வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label தினமலர்-பூணூல்-திருப்பதி-பெரியார். Show all posts
Showing posts with label தினமலர்-பூணூல்-திருப்பதி-பெரியார். Show all posts

Saturday, April 24, 2010

பூணூலை ஒரு முறுக்கு முறுக்கிக் கிளம்பியிருக்கும் தினமலரில் இன்று ஒரு தகவல்

கேள்வி: நம் நாட்டில் இறைவுணர்வு குறைந்து வருகிறதோ?


பதில்: என் அனுபவத்-துல சொல்றேன்... பக்தி அதிகமாயிக்கிட்டிருக்கு.

...கோயிலுக்குப் போற-வங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்-கிட்டே இருக்கு!

பழனியில் எம் பெரு-மான் முருகன் கோயில் உண்டியல் முன்னாடி-யெல்-லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபாதான் வந்துச்சு! இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு மூன்று கோடி-யைத் தாண்டிடுது... பக்தி அதிகமாயிருக்கு... ஆனால், ஒழுக்கம்தான் குறைஞ்சு போயிடுச்சு.

கேள்வி: இறைவனி-டத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்-றால், ஒழுக்கமும் இருக்-கிற-தென்று சொல்லலாமே?

பதில்: ஊஹூம்... அப்-படியில்லை... பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்த-மேயில்லை...

(ஆனந்தவிகடன், 2.12.1991).

கேள்விகளுக்குப் பதில் சொன்னவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமா? சொன்னவர் சாட்சாத் திருமுருக கிருபானந்தவாரியார்தான்.

சரி... இப்பொழுது அதற்கு என்ன வந்தது? வாரியார் ஏன் சாட்சிக்கு அழைக்கப்படுகிறார்?

காரணம் இல்லாமலா? சங் பரிவார்களையும், பக்தியையும் தூக்கி நிறுத்-தவும், திராவிட இயக்கத்-தைக் கொச்சைப்படுத்த-வுமே அவதாரம் எடுத்த-தாகச் சிண்டை விசிறி-விட்டு பூணூலை ஒரு முறுக்கு முறுக்கிக் கிளம்-பியிருக்கும் தினமலரில் இன்று ஒரு தகவல்.

திருப்பதியில் தேவஸ்-தானத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளில் தங்க விரும்புவோர் இனி கைரேகையைப் பதிவு செய்துகொள்ளவேண்டுமாம். அதேபோல, அறையைக் காலி செய்யும்போதும் கைரேகையைப் பதிவு செய்து முன் பணத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டு-மாம்.

இதற்கான காரணங்-கள் வெளிப்படை. திருப்-பதி கோயிலுக்குச் சொந்த-மான தங்கும் அறைகளில் பல்வேறு ஒழுக்கக்கேடு-களும், முறைகேடுகளும் அதிகம் நடந்து வருகின்-றன.

விபச்சாரம் அதிகம் நடக்கும் இடங்களில் திருப்பதிக்கு முக்கிய இடம் என்ற தகவலும் ஏற்-கெனவே வெளிவந்தது-தான்.

திருப்பதி உண்டியல் பணத்தை எண்ணும்-போது பெரிய கேமரா பொருத்தப்படுகிறது. காரணம், பணத்தை எண்-ணும்போது சுருட்டும் வேலை ஜோராக நடப்ப-தைக் கண்டுபிடிக்கத்தான்.

திருப்பதி டாலர் விற்-பனையிலும் கொள்ளை! டாலர் ரெங்காச்சாரி என்றே ஒருவருக்குப் பெயராம்.

ஏழுமலையானுக்குச் சொந்தமான நகைகளிலும் மோசடி நடந்துள்ளதால், கோயில் நகைகளின் இருப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தர-விட்டதும் நினைவில் இருக்குமே!

பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் உண்டு என்று இதற்கு மேலும் நம்பித் தொலைக்கலாமா?

---விடுதலை  மயிலாடன் (24.04.2010)




Tamil 10 top sites [www.tamil10 .com ]