வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label கிரிக்கெட்-பார்ப்பான்-பெரியார். Show all posts
Showing posts with label கிரிக்கெட்-பார்ப்பான்-பெரியார். Show all posts

Sunday, April 25, 2010

குத்துச்சண்டை என்ன, கிரிக்கெட் விளை-யாட்டா? சூதாடுவதற்கு

குத்துச்சண்டை வீராங்கனை துளசிபற்றி நாளேட்டில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. படித்-தால் கண்களில் இருந்து குருதிதான் கொட்டும்.


வறுமையின் தேள் கொட்டப்பட்ட குடும்பம்_ பத்தாம் வகுப்புக்குமேல் படிக்க வாய்ப்பும் இல்லை.

சிறுவயதிலேயே குத்துச்சண்டையில் மிக ஆர்வம். முறையாகப் பயிற்சிப் பெற வசதி-யில்லை. பயிற்சிக்குத் தேவையான கருவிகள் இல்லை.

அவரைச் சுற்றி இல்லைகள் என்பது ஏராளம். ஆனாலும், இந்த இல்லைகளைத் தாண்டி இந்தத் துளசி-யிடம் தன்னம்பிக்கை என்னும் செல்வம் பல-மாகவே இருக்கிறது.

2009 ஆம் ஆண்-டில் இந்திய அளவில் குத்துச்சண்டையில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். மாநில அளவில் முதல் இடத்-தை-யும் தட்டிச் சென்றுள்-ளார்.

இந்திய அணிக்காக உலக அளவில் நடை-பெறும் போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு வந்தும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. காரணம் வறுமை _ பணத்துக்கு எங்கே போவது?

குத்துச்சண்டை என்ன, கிரிக்கெட் விளை-யாட்டா?_ சூதாடுவதற்-கும், பண மழை கொட்டுவதற்கும்?

ஒரு நாள் உள்நாட்-டில் விளையாடினால் ரூ.1.60 லட்சம்; வெளி-நாட்டில் விளையாடி-னால் ரூ.1.85 லட்சம். இது அல்லாமல் கிரிக்-கெட் வாரியம் ஆண்டு ஒன்றுக்கு ஒரு கிரிக்-கெட்காரருக்கு அளிக்-கும் சம்பளம் ரூ.50 லட்சம். இவையல்லாமல், விளம்பரங்கள்மூலம் கொட்டுவது. பண மழையல்ல _ வெள்ளம்!

ஆறு ஓட்டம் எடுத்-தால் அதற்கொரு கொசுரு தொகை. பந்-தைப் பிடித்-தால் அதற்-கொரு பரிசு. ஓட்டம் எடுப்பதற்கும், பந்-தைப் பிடிப்பதற்கும்-தானே விளையாடப் போகி-றார்கள்? அதன்-பின் என்ன ஒவ்வொன்-றுக்கும் தனித்தனி ரேட்?

இவ்வளவுக்கும் குத்துச் சண்டையில் தனி மனிதர் சாதனை என்று சொல்லுவதுபோல கிரிக்கெட்டில் இடம் இருக்கிறதா?

பார்ப்பான் எதில் நுழைந்தாலும், அவ-னுக்-குத்தான் முதல் பந்தி _ சகல சவுபாக்கியங்-களும்!

சூத்திரப் பெண் துளசிக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகி-றது? தெரிந்திருந்தால் குத்துச் சண்டைக்கா போயிருப்பார்?

-விடுதலை மயிலாடன் (23.04.2010)





Tamil 10 top sites [www.tamil10 .com ]