வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label ஏ.கே.ராஜன்-ஆகமம்-தெய்வம்-கோயில்-அர்ச்சகர்-பெரியார். Show all posts
Showing posts with label ஏ.கே.ராஜன்-ஆகமம்-தெய்வம்-கோயில்-அர்ச்சகர்-பெரியார். Show all posts

Tuesday, July 19, 2011

ஆகமங்களும் மாறாதது அல்ல


அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். அக்கோரிக்கையை ஏற்று எவ் வாறு நடைமுறைப்படுத்துவது என்று வழி முறை கண்டு அர சுக்குப் பரிந்துரை செய்ய 2006 ஆம் ஆண்டு ஓர் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலை வராக நியமிக்கப்பட்டவர் நீதியர சர் ஏ.கே. ராஜன். அவர் தலைமை யில் அமைந்த குழு அளித்த அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அத்தோடு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. தமிழக அரசு சட்டமியற்றிய போது, வழக்கம் போல் ஆதிக்கச் சக்திகள் உச்சநீதி மன்றத்திற்குப் போய் முயற்சியை முடக்கி வைத்திருக்கின்றன. வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் உயர்நிலைக் குழுவின் தலைவராக இருந்த நீதி யரசர் ஏ.கே. ராஜன், தான் சேக ரித்த தகவல்கள் மற்றும் அனு பவங்களின் அடிப்படையில் தமி ழுலகம் பயன் பெற இந்த நூலை எழுதியிருக்கிறார்.

கோயில்கள் பற்றியும் ஆகமங்கள் பற்றியும் தமிழில் சில நூல்கள் உண்டு என்றாலும், ஆகம உலகில் ஏற்பட்டுள்ள மாற் றங்கள் குறித்து சரியான, ஆதாரப் பூர்வமான, பல தேவையான தக வல்களை உள்ளடக்கிய நூல் என்று பார்க்கும்போது இதுவே முதல் நூலாக இருக்கலாம்.

தமிழ்நாட்டில் அதாவது வெள்ளையர் ஆட்சி காலத்தில் இருந்த சென்னை மாகாண பகுதி யில் அமைந்த கோயில்களில்தான் ஆகம நடைமுறை இருக்கிறது என்பதை ஆசிரியர் முதலில் சுட்டிக்காட்டுகிறார். ஆதிசங்கர ரின் அத்வைதத்தோடு தென்னிந் தியாவில் உள்ள அதாவது தமிழ் நாட்டில் சைவ சித்தாந்தத்தை ஆசிரியர் பொருத்திப் பார்த்து சைவ சித்தாந்த வாதிகளால் ஏற்க முடியாத கருத்தாகவே இருக்கும். ஆனால் அதேசமயம் தமிழ் நாட்டு சைவ சித்தாந்தம் ஒரு தனிப்பிரிவு என்று பார்க்கிறார். மேலும் ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அவ்வாறு பார்க்க மறுத்ததை ஆசிரியர் ஏற்க வில்லை. அத்தீர்ப்பு மறுபரிசீ லனை செய்யப்பட வாய்ப்பு உள் ளது என்று கூறியிருக்கிறார். இது குறித்து ஆசிரியர் விரிவாக எழுதி யிருந்தால் தமிழ் உலகம் அவ ருக்கு நன்றி கூறும்.


நீதியரசர் ஏ.கே. ராஜன் ஆகம மாற்றங்கள் என்று எழுதியிருக் கும் பகுதி இந்த நூலின் உயிர் நாடியாகும். ஆகமங்கள் மாறாதவை, மாற்றப்பட முடி யாதவை, ஆகம மீறல் என்பது தெய்வக் குற்றம், காத்திரக் குற்றம் என்றெல்லாம் ஒரு கருத்தியலை மக்கள் மத்தியில் ஆதிக்க சக்திகள் பரப்பி வைத்திருக்கின்றன. அதற் குத் துணை போகும் சக்திகளும் ‘ஆமாம்’ போடுகின்றன. இந்தக் காலகட்டத்தில் ஆகமங்கள் மாறி வந்துள்ளன, மீறப்பட்டிருக்கின் றன என்ற உண்மைகள் வெளி வர வேண்டும். அப்பணியை இந்நூல் செய்கிறது.

ஆகமவழிச் சைவக் கோயில் களில் தெய்வ சிலையை வை ணவர் தொட்டாலோ அல்லது வைணவக் கோயில்களில் சைவர் தொட்டாலோ தெய்வச் சிலை யின் தெய்வத் தன்மை போய்வி டும் என்ற கூற்றை உச்சநீதிமன்றம் ஏற்று ஒரு வழக்கில் தீர்ப்பு வழங் கியுள்ளது. இத்தீர்ப்பு சரியல்ல என்று சரியாகவே ஆசிரியர் தன் கருத்தைப் பதிவு செய்கிறார். உருவ வழிபாட்டை ஏற்காத ஸ்மார்த்த பிராமணர்கள் சைவ, வைணவக் கோயில்களில் இன் றும் அர்ச்சனை செய்து வருகி றார்கள். இந்த உண்மை உச்சநீதி மன்றத்தின் பார்வைக்கு போகா மல் போய்விட்டது என்ற உண் மையை எதிர்காலம் கவனத்தில் கொள்ள வழிகாட்டுகிறார். ஸ்மார்த்க சமயப் பிரிவினருக்கு உருவ வழிபாடு, கோயில், ஆகமம் எதுவும் கிடையாது. ஆனால், அவர்களும் கோயிலில் எல்லாம் செய்கிறார்கள். (காஞ்சி சங்க ராச்சாரியார் ஸ்மார்த்த பிராம ணர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?)

பெண்களும் அர்ச்சகராக இருக்கலாம்; அதற்குத் தடை கிடையாது என்பதை எடுத்துக் காட்டுகிறார். ராமானுஜரின் கருத்தே இதுவாகத்தான் இருக்க முடியும் என்கிறார். தஞ்சைப் பெரிய கோயிலின் கல்வெட்டு ஒன்றும் பெண்கள் அர்ச்சனை செய்ததை உறுதிப் படுத்துகிறது என்கிறார். அர்ச்சகர்களே தங்கள் விருப்பத்திற்கு ஆகமங்களை மாற் றிக் கொள்கிறார்கள் என்பது குறித்து இவ்வாறு எழுதுகிறார் நீதியரசர் ஏ.கே. ராஜன்.

“நடைமுறைகளை, அதாவது ஆகமவிதிகளை, பூசை செய்யும் அர்ச்சகர்கள் தாங்களே, வேண் டும் போதெல்லாம் மாற்றிக் கொள்கிறார்கள். அதைப் பூசை செய்யும் எந்த அர்ச்சகரும் எதிர்த் துப் பேசுவதில்லை. அதனை ஆகமமீறல்கள் என்று எண்ணுவ தும் இல்லை. பக்தர்களுக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது என்பதால் அவர்களிடமிருந்து எதிர்ப்பு எதுவும் எழுவதில்லை. ஆசிரியர் இதைச் சொன்னதோடு நின்றிருக்கக் கூடாது. அறநிலையத் துறையையும், கோயில் தர்மகர்த் தாக்களையும் ஒரு ‘பிடி’ பிடித் திருக்க வேண் டும்.

ஆகமம் பற்றிய உண்மை நிலையை இன்னொரு அத்தி யாயத்தில் பட்டியலிடுகிறார். பல அதிர்ச்சி தரும் தகவல்கள், ஆனால் உண்மைத் தகவல்கள் இந்த நூலில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப் பட்டு இருக்கிறது. சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர்களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதிகள் தெரிந் துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள 116 அர்ச்சகர் களுள் ஆகமம் பயின்றவர்கள் 28 நபர்கள் மட்டுமே. 15 நாள் புத் தொளி பயிற்சி பயின்றவர்கள் 22 நபர்கள் மட்டுமே. மீதி 66 அர்ச்சகர் கள் தந்தை வழி ஆகமம் அறிந்தவர் கள். அதாவது முறையாக அறிந்த வர்கள் அல்ல. இப்படி இன்னும் பல செய்திகள் பரிமாறப்படு கின்றது.

தமிழில் அர்ச்சனை செய் வதற்கு உச்சநீதிமன்றம் தடை அல்ல என்பதைச் சுட்டும் ஆசிரி யர் வடமொழி அர்ச்சனை இல் லாத கோயில்களில் கூட வட மொழி ஆதிக்கம் ஏற்பட்ட நிகழ்ச்சி களையும் வாசகர் முன் வைக்கிறார்.

தமிழ் வழி அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல் போன்ற கோரிக்கைகளுக்கு வெறும் உணர்ச்சிப்பூர்வமாக, மேலோட்ட மாகக் குரல் கொடுக்காமல் ஆதாரப்பூர்வமாக, அறிவுப்பூர்வ மாகக் குரல் கொடுக்க இந்த நூல் ஒரு கைவாளாகவும், கேடயமாக வும் இருக்கும்.

“கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்”

ஆசிரியர்: நீதியரசர் ஏ.கே. ராஜன்

சேது பப்ளிகேஷன்ஸ்

ளு-79, அண்ணாநகர்,

சென்னை - 600 040.

பக்கம்: 87, விலை ரூ. 40/-

-----------நன்றி: தீக்கதிர்


Tamil 10 top sites [www.tamil10 .com ]