத்தத்தில் கையெழுத்து போட்டு அனுப்புங்கள் என்றவர். ஏதும் செய்யாமல் நாம் எவ்வளவு காலம் சும்மா யிருப்பது? உங்களுடைய தைரியத்தை, வீரத்தை அறிந்துதான் நான் எதையும் செய்கிறேன். நம்முடைய இன இழிவைப் போக்க வீட்டிற்கு ஒரு பிள்ளை வாருங் கள் என்றார்.

இந்த முடிவுக்கு - அரசியலமைப்புச் சட்டத்தையே கொளுத்தும் முடிவிற்கு அவர் சென்றது, வந்தது ஏன்? ஜாதி ஒழிப்புக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டிய அளவுக்குச் செய்தாய்விட்டது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் எல்லோ ரும் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும், ஒத்துக் கொண்டவர்களும் வெளிப்படை யாகச் சொல்ல வாய்ப்பில்லை என்றாலும், ஜாதியொழிப்பை எதிர்க்க ஆளில்லை. 100-க்கு 97 பேரைப் பற்றிய காரியமாக உள்ளதால் ஜாதி ஒழியவேண்டுமென் பதற்கு எதிர்ப்புக் கிடையாது.

--- கட்டுரையாளர் முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், விடுதலை,25-11-2011

(தொடரும்)


No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]