வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, November 25, 2010

தியாகராயர் அரங்கில் வேட்டுச் சத்தம்!

நாட்டைப் பீடித்த 5 நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்று தந்தை பெரியார் சொன்னாலும் சொன்னார் - அதனை நாள்தோறும் மக்கள் அனுபவித்துத் தீர வேண்டிய கட்டத்துக்குள் தள்ளப்பட்டு விட்டனர்.

யாரை வேண்டுமானாலும் இந்தப் பத்திரிகைப் பிர்மாக்கள் விமர்சிக்கலாம் - களிமண்ணைக் கடவுள் என்று கூறலாம்; கடலை வாய்க்கால் என்று வருணிக்கலாம். கூழாங்கல்லைக் கோமேதகம் என்று கூசாமல் சொல்லலாம் - கோமேதகத்தின் மீது எச்சில் துப்பலாம்.

கொலை வழக்கில் சிக்கிய ஆசாமியை ஜெகத்குரு என்று எழுதுவதற்கு அவர்கள் வெட்கப்படுவதில்லை. ஆனால், எந்தவிதத் திலும், எந்த ஆவணத்திலும் ஆ.இராசா குற்றம் புரிந்தவர் என்று சொல்லப்படாத நிலையில், ஸ்பெக்ட்ரம் ராஜா என்று முத்திரை குத்தி, பதவியைப் பறித்து மூலையில் ஒதுக்குவதற்கு முண்டியத்துக் கொண்டு நிற்பதைப் பார்க்க முடிகிறது.

இப்படி யாரையும் எடுத்தேன் - கவிழ்த் தேன் என்று விமர்சிக்கும் பத்திரிகைகள், மின்னணு ஊடகங்கள் எல்லாம் உத்தமப் புத்திர சிகாமணிகள்தானா? ஊழல் என்பதை ஊறுகாய் அளவுக்குக் கூடத் தொட்டுக் கொள்ளாதவர்கள்தானா?

ஜாதி உணர்வுக்கு அப்பாற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களா? முதலாளிகளின் கையு றையாக இருக்க மறுப்பவர்களா?

இந்தக் கேள்விகள் இப்பொழுது மக்கள் மத்தியில் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்து விட்டன.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச் சராகவிருந்த ஆ.இராசா விடயத்தில் ஊட கங்கள் நடந்துகொண்டுவரும் முறைகளைப் பார்த்ததற்குப் பிறகு - சாமான்ய மக்கள்கூட ஊடகங்கள் மீது வெறுப்பு நெருப்புத் துண்டு களைக் கக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

இந்தப் பிரச்சினையில் ஊடகங்கள் நடந்து கொள்ளும் கீழிறக்கத்தைக் கண்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கூறும் அளவுக்கு ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும் குப்பைத் தொட்டிகளாகி விட்டன.

ஊடகத்துறையை விமர்சிக்க முடியுமா? அப்படி விமர்சித்தால் அவர்களின் சாபத்துக் கும், சக்ராயுதத்துக்கும் பலியாக நேரிடுமே என்று எண்ணியிருந்த அச்ச மாயையை தமிழ் ஊடகப் பேரவைக் கிழித்து எறிந்துவிட்டது.

பத்திரிகைத் துறை என்பதும் ஒரு தொழில்தான் - அதிலும் ஏராளமான உருட்டல் - புரட்டல்கள், ஊழல் குப்பைகள் - உள் குத்துகள், முதுகுக் குத்துகள், கையுறைக் கையூட்டுகள் அச்சுறுத்திப் பணம் பறிப்புகள் (பிளாக் மெயில்) முதலாளிகளின் முகவர்கள் (ஏஜெண்ட்) மதத் தலைவர்களின் பினாமிகள் என்று ஏராளம் உண்டு.

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகார வர்க்கத்துடன் உறவுகொண்டு, சிங்களவர்களின் ஏஜெண்டுகளாகப் பணி யாற்றி, அவர்கள் கொடுக்கும் சன்மான எச்சில் மூலம் மாட மாளிகைக் கட்டி வாழ்ந்து வருப வர்கள் யார்?

தமிழர்களைக் காட்டிக் கொடுத்து அவர்களின் ரத்தத்தையே சந்தனமாகக் குழைத்துத் தடவிக் கொண்டிருக்கும் பத்திரி கையாளர்கள்பற்றி அறியமாட்டோமா?

இதுவரை மற்றவர்களைப் பற்றி விமர் சிக்கும், சேறு வாரி இறைக்கும் இந்தப் பத் திரிகை உலகம் - விமர்சனத்துக்கு அப்பாற் பட்டதல்ல - விமர்சிக்கலாம் - நன்றாகவே விமர்சிக்கலாம் - நார் நாராகவும் கிழிக்கலாம் என்ற ஒரு தைரியத்தை தமிழ் ஊடகப் பேரவை ஊட்டிவிட்டது! (வாழ்க தமிழ் ஊடகப் பேரவை!).

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் அரங்கத்தில் தமிழ் ஊடகப் பேரவையின் சார்பில் ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. (24.11.2010 மாலை). ஆ. இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற தலைப்பில் தமிழ் ஊடகப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பொதுக்கூட்டத்திற்குத் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளரும், விடுதலை ஆசிரியரு மான (48 ஆண்டுகாலம் விடுதலையின் ஆசிரியர்) மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

இப்படி ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற விளம்பரம் வந்தது முதல் மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பும், எதிர்பார்ப்பும் இருந்தன. குற்றமுள்ள ஊடகக்காரர்கள் மத்தியில் ஒரு சொர சொரப்பும், குருதிக் கொதிப்பும் இருந்ததாகக் கேள்வி.

மாலை 6.30 மணிக்குக் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாலை 5 மணிக்கே அரங்கம் நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டது. இந்த மன்றத்தில் இதுவரையிலும் இந்த அளவு மக்கள் திரள் நிரம்பி வழிந்ததில்லை என்பது பத்திரிகையாளர்களின் கணிப்புக்கூட.

ஒரு பரபரப்போடு பல்துறைப் பெருமக்கள் கூடியிருந்தனர். தமிழ் ஊடகப் பேரவையின் நோக்கம் குறித்தும் கடந்த ஏழ ஆண்டுகாலத் தில் அதன் செயல்பாடுகள் குறித்தும், அதன் நிறுவனரான வளர்தொழில் ஆசிரியர் க. ஜெயகிருட்டிணன் தம் வரவேற்புரையில் எடுத்துக் கூறினார்.

மாதந்தோறும் இவ்வமைப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது - பல்வேறு பொதுப் பிரச் சினைகள் குறித்து விவாதங்கள், சிறப்புரை கள், காட்சி உரைகள் நிகழ்த்தப்பட்டு வந்திருக் கின்றன.

பத்திரிகையாளர்கள் மட்டத்தில் இருந்த இந்தப் பேரவையின் செயல்பாடு மக்கள் மத்தியில் இப்பொழுதுதான் முதன்முதலில் வெளிவந்திருக்கிறது - இனியும் வரும் என்று வரவேற்புரையில் தோழர் செயகிருட்டிணன் குறிப்பிட்டார்.

ரமேஷ் பிரபா

சன், கலைஞர் தொலைக்காட்சிகள்மூலம் நன்கு அறியப்பட்ட தோழர் ரமேஷ் பிரபா, தொலைக்காட்சியில் அவர் மேற்கொண்டு வரும் இயல்பான யதார்த்தமான மொழியில் சில கருத்துகளையும், தகவல்களையும் பதிவு செய்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போகிறீர்களா? அதன் பாரதூர விளைவுகள் பற்றி யோசித்தீர்களா? என்று தம் நண்பர்கள் எழுப்பிய வினாக்களுக்கு எடுத்த எடுப்பி லேயே விடை பகன்றார்.

இதில் கலந்துகொள்வதால் என்னாகும் என்று நினைப்பது - யோசிப்பது - தயங்குவது என்பது வியாபாரக் கணக்காகும். இதில் கலந்துகொள்ளவேண்டும், நம் கடமையைச் செய்யவேண்டும் என்று நான் முடிவு செய்தது - நியாய உணர்வு - இன உணர்வு ஆகும் என்று அவர் சொன்னபோது மண்டபமே அதிரும் அளவுக்கு அப்படியொரு கையொலி!

(எல்லாவற்றையும் ரூபாய் அணா கண்ணோட்டத்தில் பார்த்துப் பாழாய்ப் போகும் இனவுணர்வற்ற தமிழர்கள் - ரமேஷ் பிரபாவின் இந்தப் பொறிதட்டும் உணர்வுக்குப் பிறகாவது, தங்கள் தங்கள் உடம்பைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்கொண்டு ரோஷம் பெறுவார்களாக!)

ஆ.இராசாமீது சொல்லப்படும் குற்றச்சாற்று ஒரு யூகத்தின் அடிப்படையில் கற்பனைக் குதிரையின்மீது சவாரி செய்யும் அற்பக் குற்றச்சாற்று என்பதற்கு ரமேஷ் பிரபா மாந்தோப்புக் கிளி திரைப்படத்திலிருந்து சுருளிராஜனின் விகடத்தை எடுத்துக் காட்டினார்.

பள்ளிக்குச் செல்லும் தன் மகனுக்குப் பேருந்து செலவுக்காக 5 ரூபாய் கொடுத்தார் அவனின் அப்பா.

மாலையில் பள்ளியிலிருந்து வந்த மகன் அப்பாவைப் பார்த்து அப்பா நீ கொடுத்த 5 ரூபாயை மிச்சப்படுத்தி விட்டேன் என்றான். என்னடா கதை விவரமாகச் சொல்லு என்றார் அப்பா.

நான் பேருந்தில் பயணம் செய்யாமல் பேருந்தின் பின்னாலேயே ஓடி பள்ளிக்குப் போய்விட்டேன் - 5 ரூபாய் மிச்சம் என்றான் மகன்.

அட மடையனே, பேருந்தின் பின்னால் ஓடாமல் ஆட்டோவின் பின்னால் ஓடியிருந்தால் 50 ரூபாய் மிச்சப்பட்டு இருக்குமே! (பலத்த சிரிப்பு) என்று சுருளிராஜன் சொல்லுவார். அந்தக் கதைதான் 2ஜி ஸ்பெக்ட்ரமில் இராசா ஊழல் செய்தார் என்பது என்று எடுத்துக் காட்டியது சுவையானது என்பதைவிட சுருக்கென்று புரிய வைக்கக் கூடியதாகும்.

மின்னணு ஊடகக்காரர்கள் கடைப்பிடிக்கும் சில வழிமுறைகளை - அத்துறையில் அவருக்கு அளப்பரிய அனுபவத்தின் காரணமாக எடுத்துரைத்தவர்.

தமிழ்த் தொலைக் காட்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்த சில செய்தியைத் திடீரென்று போடும்போது முக்கிய செய்திகள் என்று போடுவோம். ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் என்று போடுவார்கள். அதன் உண்மையான பொருள் பெரும்பாலும் உண்மைகளைத் தகர்ப்பதாகவே இருக்கும்.

ஆங்கில தொலைக்காட்சிகளில் பேட்டி காண்போர் கடைபிடிக்கும் ஒரு தந்திரம் - அதனையும் அம்பலப் படுத்தினார்.

யாரிடம் பேட்டி காண்கிறார்களோ, அவர்களைப் பெரும்பாலும் பேசவிடுவதில்லை. பாதி வார்த்தையைப் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கே இடையில் புகுந்து, மடக்குவதுபோல வேறு விஷயத்துக்குச் சென்று திணற வைப்பதுதான் அவர்களின் நோக்கம். கூடுமான வரை அடுத்தவர்களைப் பேச வைப்பதில்லை. மாறாக, இவர்களின் கேள்விகள்தான் ஆதிக்கம் செலுத்தும்.

முதலில் இதனை முறியடிக்க வேண்டும் - கேள்வி கேட்பவர்களைத் திருப்பிக் கேள்வி கேட்டுத் திணற அடிக்கவேண்டும். அந்த நிலை ஏற்பட்டால்தான் அவர்கள் அடங்குவார்கள் (நுனி நாக்கு ஆங்கிலம், மூச்சு முட்டப் பேசும் திறன் உள்ளவர்கள்தான் அறிவாளிகள் என்று நினைக்கும் அப்பாவித் தனத்திற்கும், மூடத்தனத்துக்கும் முடிவு கட்டவேண்டும்).

எல்லோரிடமும் இதே பாணியில் நடந்துகொள் கிறார்களா? தங்களுக்கு வேண்டியவர்கள் அல்லது தங்களுக்குச் சாதகமானவற்றை வரவழைக்கவேண்டும் என்று நினைத்து வேறு சிலரிடம் பேட்டி காணும்போது, எவ்வளவுப் பவ்யமாக அமர்ந்து, அவர்கள் கூறுவதைக் கடைசிவரைக் கேட்டு, அடுத்த கேள்விக்குப் போகிறார்கள். இது என்ன பத்திரிகை தர்மம்?

இன்னொரு தகவல் தோழர் ரமேஷ் பிரபா கூறியது கோடிட்டுக்கொண்டு படிக்கவேண்டியதாகும்.

ஒருவரைப்பற்றி செய்தி சொல்லும்போது, பக்கத்தில் அதற்குச் சம்பந்தமேயில்லாத வகையில் சம்பந்தப்பட்டவர் சாப்பிடுவது, நடப்பது, மூக்கு நோண்டுவது வரை படங்களாக (விஸுவல்) காட்டுவது நாகரிகமும் அல்ல - நேர்மையானதும் அல்ல - விஷமத்தனமானது.

இன்னொன்று, அமைச்சர் ஆ.இராசா டில்லியிலிருந்து ஊருக்கு வருவதை எப்படி செய்தியாக்குகிறார்கள்? ராஜா எஸ்கேப்!

ராஜா எஸ்கேப் ஆகி வெளிநாடு சென்றுவிட்டாரா? தலைமறைவாகி விட்டாரா? ஏனிந்த கேவலமான பிரச்சாரம்? ஒருவரை அசிங்கப்படுத்தவேண்டும் என்று அந்த வட்டாரம் நினைத்துவிட்டால், எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கீழ்த்தரப் புத்திதானே இதில் நெளிகிறது?

(கொலை வழக்கில் சிக்கிய சங்கராச்சாரியார்பற்றி செய்தி ஒளிபரப்பியபோது அவர் நடப்பது, சாப்பிடுவது, கைப்பேசியில் பேசுவது (யாருடன் பேசினார் என்பதெல்லாம் ஊருக்கே தெரியும்!) என்பது போன்ற காட்சிகளைக் காட்டியதுண்டா?)

ஓர் அரிய புள்ளி விவரம்:

ரமேஷ் பிரபா சொன்ன ஒரு புள்ளி விவரம் ஒரு புதிய உலகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

பல விஷயங்களை நாம் தெரிந்துகொண்டு இருப்ப தாகப் பாவலா செய்து கொண்டிருக்கிறோம் - உண்மை வேறு விதமானது என்பதற்கு இந்தப் புள்ளிவிவரம் அத்தாட்சி.

ஆங்கிலத் தொலைக்காட்சியில் வந்துவிட்டால் போதும், அதற்குமேல் என்ன வேண்டியிருக்கிறது? என்ற மனப்பான்மை இருப்பதுண்டு.

உண்மையிலேயே இந்த ஆங்கிலத் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்கள் யார் - எத்தனைப் பேர் என்கிற புள்ளி விவரத்தை (கூசுஞ) அவிழ்த்துக் கொட்டினார்.

உதாரணத்துக்குச் சில:

சி.என்.என். அய்.பி.என். மும்பையில் பார்ப்போர் 0.24

கொல்கத்தாவில் 0.06

டில்லி 0.21

சென்னை 0.03

பெங்களூரு 0.11

அய்தராபாத் 0.17

சராசரி விகிதம் 0.16.

என்.டி.டி.வி.

மும்பை 0.16

கொல்கத்தா 0.11

டில்லி 0.13

சென்னை 0.14

பெங்களூரு 0.07

அய்தராபாத் 0.06

சராசரி சதவிகிதம் 0.12

டைம்ஸ் நவ்

மும்பை 0.08

கொல்கத்தா 0.08

டில்லி 0.09

சென்னை 0.33

பெங்களூரு 0.19

அய்தராபாத் 0.12

சராசரி 0.13

இந்தப் புள்ளி விவரங்கள் உணர்த்துவது என்ன?

ஒரு சதவிகிதம் கூட இந்த ஆங்கிலத் தொலைக் காட்சிகளைப் பார்ப்பவர்கள் கிடையாது.

ஆனால், இவர்கள்தான் மக்கள் மத்தியிலே கருத்துத் தாக்கத்தை உருவாக்கக் கூடியவர்களாக இருக் கிறார்கள். தங்கள் கருத்தை மக்களிடம் திணிக்கிறார்கள்.

இவற்றை முறியடிக்கும் வகையில் ஓர் ஊடகம் நம் கைகளில் இருந்தால் ஒழிய, இந்த நச்சுத்தன்மையை நம்மால் முறியடிப்பது மிகவும் கடினமாகும்.

இந்த ஆங்கிலத் தொலைக்காட்சிகள் வெறும் செய்தியை மட்டும் வெளியிடுபவை. வேறு நிகழ்ச்சிகள் கிடையாது. விளம்பர வருமானங்களும் குறைவு. பெரும் பாலும் நட்டத்தில்தான் இயங்குபவை. ஆனாலும், இவர்களால் இவற்றை நடத்த முடிகிறது என்றால், அது எப்படி? இவர்களின் பின்ப(பு)லத்தில் இருப்பவர்கள் யார்? முதலாளிகள்! முதலாளிகள்! முதலாளித் திமிங் கலங்கள்!!!

அப்படியென்றால், இதன் பொருள் இவர்கள்தம் முதலாளிகளின் குரலை (ழளை ஆயளவநச ஏடிஉந)த்தான் ஒலிக்கிறார்கள். அதனை மக்கள் கருத்தாக மாற்ற முயலுகிறார்கள் என்பதுதானே உண்மை!

புதன் மாலை தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இந்தச் சிறப்புக் கூட்டம் படித்தவர்களையும் கண் திறக்கச் செய்து விட்டது - பாமர மக்கள் மத்தியிலும் உண்மைகளைக் கொண்டு செல்ல அவசியமான முயற்சிகள் தேவை என்பதையும் வலியுறுத்துகிறது. மக்களைச் சுற்றி ஓட்டை விழுந்த ஓசோன்கள்

ஆபத்தான ஆரிய வலைப் பின்னல்கள்! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

(தொடரும்)----- விடுதலை, மின்சாரம் (25-11-2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]