வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, July 12, 2010

கோடிக்கணக்கான மக்களை மூடத்தனத்தில் மூழ்கடிப்பது எந்த வகையில் நியாயம்?

 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் மூட நம்பிக்கைகள் எப்படி புகுந்து விளையாடுகின்றன. ஏதோ ஆக்டோபஸாம்; அதற்குப் பால் என்று பெயராம். அது ஆரூடம் கூறுகிறதாம் _ அது பலிக்கிறதாம்.

ஜெர்மன் ஆக்டோபசுக்குப் பதில் இப்பொழுது ஆலந்தில் ஒரு குட்டி ஆக்டோபஸ் கிளம்பியிருக்-கிறது. அந்தப் பெண் ஆக்டோபசுக்குப் பாலின் என்று பெயராம்.

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெறும் என்று பால் ஆக்டோபஸ் கூறியுள்ள நிலையில், இந்த ஆலந்து பாலின் ஆக்-டோபஸோ ஆலந்துதான் வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறது.

போதும் போதாதற்கு இப்பொழுது கிளிகளும் இந்தக் கோதாவில் குதித்துள்ளன.

சிங்கப்பூரைச் சேர்ந்த 13 வயது பச்சைக்கிளி உலகக் கால்பந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெறப் போவது ஆலந்துதான் என்று கூறியுள்ளது.

ஸ்பெயின் நாட்டு மக்களும், ஆலந்து நாட்டு மக்களும் மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் இணைந்த கலவையில் உறைந்துவிட்டனராம். இரு நாட்டு விளையாட்டு வீரர்களின் உளவியலைப் பாதிக்கச் செய்யும் இந்த மூடத்தனத்தை ஊடகங்கள் பெரிதுபடுத்திக் காட்டுவது மகாமகா வெட்கக்கேடு.

இப்பொழுது சென்னையில் எலி ஒன்று ஆரூடம் கூறியுள்ளதாம் _ போகிற போக்கைப் பார்த்தால் நாய் ஆரூடம், பன்றி ஆரூடம், கழுதை ஆரூடம் என்று மூலைக்கு மூலை கூவிக் கூவி ஆரூடம் சொல்லுவார்கள் போலும்.

தேர்தல் உள்பட, காந்தியாரின் ஆயுள் உள்பட மனிதர்கள் சொன்ன ஆரூடங்கள் எல்லாம் மண்-ணைக் கவ்விய நிலையில், இப்பொழுது பிராணி-களை-யும், பறவைகளையும் கட்டிப் பிடித்து அலைகிறார்கள்.

இந்து போன்ற ஏடுகள் இதுபோன்ற மூடத்-தனத்தை முதல் பக்கத்தில் போட்டு முக்கியத்துவம் கொடுக்கின்றன. தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இந்த முட்டாள்தனத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்றன.

இந்த ஊடகங்கள் எல்லாம் அறிவியல் கண்டு-பிடித்த சாதனங்களே அல்லாமல், எந்த ஆரூடப் புலிகளாலும், ஜோதிட (அ)சிங்கங்களாலும், பாபாக்-களாலும் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. இவற்றிற்கு அறிவு நாணயம் இருந்திருக்குமேயானால், அறிவியலுக்கு விரோதமான குப்பைகளை அறிவியல் சாதனங்களின்மூலம் பரப்புரை செய்வார்களா?

விளையாட்டு என்பது வீரர்களின் திறமை, உழைப்பு, சாதுர்யம் இவற்றைச் சார்ந்தது. இதனைக் கொச்சைப்படுத்தும் வண்ணம், சிறுமைப்படுத்தும் வண்ணம் இப்படி நடந்துகொள்வதைக் கண்டிக்க திராவிடர் கழகத்தைத் தவிர_ விடுதலையைத் தவிர யாரும் முன்வரவில்லையே!

உலகக் கால்பந்து போட்டிபற்றி சங்கொலியில் அறிக்கை வெளியிட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செய-லாளர் திரு. வைகோ, இந்த ஆக்டோபஸ் கணிப்-பையும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஓர் இடத்தி-லாவது இது மூடத்தனம் _ விளையாட்டுத் துறை-யில்கூட இதனைத் திணிப்பதா என்று குறிப்பிடவேயில்லை.

1994 ஆம் ஆண்டில் உலகக் கோப்பைக் கால்பந்து காலிறுதிப் போட்டியில் சுவீடனும், ருமேனியாவும் மோதின. ஆட்ட நேர இறுதியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் போட்டு சம நிலை அடைந்தன. கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டபோதும், அதே நிலைதான்; பெனல்டி முறையிலும் தலா நான்கு கோல்கள் போட்டன; சடன் டெத் முறை கடைபிடிக்கப்பட்டதில் சுவீடன் வெற்றி பெற்றது. அப்பொழுது ருமேனியாவின் அணித் தலைவர் ஜியார்ஜி ஹாஜி, வெற்றிக்காக நாங்கள் செய்த பிரார்த்தனை பலிக்கவில்லை. கடவுள் சுவீடன் பக்கம் இருந்துவிட்டார் என்றார்.

தன்னம்பிக்கையற்றவர்கள், மூடநம்பிக்கை-யாளர்கள் விளையாட்டு வீரர்களாகவும் இருந்தால், எப்படி வெற்றி பெற முடியும்?

திருஷ்டம் என்றால் பார்வை; அதிருஷ்டம் என்றால் பார்வையற்ற குருடு என்று பொருள். அதிருஷ்டம் அடிக்கவில்லை என்றால், அதன் பொருள் குருடாகவில்லையே என்று ஏங்குவதாகும்.

இப்பொழுது, இறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், பால் ஆக்டோபஸ் ஆரூடம் சரியாயிற்று என்று ஆட்டம் போடலாம். ஆனால், பாலின் மற்றும் பச்சைக் கிளி ஆகியவற்றின் ஆரூடம் பொய்த்தும் போயினவே! அதற்கு என்ன சொல்வார்கள்?

போட்டி என்றால் வெற்றி, தோல்விகள் இயல்பு. அணிகளின் திறமை மற்றும் விளையாட்டின் பொழுது அமையும் சூழல் முடிவை நிர்ணயிக்கும். அதில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது என்பதைப் பயன்படுத்திக் கொண்டு கோடிக்கணக்கான மக்களை மூடத்தனத்தில் மூழ்கடிப்பது எந்த வகையில் நியாயம்?

--------- விடுதலை தலையங்கம் (12.07.2010) 

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]