வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label பெரியார்-ஆரியர்-திராவிடர்-எம்.ஜி.ஆர்-அண்ணா. Show all posts
Showing posts with label பெரியார்-ஆரியர்-திராவிடர்-எம்.ஜி.ஆர்-அண்ணா. Show all posts

Sunday, July 10, 2011

அக்கிரகாரம் அ.தி.மு.க வை திராவிட இயக்கத்தில் இருந்து பிரித்து மோதவிடுகிறது. அதன் நிலை என்ன?

பார்ப்பனர்களுக்குப் பதிலடி! பிரித்தாளும் நரியே,போற்றி!      
பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற சதிகாரத் தலைவர் இப்பொழுது திருவாளர் சோ ராமசாமி அய்யர்தான். அவருடைய துக்ளக் இதழும் பார்ப்பன சங்கத்தின்  அதிகார பூர்வமற்ற வார இதழாக வெளி வந்து கொண்டிருக்கிறது.
தமிழக அந்தணர் வரலாறு என்னும் நூலை எழுதிய கே.சி. இலட்சுமிநாராயணன் என்ற பார்ப்பனர், தேசத் துரோக அமைப்பு எனும் தலைப்பில் நீதிக்கட்சியையும் திராவிட இயக்கத் தையும், அதன் ஒப்புயர்வற்ற தலைவர் களையும் கொச்சைப்படுத்தி எழுதும் தொடர் ஒன்றை துக்ளக்கில் (6.7.2011) தொடங்கியுள்ளார். எடுத்த எடுப் பிலேயே பார்ப்பனர்களுக்கே உரித்தான பிரித்தாளும் நரித் தந்திரம்!

திராவிட இயக்கத்தைப் பற்றித் தாக்க ஆரம்பித்தால், அண்ணா என்ற பெயரையும்,  திராவிட என்ற சொல்லை யும் தாங்கியுள்ள அண்ணா தி.மு.வையும் சேர்த்துத் தாக்குவதாக ஆகிவிடுமே -அது கூடாதே, - தங்கள் இனத்தைச் சேர்ந்த ஜெயலலிதா அம்மையாரைக் காப்பாற்ற வேண்டுமே, தூசு ஒன்று அவர் மேனியில் விழுந்துவிடலாமா என்பதில் சர்வ ஜாக்கிரதையாக இருக் கக் கூடியவர்களாயிற்றே! அதற்காக என்ன ஜாலம் தெரியுமா?

எம்.ஜி.ஆர்.நிறுவிய அ.இ.அ.தி.மு.க. வைத் திராவிடக் கட்சிகளில் ஒன்றாகக் கருதுவது சரியல்லவாம்.

ஹிட்லர் ஒரு பாவமும் அறியாத யூதர்களைக் கொலை செய்தைப் போல் குற்றமற்ற பிராமணர்களைத் துவேஷிப் பது திராவிடக் கட்சிகளின் தலையாய தீய குணாம்சங்களில் ஒன்று. இந்தக் குணம் எம்.ஜி.ஆரிடம் சிறிதுகூடக் கிடையாது.

தனித்திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவதாக 1963 ஆம் ஆண்டில் அறிவித்த பிறகும்  இன்று வரையில் தமிழ்நாட்டில் பிரிவினை இயக்கங் களுக்கு நேரிடையாகவும், மறைமுக மாகவும் ஆதரவு அளித்து வருவது திராவிடக் கட்சிகளின் மற்றொரு குணாம்சம். இந்தக் குணாம்சம் எம்.ஜி.ஆரிடம் காணப்பட்டதில்லை.

இவர்களின் பகுத்தறிவுக்குப் பொருந்தாதவை என்று சொல்லப்படும் இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்களின் பண்டிகைகளையும், சம்பிர தாயங்களையும் தயக்கம் இல்லாமல் ஏற்றுக் கொண்டு, ஹிந்து சமயத்தின் சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை மட்டும் இகழ்வது திராவிடக் கட்சிகளின் இன்னொரு தீய குணாம்சம். இதனையும் எம்.ஜி.ஆர். ஒருபோதும் ஏற்றுக் கொண்டவர் அல்லர்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசான ஜெயலலிதாவும், இந்தத் தீய குணங் களில் ஒன்று கூட இல்லாதவர். எனவேதான் அ.இ.அ.தி.மு.க.வை ஒரு திராவிடக் கட்சியாகக் கருதுவது பிழையானது என்று இந்தத் தொடரில் முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன் என்ற பீடி கையுடன் தொடரைத் தொடங்கியுள்ளார்.
இதில் அ.இ.அ.தி.மு.கவை புகழ் கிறாரா? இகழ்கிறாரா? அ.இ.அ.தி.மு.க திராவிடக் கட்சி அல்ல என்று அய்யர்வாள் எழுதுவதை அ.இ.அ.தி.மு.க தலைமை ஏற்றுக் கொள்கிறதா?

ஏற்றுக் கொள்கிறது என்றால் முதலில் அண்ணாவின் பெயரையும், உருவத்தையும், திராவிட என்ற இனச் சுட்டுப் பெயரையும் கட்சியிலிருந்தும், கொடியிலிருந்தும் தூக்கி எறிய வேண்டுமே, செய்வார்களா?
இல்லை - இல்லை. அ.இ.அ.தி.மு.க. அசல் திராவிட இயக்கம்தான்;  அண்ணா எங்கள் வழிகாட்டிதான் என்று சொல்லுவார்களேயானால், துக்ளக்கில் வெளி வந்திருக்கும் இந்தத் தொடரை எதிர்த்து முதல் குரல்  கொடுத்திருக்க வேண்டும் - அவர்களின் அதிகாரபூர்வ நமது எம்.ஜி.ஆர்.  ஏட்டில் மறுப்பும் தெரிவித்திருக்க வேண்டுமே -_ இதுவரை செய்ய வில்லையே -_ ஏன்?

அ.இ.அ.தி.மு.க.வில் கொள்கை உள்ள ஒரே ஒரு தோழர் கூட இல்லாதபடி அற்றுப் போய்விட்டனர் என்பதுதான் பரிதாபகரமான பெரும் உண்மை!

சட்டமன்றத்திலேயே தன்னை ஒரு பாப்பாத்தி என்று பிரகடனப்படுத் தியவர் எப்படி திராவிட முத்திரையைக் குத்திக் கொள்ள ஆசைப்படுவார்?
எம்.ஜி.ஆரைப் புகழ்வது போல இகழும் இடக்கரடக்கலையும்  காணத் தவறக்கூடாது. தமிழ்நாட்டில் பிரிவினை இயக்கங்களுக்கு நேரடியாகவும், மறைமுக மாகவும் ஆதரவு அளித்து வருவது  திராவிடக் கட்சிகளின் மற்றொரு குணாம்சம். இந்தக் குணாம்சமும் எம்.ஜி.ஆரிடம் காணப்பட்டதில்லை என்று பேனா பிடிக்கிறாரே - அது உண்மைதானா?
மாநில சுயாட்சிக்காக இந்தியாவின் இராணுவத்தையும் சந்திக்கத் தயார் என்று சொன்னவர் எம்.ஜி.ஆர். அல்லவா? இதில் நேரிடையாக பிரி வினை வாதம் இருக்கிறதா அல்லது மறைமுகமாகப் பிரிவினை வாதம் கமழ்கிறதா என்பதை திருவாளர் லட்சுமி நாராயண அய்யர்வாளுக்கே விட்டுவிடுவோம். தன் கருத்தை இன்னொருவர் மீது சுமத்துவது என்பது நாலாந்தரமான குணாம்சமாகும்.

பெரும்பாலானவர்கள் தீர்ப்புப்படி மக்களாட்சி அமைகிறது. ஆனாலும் வடபுலம் அளிக்கிற ஒரு தீர்ப்புக்குத் தான் தென்னாடு கட்டுப்பட வேண்டி யிருக்கும் என்று அண்ணா கூறியது உண்மை என்று இப்பொழுது நிரூபிக்கப் பட்டுவிட்டது என்று பாளையங் கோட்டையில் பேசியவரும் இதே எம்.ஜி.ஆர்.தான் (9-_6_-1977).

இதில் நேர்முகமாக பிரிவினை வாடை வீசுகிறதா என்பதை முடிவு செய்வதையும் இந்த அய்யர்வாளுக்கே விட்டுவிடுவோமாக. இதே துக்ளக் இதழை வம்பில் இழுத்துவிடும் ஒரு வேலையை விவரம் தெரியாமல் லட்சுமி நாராயணன் செய்துள்ளார்.

ஹிந்து மதத்தின் சடங்குகள், விழாக்கள் போன்றவற்றை மட்டும் இகழ்வது திராவிடக் கட்சிகளின் இன் னொரு தீய குணாம்சம். இதனையும் எம்.ஜி.ஆர். ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர் அல்லர் என்று நீட்டி முழங்குகிறாரே _ அதற்கும் ஒரு ஆப்பு!

சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மாண்பு மிகு எம்.ஜி.ஆர். ஒரு சூடு கொடுத்தார் பாருங்கள்.
மருத்துவத்தால் குணமாகாத நோய்களைஅய்யப்பன் கோயில் திருநீறு குணமாக்கிவிடும் என்ற நம்பிக்கையை சிலர் பரப்பி வருகின்றனர். இந்த எண்ணம் வலுப் பெறுமானால், பிறகு மருத்துவமனைகளை இழுத்து மூடிவிட்டு, டாக்டர்களை விபூதி விற்பனையாளர்களாக நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கடவுள் நம்பிக்கை அறிவியல் துறையில் தலையிட்டு பாமர மக்களைக் கெடுத்துவிடக் கூடாது. படித்தவர்களே இப்படி நடந்து கொள்கிறார்கள் . இப்படி கோவிலுக்குச் செலவழிக்கும் பணத்தை மருத்துவமனைகளுக்குக் கொடுத்துதவினால் எத்தனையோ ஏழை நோயாளிகள் குணம் அடை வார்கள்.
டாக்டர்களின் திறமைக்கு உத்தர வாதம் வேண்டும்; அவர்களின் திற மையைக் கேவலப்படுத்தும் வகையில் திருநீறு குணமாக்கிவிடும் என்று சொல்பவர்களை என்ன சொல்லுவது? என்று பேசினாரே.

இது இந்துமதக் கடவுள் அய்யப் பனைப் பற்றியும், இந்து மதத்தின் திருநீறு குறித்தும் எம்.ஜி.ஆர். கேலி செய்வதாக ஆகாதா? என்ற கேள்வியும் அய்யர்வாளுக்கே அர்ப்பணம்!

இன்றைக்குத் துக்ளக்கில் எம்.ஜி.ஆரைத் தூக்கிப் பிடித்து, திராவிட இயக்கத்திலிருந்து அவரைத் தனிமைப்படுத்தி,  இந்து மத சம்பிர தாயங்களை ஏற்றுக் கொண்டவர் என்று  ஜிகினா வேலை செய்ய, படாத பாடு படுகிறாரே; இதே துக்ளக் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தெரிவித்த கருத்து குறித்து எவ்வளவு துள்ளு துள்ளியது தெரியுமா? ஒரு முதல்வர் இப்படிப் பேசலாமா? என்று எகிறிக் குதித்ததே. ஒரு படி மேலே போய் (துக்ளக் 1_2_-1979) எம்.ஜி.ஆர். தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துக்ளக் சிறப்புக் கட்டுரையும் எழுதியதே!
மக்கள் மறந்தாலும், கருஞ்சட்டைக் காரன் மறக்க மாட்டானே!

குற்றமற்ற பிராமணர்களைத் துவேஷிப்பது திராவிடக் கட்சிகளின் தலையாய தீயகுணங்களில் ஒன்று. இந்தக் குணம் எம்.ஜி.ஆரிடம் சிறிது கூடக் கிடையாது என்றும் கதைக்கிறார்.

பிராமணன் என்று சொல்லுவதே அடுத்தவர்களைத் துவேஷிப்பதுதானே! பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிரா மணன்,காலில் பிறந்தவன் சூத்திரன்!  சூத்திரன் என்றால் வேசி மகன் என்பது (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415) அடுத்தவர்களை இழிவுபடுத்துவது தானே!

உலகத்தின் எந்த நாட்டிலாவது, எந்த மதத்திலாவது தங்களைத் தவிர மற்றவர்களைப் பார்த்து பிறவியிலேயே வேசி மக்கள் என்று கூறுவதுண்டா? இந்த யோக்கியதை உள்ளவர்கள் குற்றமற்ற பிராமணர்களாம். இந்த இழிவைப் பொறுக்காது எதிர்த்துக் கேட்டால் அதற்குப் பெயர் துவேஷிப்பதாம்.
தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து துவேஷிகள் என்று சொல்லுவார்கள் என்று லாலா லஜபதிராய் சொன் னாரே, அதுதான் நினைவுக்கு வருகிறது.

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்னும் தன்மான இயக்கப் புயல் மய்யம் கொண்ட பிறகுதானே சூத்திரச்சி வேலைக்கு வந்தாளா? என்று கேட்கும் ஆணவத்தின் முது கெலும்பு முறிக்கப்பட்டது.

இன்றைக்குக் கூட தாழ்த்தப்பட்ட வர்கள் உட்பட இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து ஜாதியினரும் உரிய பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் செய்தால் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை பார்ப்பனர்கள் சென்று தடை வாங்குகிறார்கள் என்றால் அவர்கள் உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் அந்தத் துவேஷ நஞ்சுதானே காரணம்?

இந்த வெட்கக்கேட்டில் குற்றமற்ற பிராமணர்கள் என்ற அடைமொழி வேறு. கண்ணற்றவருக்குக் கண்ணாயி ரம் என்று பெயர் வைப்பதில்லையா -_  அதுபோல்தான் இதுவும்.

கடவுளுக்கு மேலே பிராமணர்கள் என்று மார்தட்டும் அவர்களின் லோகக் குருகூட ஒழுக்கவாதியாக இருக்க முடியவில்லையே! கொலைக்குற்றம் - அத்து மீறிய பாலியல் குரூரம் என்ற கொச்சைத் தனத்தை மூட்டை கட்டிக் கொண்டு தோளில் போட்டுக் கொண்டு அல்லவா வெட்கமில்லாமல் திரிகிறார். ஜெயேந்திரர்! இவ்வளவு நடந்துள்ள போதிலும் இன்னும் அவர் சுவாமிகள் தானாம்!

இந்த யோக்கியதை உள்ளவர்களுக் குப் பேனா பிடிப்பு ஒரு கேடா?
சென்னை பாலர் அரங்கில் ஒரு ஜாதி மறுப்புத் திருமணம் (28-_6_-1970  ஞாயிறு). நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த எல். ஆறுமுகம் சிங் மகளுக்கும், வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே. ரகுபதிக்கும் ஜாதிமறுப்புத் திருமணம் எம்.ஜி.ஆர். தலைமையில் நடைபெற்றது. பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் அவர்களும் அவ் விழாவில் கலந்து கொண்டார்.
அப்பொழுது எம்.ஜி.ஆர்.பேசினார்.

இந்த மணவிழா அய்யா முன்னி லையில், அண்ணா வாழ்த்து வழங்கி நடைபெற வேண்டியதாகும். எவ்வளவு தான் சட்டம், கண்டிப்பு வந்தாலும் உள்ளத்தில் மாறுதல் ஏற்பட்டால்தான்  அது பயன்படும். தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய சீர்திருத்தப் பணியை துவக்கிய காலம். பலத்த எதிர்ப்பும், ஏளனமும் மிகுந்த காலம். இன்று அவர்கள் வாழ் நாளிலேயே அவரது கொள்கைளின் வெற்றிகளைக் காணும் பெருமித நிலையில் உள்ளார் கள். சமூகத்தில் ஒரு சிலர் ஆதிக்கம் பெறத்தான் ஜாதி புகுத்தப்பட்டது.

 ஆதிக்கக்காரர்கள் எதிர்ப்பை சமா ளித்து இன்று அய்யா வெற்றி பெற்று இருக்கிறார். உள்ளத்தில் மாறுதல் ஏற் படுத்துவது என்பது பெருஞ்சாதனை யாகும். உயர்ஜாதிக்காரர்கள் என்றால் அவர்கள் ஒழுக்கவாதிகள் என்பதல்ல பொருள். வாழ்க்கையை அவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே முக்கியம்.
இந்த மணமக்கள் சமுதாய மாறுதலுக்குத் தக்க அடை யாளமாகத் திகழ்கிறார்கள். அய்யா அவர்களது தியாகத்திற்குத் தலை வணங்குவதுதான், மரியாதை செலுத்து வதுதான் இத்தகைய விழாவில் நம் கடமையாகும் என்று பேசியவர் எம்.ஜி.ஆர். இதில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை, கோட் பாடுகளை எந்த அளவு உள்ளத்தில் தாங்கி இருந்தார் என்பது விளங்க வில்லையா?

உயர்ஜாதி ஆதிக்கம்பற்றியும், ஒழுக்கத்திற்கும் உயர் ஜாதிக்கும் சம்பந் தம் இல்லை என்றும் சொல்கிறாரே - அந்த உயர்ஜாதி என்று யாரைக் குறிப்பிடுகிறார். உயர்ஜாதி ஆதிக்கம் என்று அழுத்திச் சொல்லுகிறாரே - இதற்கு என்ன பொருள் என்று முடிவு கட்டுவதையும் திருவாளர் லட்சுமி நாராயண் அய்யர் வாளுக்கே சமர்ப் பணம்!

எம்.ஜி.ஆர். அவர்களை, திராவிட இயக்கத்திலிருந்து பிரித்து, நம்மோடு மோதவிடப் பார்க்கிறது அக்கிரகாரம். அதன் நிலை என்ன? அவர்கள் மனித உருவில் திரியும் நரிகள் என்று இப் பொழுது அம்பலப்பட்டதுதான் மிச்சம்.

http://viduthalai.in/new/page7/13415.html

-------(தொடரும்), கட்டுரையாளர் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன்

Saturday, March 05, 2011

தினமணி, தினமலர்.. அவிட்டுத் திரியை அவிழ்த்து விட்டு ஆடிப்பார்க்கின்றன

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13 என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.இ.அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்ட ணியும் அமையப் போகிறது.

இதில்  அகில இந்திய ஆரிய தி.மு.க.வின் தலைமைப் பொறுப் பில் இருக்கும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்து விட வேண்டும், மானமிகு சுயமரியாதைக்காரரான கலை ஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்துவிடக்கூடாது  என்பதிலே பார்ப்பனர்கள் பத்தியமாக இருக்கிறார்கள்.

தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க உள்ள கட்சிகளி டையே மித்திரபேதம் செய்து பார்க்கலாம். சிண்டு முடிவதில் தங்களுக்கே உரித்தான சிங்காரக் கலையைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என்பதிலே பார்ப்பன ஏடுகள் (குறிப்பாக தினமணி, தினமலர்) அவிட்டுத் திரியை அவிழ்த்து விட்டு ஆடிப்பார்க்கின்றன.

எல்லாவற்றையும் பக்கத்தில் இருந்து பார்த்தது போல எழுதுகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தை களைப் படிக்கும்பொழுது, அது .அவர்களின் ஜென்மத்துடன் பிறந்தது _  அதனை எது கொண்டு அடித்தாலும், அவர்களை விட்டுப் போகாது என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்திருக் கும் ஒவ்வொரு கட்சியின் மீதும் ஒரு சந்தேகத்தை உண்டாக்கவேண்டும் என்னும் எத்து வேலையில் ஈடுபடு கின்றன இந்த அக்கிரகார ஏடுகள். தி.மு.க.வுடன் காங்கிரஸ் உறவு முறியப் போகிறது. அணி மாறுகிறதா விடுதலைச் சிறுத்தைகள்?

பா.ம.க.வின் தயக்கம், - தி.மு.க.வின் வியூகம்;- அதிமுகவுடன் கூட்டணி வைத் தால் மட்டுமே எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பா.ம.க.வினர் கருது கிறார்கள்.

இப்படியெல்லாம் எழுதுகிற தினமணி என்னும் ஆர்.எஸ்.எஸ். ஏடு இவற்றிற்கு ஏதேனும் ஆதாரத்தைத் தருகின்றதா என்றால்... என்று தெரிய வருகிறது என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளர்.

தில்லி வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. காங்கிர சின் எண்ணம் என்கின்றனர் பார்வையாளர்கள்.

அமைச்சர் எ.வ. வேலு இல்லத் திருமணத்தில் கமெண்ட்  அடித்ததாகத் தெரிகிறது. குமுறு கிறார்கள் அண்ணா காலத்திய தி.மு.க. மூத்த தலைவர்கள்.

போட்டு உடைத்தார் ஒரு முன்னாள் ஜனதா கட்சித் தலைவர்.

- இவைதான் தினமணி உள்ளிட்ட பார்ப்பன ஏடுகளில் அசைக்கவே முடியாத உலக்கைக் கொழுந்து ஆதாரக் குவியல்கள்!

இந்த வகையறாக்களின் மூக்கை உடைக்கும் வகையில் பா.ம.க. -_ தி.மு.க. வுடன் கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டது.

பார்ப்பன ஏடுகளின் பம்மாத்து முகத்திரையைக் கிழிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகளும் திமுகவுட னான கூட்டணி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தத் தில்லுமுல்லுக் கூட்டம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனிமேல் தேர்தல் ஆரூடம் சொல்லப் போகிறது?

ஊர் பேசுகிறது, - ஊரார் பேசிக் கொள்கிறார்கள் என்று இந்தப் பார்ப் பனக் கூட்டம், அவற்றின் ஊடகங்கள் பேசுகின்றனவே -_ எழுதுகின்றனவே _- இதைப் படிக்கும் பொழுது புகழ் பெற்ற பொறியாளர் பா.வெ. மாணிக்க நாயக்கர்தான் நினைவுக்கு வருகிறார்.

அவரைப் பற்றிய ஒரு தகவலை இதோ தந்தை பெரியார் கூறுகிறார்:

சுமார் 70 வருடங்களுக்கு முன் திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் ஈரோடு கரூர் டிவிஷனில் அஸிஸ் டெண்ட் இன்ஜினீயராக நியமிக்கப் பட்டபோது, ஒரு ஓவர்சீயரிடம் வேலை கற்க அமர்த்தப்பட்டார்.

பிறகு அவர் அஸிஸ்டெண்ட் இன்ஜினீயர் வேலை ஏற்றுக்கொண்டார். அப்போது அந்த ஓவர்சீயர் மாணிக்க நாயக்கரின் கீழ் வேலை பார்க்க வேண்டியவரானார். இவரின் நடத்தையை மாணிக்க நாயக்கர் வேலை பழகும்போது தெரிந்து இருந்ததினால், சந்தேகப்பட்ட ஒரு காரியத்தைக் கண்டித்தார்.

இது அந்த ஓவர்சீயருக்குப் பிடிக்கவில்லை. நம்மிடம் வேலை பழகின பையன் நம்மைக் கண்டிக்கிறானே! என்று கருதி மாணிக்க நாயக்கருக்குப் புத்தி சொல்லுகிற மாதிரி,

நீங்கள் சிறுவயது; உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். உடனே மாணிக்க நாயக்கர், என் பெயர் ஏன் கெடும்? என்று கேட்டார்.

உங்களைப் பற்றி மக்கள் கண்டபடி பேசுகிறார்கள். இதற்கு இடம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று ஓவர்சீயர் சொன்னார்.

என்ன பேசுகிறார்கள்? சொல் லுங்கள் என்று மாணிக்க நாயக்கர் கேட்டார்.

நீங்கள் பணம் வாங்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பேசுகிறார்கள் என்றார் ஓவர்சீயர்.

அந்தப்படி யார் சொன்னார்? சொல்லுங்கள் என்று சற்று கோப மாகக் கேட்டார் மாணிக்க நாயக்கர். அதற்கு ஓவர்சீயர், ஜனங்கள் அப்படி பேசிக் கொள்கிறார்கள் என்று சொன்னார்.

உடனே மாணிக்க நாயக்கர், வாழாமல் உன் வீட்டிற்கு வந்திருக்கும் உன் மகளுக்கும், லஸ்கர் நாராயண சாமிக்கும் சம்பந்தம் உண்டு என்று ஊரெல்லாம் பேசிக் கொள்ளு கிறார்களே? அப்படி நீ வைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டார்.

உடனே அந்த ஓவர்சீயர் கோபப்பட்டு, எந்த அயோக்கியப் பயல் அப்படிச் சொன்னான்? சொல்லு; முட்டாள் தனமாகப் பேசாதே என்றார்.

உடனே மாணிக்க நாயக்கர் தன் காலில் இருந்ததைக் கழற்றி அந்த ஓவர்சீயரின் தலையில் இரண்டு, மூன்று போட்டார்; பக்கத்திலிருந்தவர்கள் தடுத்து, ஓவர்சீயரைப் பார்த்து, நீங்களும் ஊரில் பேசிக்கொள்கிறார்கள்  என்று சொன்னீர்கள்; அவரும் ஊரில் பேசிக் கொள்ளுகிறார்கள்; என்று சொன்னார். இதில் தப்பென்ன?

உங்களைச் சொன்னதால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. நீங்கள் அவரைச் சொன்னது அவர் வேலைக்கே ஆபத்தாய் முடியுமே என்று சொல்லி ஓவர்சீயரை மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும்படி செய்தார்கள். இது, கரூர் அக்கால  ஜி.ஙி., யில் நடந்த நிகழ்ச்சி.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால், அரசியலில் எதிர்க் கட்சி மீது, எதிரிகள் மீது குறை கூறுவதற்காகச் சிலர் எதையும் சொல்லிவிட்டு, அழுத்திக் கேட்டால், மக்கள் அப்படிப் பேசிக் கொள்ளுகிறார்கள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். அவர்களுக்குப் புத்தி வருவதற்காக உண்மையாய் நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டேன்.

ஊரில் பேசிக்கொள்ளுகிறார்கள் என்பது மிகக் கீழ்த்தரமான மக்கள் தன்மையாகும் என்று எழுதியுள்ளார் தந்தை பெரியார்.

(அறிக்கை - விடுதலை 26-.3.-1969)

இதைவிட எந்த எடுத்துக் காட்டைச் சொல்லி இந்தப் பார்ப்பன மந்தைக்குச் சூடு போட முடியும்?

நடக்க இருக்கும் தேர்தலில் மானமிகு கலைஞர் ஓர் அணியின் தலைவர். எதிர் அணியின் தலைவர் செல்வி ஜெயலலிதா.

கலைஞர் யார்?

தந்தை பெரியாரின் தொண்டர்.

அண்ணாவின் தம்பி.

பதினைந்து வயது முதற்கொண்டு தன்மானக் கொடியை ஏந்தியவர்.

பொது, வாழ்வில் பல களங்களைக் கண்டவர். கஷ்ட, நஷ்டம் என்னும் விலையைத் தந்தவர்.

உழைப்பால் உயர்ந்தவர்
பகுத்தறிவாளர்;
இனவுணர்வாளர்.
ஜெயலலிதா யார்?
தமிழரா?
திராவிடரா?
பகுத்தறிவாளரா?
தன்மான இயக்க வழி வந்தவரா?
களம் கண்டவரா?
காராக்கிரகம் சென்றவரா?
தந்தை பெரியார் கொள்கையை உணர்ந்தவரா?

அறிஞர் அண்ணாவின் இலட்சி யங்களை அறிந்தவரா? - ஏற்றுக் கொள்பவரா?

இந்த இரு தலைமைகளுள் எது வேண்டும்? தோழனே சொல்!

மனுதர்மத்துக்கு மறு பிறவி கிடை யாது என்று கூறும் கலைஞர் எங்கே?

மனுதர்மத்திற்கு மகுடம் சூட்டு வோம் என்று மமதையுடன் செயல்படும் ஜெயலலிதா எங்கே?

ஒரு தகவல் தெரியுமா தோழர்களே?

திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று சொல்லிக் கொண்டு அண்ணா பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் பொறித்துக் கொண்டுள் ளார்;- திராவிட என்ற சொல்லையும் சேர்த்துக் கொண்டு அண்ணா தி.மு.க. வின் அதிகாரப் பூர்வமான நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் நாள்தோறும் இராசி பலன் வெளியிட்டு வருகிறார்களே -_ தெரியுமா உங்களுக்கு?

புத்த மார்க்கத்தை ஆரியம் ஊடுருவிச் சிதைத்தது.

திராவிட இயக்கத்திலே ஆரிய மாது ஊடுருவி உருக்குலைத்திருக்கிறாரே?

இதனை ஏற்கலாமா? ஆட்சி பீடத்தில் அமர வைக்கலாமா?

அய்யாவை நினைத்து முடிவு செய்யுங்கள்.

அண்ணாவை எண்ணி ஒரு முடிவுக்கு வாருங்கள்.

கலைஞரை ஜென்ம விரோதி என்கிறாரே ஜெயலலிதா, இதன் பொருள் என்ன? ஆம், ஜென்ம விரோ தம்தான்! பார்ப்பனர்கள் தமிழர்களுக்கு ஜென்ம விரோதிகள்தானே!

அந்த ஜென்ம விரோதி ஆட்சி சிம்மாசனம் ஏற அனுமதி கேட்கிறார்.

தமிழர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்.?

சாதாரண தேர்தல் அல்ல இது.

ஆரியர் -- திராவிடர் போராட்டம்.

நீங்கள் ஆரியர் பக்கமா? திராவிடர் பக்கமா?

இதுதான் இன்றைய கேள்வி

-------- மின்சாரம்,ஞாயிறு மலர் (05-03-2011)


Tamil 10 top sites [www.tamil10 .com ]