வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label பி.ஜே.பி -ராசா-எடியூரப்பா. Show all posts
Showing posts with label பி.ஜே.பி -ராசா-எடியூரப்பா. Show all posts

Thursday, June 30, 2011

ஊழலுக்கு ஜாதியில்லை என்று சொன்னவர்கள்...இப்போ எங்கே போனார்கள்?

கருநாடக மாநிலத்தில் லிங்காயத் என்ற பிரிவினர் குறிப்பிடத்தக்கவர்கள்; தேர்தலில் இவர்களின் பங்கு மிகவும் கணிசமானது.


கருநாடகத்தின் முதல் அமைச்சர் எடியூரப்பா இந்த சமுதாயப் பிரிவைச் சேர்ந்தவர்.

எடியூரப்பாமீது தொடர்ந்து ஊழல் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் லிங் காயத்து பிரிவைச் சேர்ந்தவர்கள் எடியூரப்பாவுக்காக அணி வகுத்து நிற்கிறார்களாம்.

தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதல் அமைச்சராக இருக்கிறார். அவரைக் கவிழ்க்க சதி நடக்கிறது என்கிற பாணியில் சிந்தனைகள் கிளம்ப ஆரம்பித்துள்ளதாக தினமலர் ஏடு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆ. இராசா - தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள் என்று கலைஞர் அவர்கள் சொன்னபோது ஊழலுக்கு ஜாதியில்லை; மதம் இல்லை - ஜாதியைக்காட்டி காப்பாற்றப் பார்க்கிறார் கலைஞர் என்று கதையைத் தூக்கிக் கொண்டு களம் காண வந்த பார்ப்பன ஏடுகள் இப்பொழுது கருநாடகாவில் ஏற்பட்டு இருக்கும் இந்த நிலையைக் குறித்து, அதே கண்ணோட்டத்தில் விமர்சிக்க முன் வராதது ஏன்?

குஜராத்தில் நரேந்திரமோடி அரச பயங்கரவாதக் கதாநாயகனாக மாறி சிறுபான்மை மக்களை வேட்டையாடியதை வன்முறை என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில் ஈழத்தில் அரச பயங்கரவாதத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தினால் அதனைப் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி, உண்மை உயிர் பிழைத்து விடாமல் பார்த்துக் கொள்வார்கள். இதுதான் பார்ப்பனர் களுக்கே உரித்தான நயவஞ்சகமான சிந்தனையும், நரிக்குணமும் ஆகும்.

நில மோசடிப் புகார் கருநாடக மாநிலத்தையே ஒரு கலக்குக் கலக்கியது. விலை உயர்ந்த வீட்டுமனை களை தன் மகன் மற்றும் உறவினர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று தனது ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் கம்பீரத்தை காட்டிக் கொண்டார் எடியூரப்பா.

சுரங்கத் தொழில் அதிபர்களான சகோதரர்கள் இருவருக்கும் அமைச்சர்கள் பதவி கொடுத்து, அவர்கள் எடுக்கும் கோலுக்கு எல்லாம் மந்தி(ரி)யாக ஆடினார். தொடக்கத்தில் மிஞ்சி பிறகு கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டார் எடியூரப்பா.

கருநாடக மாநில முதல் அமைச்சர் பதவியிலிருந்து இந்த மனிதரை நீக்கினால்தான் கட்சி பிழைக்கும் என்று கட்சி மேலிடம் முடிவு செய்தது.

இவரோ டில்லிக்கே சென்று பி.ஜே.பி. சட்டப் பேரவை உறுப்பினர்களைப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு என்னை நீக்கிப் பாருங்கள் என்று சவால் விட்டார். அகில இந்திய பா.ஜ.க. தலைமை எடியூரப்பாவுக்கு அடிபணிந்து சலாமிட்டு ஓடிப் போய்ப் பதுங்கிக் கொண்டது. உள்ளதுக்கும் ஆபத்து வந்தால் என்ன செய்வது - தென்னிந் தியாவில் தங்களுக்கென்று இருக்கும் ஒரே ஆட்சி யையும் பறி கொடுத்து விடக் கூடாதே என்ற நினைப் பில் எடியூரப்பாவின் அத்தனை முறைகேடுகளுக்கும் வெண் சாமரம் வீசும் நிலைக்கு பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமை தள்ளப்பட்டது பரிதாபமே!

தனக்கு எதிராகக் கிளம்பிய சொந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையே விலைக்கு வாங்கி நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறார்.

மறைந்த கருநாடக முன்னாள் முதல் அமைச்சர் அனுமந்தய்யாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட எடியூரப்பா என்ன பேசினார் தெரியுமா?

பதவி அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்களுக்குத் துரோகம் செய்து வருகிறோம். இதில் நானும் அடக்கம், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மக்களுக்கு நன்மை செய்யாமல், தேவையற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். மாநிலத்தில் அதிருப்தி அரசியல் தலை தூக்கிய போதும், அமைச்சரவையின் பெண் அமைச்சர் ஷோபாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட போதும் நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டது.

தொலைநோக்குப் பார்வை இல்லாமல், சுயநலத்திற்காக அரசியலில் மூழ்கியுள்ளதால், மக்களின் நலனை முழுமையாக மறந்து விடுகிறோம் (தினமலர் 4.12.2009) என்று பேசினாரே!

இப்படிப்பட்ட உத்தமப் புத்திரர்தான், ஜாதி வலைக்குள் புகுந்து பதவியைத் தக்க வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்.

இதெல்லாம் பார்ப்பன ஊடகங்களின் கண்களுக் குத் தெரியாது, தெரியவே தெரியாது என்று நம்பித் தொலைய வேண்டியதுதான்!

----- விடுதலை தலையங்கம், 30-06-2011


Wednesday, November 24, 2010

ஓ இதற்க்கு பெயர் தான் பி.ஜே.பி யோ?


இடையூரப்பா தலைமை சொல்லியும் நாற்காலியை பிடித்து கொண்டு நகரமால் இருக்கிறாரே அனால் ராசாவோ, நான்  பதவியே விலக தேவை இல்லை என்று கூறியவர்.. தலைமை சொன்னவுடன் ஏற்று பதவி விலகினார். என்னே ஒரு தலைமைக்கு கீழ் படியும் தொண்டன் ,என்னே முத்தமிழ் அறிஞரின் போர்ப்படை தளபதி.... ராசா உண்மையிலே நீ ஒரு யோக்கியன் மானஸ்தன் என்று மனதிற்குள் நினைத்திருக்கிறார் தட்டி கொடுத்திருக்கிறார். மாண்புமிகுவை  பறிக்கலாம்..மானமிகுவை பறிக்க முடியுமா? என்று பிரதமர் மன்மோகனுக்கு தெரிந்து விட்டதோ என்னவோ?

தட்டி கொடுத்ததை குற்றம் காண்பவன் பூணூல் போட்டிருந்தால் பூரிப்பு இருக்கும் இந்த பி.ஜே.பி க்கு....எனவே தட்டி கொடுத்ததை தவறாக சித்தரிக்கும் பத்திரிக்கைகளுக்கும், ராஜாவை பற்றி தவறான தகவல் அளித்த பத்திரிக்கைகளும் விரைவில் விளக்கம் கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பபடும்.
 
நிலைமை இப்படி இருக்க பி.ஜே.பி யின் தலைவர் நிதின் கட்கரி அவர்கள் ஊழல் செய்த கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இனிப்பு வழங்கி நீங்கள் பதவியில் நீடிக்கலாம்...என்று அங்கீகரிக்கிறார்.....இப்படி வெட்ட வெளிச்சமாக ஊழலை அங்கீகரிக்கும்  பி.ஜே.பி க்கு என்ன யோகிதை இருக்கிறது? ஊழல் என்று பேச....மனிதாபிமான அடிப்படையில் ஒருவரை பார்க்கும் பொழுது தலை அசைப்பது, தட்டி கொடுத்து பேசுவது இயல்பு...இது அரசியலுக்கும் அப்பாற்பட்டது....அப்படி ராஜாவை பார்த்து பிரதமர்  மன்மோகன் தட்டிகொடுத்து பேசியதற்காக குதி ஆட்டம் போடும் வக்கிர காவி கூட்டம், வெட்ட வெளிச்சமாக ஊழல் செய்த்த ஒருவரை முதல்வர் பதவியில் இருந்து விலக்க முடியவில்லை மாறாக அவர் அந்த பதவியில் நீடிப்பதற்கு காவி கட்சியின் தேசிய தலைவர் இனிப்பு வழங்குகிறார்....ஓ இதற்க்கு பெயர் தான் பி.ஜே.பி யோ?...பி.ஜே.பி பற்றி வாய் கிழிய பேசுபவர்களே இதற்க்கு உங்கள் பதில் என்ன?


Tamil 10 top sites [www.tamil10 .com ]