வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label தீட்சிதர்கள். Show all posts
Showing posts with label தீட்சிதர்கள். Show all posts

Monday, December 07, 2009

தினமலர் கூறும் பரபரப்பு...

சிதம்பரம் நடராஜன் கோயிலில் பூஜை செய்-யும் தீட்சிதர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று இந்து அறநிலையத்-துறை சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு-உள்ளது.


2009 பிப்ரவரி 2 ஆம் தேதிமுதல் அதுவரை தீட்-சிதர்ப் பார்ப்பனர்களின் ஏக-போக ஆதிக்கத்தில் இருந்த இந்தக் கோயில் இந்து அறநிலையத்துறை-யின் கட்டுப்பாட்டுக்குக் கீழ்வந்துவிட்டது.

உண்டியல், பிரசாதக் கடை வருமானம் எல்-லாம் இனி இந்து அற-நிலையத் துறைக்குத்தான்.

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் தங்கள் பெயர்-களை இந்து அறநிலையத்-துறை செயல் அலுவலகத்-தில் பதிவு செய்துகொள்ள-வேண்டும் என்கிற அறி-விப்பு, தீட்சிதர்கள் மத்தி-யில் பரபரப்பை ஏற்படுத்தி-யுள்ளதாக ‘தினமலர்’ (7.12.2009) கூறுகிறது.

இதில் பரபரப்புக்கு என்ன வேலை என்று நினைக்-கலாம். இருக்கிறது, நிறையவே இருக்கிறது.இதற்கு எடுத்துக்காட்டு திருவரங்கம் ரெங்கநாதன் கோயில். இக்கோயிலில் அர்ச்சகர்களாகப் பணி-யாற்றுவதாகப் பட்டியலில் உள்ள பல பார்ப்பனர்கள் இந்தியாவிலேயே இல்லை; அமெரிக்காவில் இருக்கின்-றனர் _ இன்னும் சில பார்ப்பனர்கள் திருவெறும்-பூர் ‘பெல்’ நிறுவனத்தில் பணி-யாற்றிக் கொண்டிருக்-கின்றனர். கோயில் பக்கம் தலைவைத்துப் படுக்காத இந்த அர்ச்சகப் பார்ப்பனர்-களுக்கு மாத சம்பளம் மட்-டும் கறாராகக் கிடைத்து-விடும்.

குறிப்பிட்ட வயது-வரை தான் அர்ச்சகராகப் பணியாற்றவேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன. அதைப்-பற்றி-யெல்லாம் கவலைப்-படாமல், 80 வயதைத் தாண்-டியவர்கள்கூட சம்-பளப் பட்டியலில் உள்ள-னர்.

திருவரங்கம் கோயி-லில் உதவி ஆணையராக வந்த கவிதா என்ற அம்-மையார், இந்த முறைகேடு-களையெல்லாம் கண்டு-பிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து நட-வடிக்கை எடுத்தார் என்ப-தற்காக, கோயில் பார்ப்ப-னர்கள் அவருக்குக் கொடுத்த தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல!

கடவுளின் பக்கத்தில் இருந்துகொண்டு பூஜை செய்பவர்கள், கருவறை-யைக் காமக் களியாட்டத்-துக்குப் பயன்படுத்துவதும், சம்பளம் பெற வேண்டும் என்பதற்காகப் பொய்யான தகவல்களைக் கொடுப்-பதும், கோயில், பக்தி சமாச்-சாரங்களின் மோசடி-களை விளக்கப் போது-மானவையல்லவா!

- மயிலாடன்

Tamil 10 top sites [www.tamil10 .com ]