வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label Richard Dawkins. Show all posts
Showing posts with label Richard Dawkins. Show all posts

Monday, December 28, 2009

"கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’’ (The God Delusion by Richard Dawkins)

“கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’’ (The God Delusion by Richard Dawkins) என்ற ஒரு அறி-வியல் பூர்வமான அற்புத நூலை ரிச்சர்டு டாகின்ஸ் என்ற ஆக்ஸ்போர்டு பல்-கலைக் கழகப் பேராசிரி-யர் மிகச் சிறப்பாக எழுதியிருக்கின்றார்.


இந்த நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளி-யிடுவதற்கு ரிச்சர்டு டாகின்ஸ் அவர்களிடமி-ருந்து நமது இயக்கத்தின் சார்பில் அதிகாரபூர்வ-மான அனுமதியைப் பெற்று இன்றைக்கு நாம் இந்த இந்திய பகுத்தறி-வாளர்கள் மாநாட்டில் வெளியிட்டிருக்கின்றோம். அதற்காக ரிச்சர்டு டாகின்ஸ் அவர்களுக்கு இந்த மாநாட்டு நிகழ்ச்-சியின்மூலமாக நமது முதலாவது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்-றோம்.

ரிச்சர்டு டாகின்ஸ் அவர்களுக்கும், நமக்கும் நேரடியாக அறிமுக-மில்லை. இந்த நூலுக்கு மொழி பெயர்ப்பு அனு-மதியை டாக்டர் இன்-னய்யா அவர்களது மூல-மாகத்தான் பெற்றோம். அவருக்கும் இந்த நிகழ்ச்சி-யின் மூலமாக நமது இயக்கத்தின் சார்பிலே நன்றியறிதலை தெரிவித்-துக் கொள்கின்றோம்.


ரிச்சர்டு டாகின்ஸ் ஆங்கில நூலை தமிழில் மொழி பெயர்த்த பேரா-சிரியர் கு.வெ.கி. ஆசான் அதேபோல அவருக்கு உதவியாக இருந்த கு.வெ.கி. ஆசான் அவர்களின் வாழ்விணையர் திருமதி சாரதா மணி அவர்க-ளுக்கும், அதேபோல மொழி பெயர்ப்புக்கு உதவிய சென்னை பல்-கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் அ.இளங்கோவன் அவர்களுக்கும் இந்த நேரத்திலே நமது நெஞ்-சம் நிறைந்த பாராட்டு-தல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் (கைதட்-டல்). இந்த நூலை ஏறத்-தாழ ஒன்றரை ஆண்டு-களில் மொழி பெயர்த்தி-ருக்கிறார்கள்.

நூலில் மட்டுமல்ல, கருத்திலும் கனம்

கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற நூல் எடையில் கனமோடு இருப்பது மட்டுமல்ல, கருத்தாழத்திலும் கன-மான மிகச் சிறந்த அறி-வியல் நூல். ஏறத்தாழ 583 பக்கங்களைக் கொண்ட நூல்.

நாத்திகக் கருத்துகளின் தொகுப்பு இந்த நூல். இந்த நூலில் நாத்திகக் கருத்துகளை முக்கிய அறிஞர் பெருமக்கள் யார் யாரெல்லாம் சொல்லி-யிருக்கிறார்கள் என்பது இடம் பெற்றிருக்கிறது.

மேலும்  http://www.fixed-point.org/index.php/video/35-full-length/164-the-dawkins-lennox-debate

(ஆசிரியர் அவர்கள் வெளியிட்டு ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

Tamil 10 top sites [www.tamil10 .com ]