வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label தமிழ்-சங்கராச்சாரி-திராவிடர் கழகம்-மாநாடு-கி.வீரமணி-பெரியார். Show all posts
Showing posts with label தமிழ்-சங்கராச்சாரி-திராவிடர் கழகம்-மாநாடு-கி.வீரமணி-பெரியார். Show all posts

Wednesday, June 30, 2010

கரூர் கருங்கடலாயிற்றோ என்று கருதும் வண்ணம் கூடுவீர்! கூடுவீர்!!

கருஞ்சிறுத்தைகளே_- கழகத் தோழர்களே, தமிழின உணர்வுள்ள பெருமக்களே, மொழி மானம் போற்றும் மூத்த தமிழ்க் குடி மக்களே!

கோவை உலகத் தமிழ் _ - மொழி மான மீட்பு மாநாட்டுக்குப் பின் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் உங்களையெல்லாம் கரூருக்கு அழைக்கிறார்.

காரணம் என்ன?

தமிழை நீஷ பாஷை என்று சொல்லும் ஒரு கூட்டம் இன்னும் தமிழ் மண்ணில் இருக்கத்தான் செய்கிறது.

தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வந்து குதிக்குமா? என்று தமிழை_- தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் கொச்சைப்படுத்தும் குள்ளநரிகள், அன்றாடம் ஊளையிட்டுக்கொண்டுதான் திரிகின்றன.

பூஜை வேளையில் தமிழில் பேசினால் தோஷம் என்கிற ஜெகத்குருக்களும் நாட்டில் உண்டு.

தமிழில் பேசும் ஒவ்வொரு முறையும் தமிழ்ப் பேசிய தோஷத்தின் காரணமாகக் குளியல் போடும் காமக்கோடிகளும் உண்டு.

தமிழ் அர்ச்சனை மொழி என்றால் எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற வி.எஸ்.சிறீகுமார்கள் யார்?

தமிழர்கள்_- தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட அர்ச்சகர் ஆக உரிமையுண்டு என்று அரசு சட்டம் செய்தால், உச்சிக்குடுமி மன்றம்வரை சென்று உலுக்கும் உளுத்தர்கள் யார்? யார்?

இதே கரூரையடுத்த திருமுக்கூடலூரில் உள்ள சிவன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்ததால் கோயில் தீட்டாகிவிட்டது என்று தீக்குழியில் விழுந்ததுபோல துடிதுடித்தவர்கள் யார்?

கோயிலை இழுத்துப் பூட்டி தோஷம் கழித்த துன்மார்க்கர்கள் யார்?

அந்தக் கரூரில்தான் இந்து முன்னணியினர் மாநாட்டை நடத்தியுள்ளனர்.

செம்மொழி மாநாட்டை வரவேற்றுத் தீர்மானம் போட்டதுண்டா? கோயிலில் தமிழ்தான் வழிபாட்டு மொழி என்ற கோரிக்கைதான் உண்டா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு உண்டா?

பாலைவனத்தில் பலாவை எதிர்பார்க்க முடியுமா? பார்ப்பனர்களிடத்தில் பைந்தமிழ்பற்றி பரப்புரையைத்தான் காண முடியுமா?

குதிரை குப்புறத் தள்ளினாலும் பரவாயில்லை, குழியும் பறிக்கிறது என்றால் சும்மாவிட முடியுமா?

இந்து முன்னணியினர் கரூரில் ஊர்வலம் நடத்தி மானமிகு முதலமைச்சர் கலைஞர் உருவம் தாங்கிய செம்மொழி மாநாட்டுப் பதாகைகளை எல்லாம் கீழே தள்ளிப் பந்தாடியிருக்கின்றனர்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையும் கடித்த மிருகம் போல ஆடித் தீர்த்துள்ளனர்_- தி.மு.க. தொண்டர்களை,- பிரமுகர்களைத் தாக்கியும் இருக்கின்றனர்.

தூங்கும் புலியை இடறிப் பார்த்துள்ளனர். தி.மு.க. மட்டுமல்ல_ - கட்சிகளைக் கடந்த தமிழர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பு.

திராவிடர் கழகம் உடனடியாக ஒரு மாநாட்டை நடத்தாதா என்று எதிர்பார்த்த நிலையில், மிகவும் ஆச்சரியமாக அதே நேரத்தில் கரூரில் கழக மாநாடு என்று கழகத் தலைவர் அறிவித்தாரே_ அடடே! கரூர் வட்டாரத்தில் எத்துணை கலகலப்புத் தெரியுமா?

எப்பொழுது வரும் ஜூலை 5 என்ற எதிர்பார்ப்பு. இன எதிரிகளே வீதிக்கு வந்து ஏளனம் செய்யும்போது இனமானத் தமிழர்கள் ஏதிலிகளாகத் திண்ணையில் உறங்கிக் கிடக்கலாமா?

சோற்றால் அடித்த பிண்டங்களா_ நாம் சுருண்டு கிடப்பதற்கு?

கிளம்பிற்றுக் காண் தமிழினத்தின் சிங்கக் குட்டிகள் என்று நாடே வியப்புக் குறியாய் எழுந்து நிற்க,

கழகக் குடும்பத்தினரே, இனமானத் தமிழர்களே,

கரூர் கருங்கடலாயிற்றோ என்று கருதும் வண்ணம் கூடுவீர்! கூடுவீர்!!

நமது அடுத்த நிலையம் கரூர்தான். விடுப்பு எடுப்பதாக இருந்தாலும், வீட்டு வேலைகளாக இருந்தாலும், இப்பொழுதே அதைப் பற்றி சிந்தித்துப் பயணத்திற்கு ஆயத்தமாகுங்கள்!

கர்ச்சனை முழக்கத்தால் கரூர் நகரமே காதடைத்துப் போகட்டும்! வாரீர்! வாரீர்!!

- மின்சாரம் , விடுதலை (30.06.2010)


Tamil 10 top sites [www.tamil10 .com ]