வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label கடவுள்-ஜாதி-மதம்-தீண்டாமை-நடராஜர்-ஐயப்பன். Show all posts
Showing posts with label கடவுள்-ஜாதி-மதம்-தீண்டாமை-நடராஜர்-ஐயப்பன். Show all posts

Tuesday, June 08, 2010

கடவுளை நம்பிய பக்த்தன் கதி

 க. சோ. சிவசுபிரமனியன் அவர்கள் எழுதிய புரட்சிப்பூக்கள் பகுதி பகுதியாக இடுக்கயாக போட்டு வருகிறேன்...அதன் தொடர்ச்சி  பகுதி ---- III

கடவுளை நம்பிய பக்த்தன் கதி

ஒட்டிய வயிறு
காய்ந்த கண்கள்
கடவுள் இல்லை என்பதை
இருப்பதாகச் சொல்லும்
பார்ப்பானின்
பொய் மூட்டைகளில்
மூழ்கிய மனசு
கார்த்திகையில் மாலையிட்டு
கேரளா ஐயப்பனை கும்பிட்டால்
செல்வ வளம் பெருகும்!
வாழ்க்கை செழிக்கும்!
வார்த்தைகளில்
மயங்கிய மனசு...

குடல் கருக பட்டினி கிடந்து
மனைவியை
ஒதுக்கி வைத்து
சாவுச் செய்தியைத்
தூர விரட்டி
கேரளா நோக்கி
கால் நடையாய்,
பகலிலும் நடை,
இரவிலும் நடை
இருட்டில்
உருமலோடு வரும்
லாரி...
ஐயப்ப பக்த்தனைக்
காவு வாங்க
காக்கும் கடவுள்
காணாமல் போன மாயம் என்ன?

தீண்டாமை
 
குருவாயூர் கோவிலுக்குள்
யானைக்கு அனுமதி உண்டு!
மனிதர்களுக்கு
அனுமதி இல்லை,
ஐயப்பன் கோவிலிலே
கன்னி சாமிகளுக்கு
அனுமதி உண்டு!

பெண்கள்
சாமிகளாக
அனுமதி இல்லை!

சிதம்பரம் நடராஜருக்கு
தமிழ் நாட்டில் இடமுண்டு
கோயிலில்
தமிழுக்கு இடமில்லை!
பள்ளியில் படித்த நினைவு
"தீண்டாமை"
மனித தன்மையற்ற செயல்
உண்மைதான்!

--------------- புரட்சிப்பூக்கள் தொடரும்
                                                                                                                                                                   

 





Tamil 10 top sites [www.tamil10 .com ]