வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Showing posts with label ஆன்மிகம்-கடவுள்கள்-பெரியார். Show all posts
Showing posts with label ஆன்மிகம்-கடவுள்கள்-பெரியார். Show all posts

Wednesday, March 24, 2010

சாட்சாத் தினமலர் வெளியிட்ட தீபாராதனை லட்சணம்!

கருநாடக மாநிலம் கார்வாரில் காப்ரி என்-னும் கடவுளுக்கு எத்-தகைய அபிஷேகம் தெரியுமா? சாராயத்தால்; எந்த வகையில் தீபாராதனை தெரியுமா? சிகரெட்டால்.


ஏதோ நாத்திகர்கள் செய்யும் தமாஷ் அல்ல இது. ஆன்மிகத்தைக் காப்பாற்றவும், சங் பரி-வாரை வளர்க்கவும் அவ-தாரம் எடுத்ததுபோல் சிண்டை அவிழ்த்துவிட்-டுக் கிளம்பியிருக்கும் சாட்சாத் தினமலர் (22.3.2010, பக்கம் 3) தான் இதனை வெளியிட்டுள்ளது.

ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் அல்ல; ஆயிரம் லிட்டர் சாராயம் அபி-ஷேகமாம். ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய வழிபாடு உண்டாம். இப்படி வழிபடுபவர்கள் கோவாவில் அடிமை-களாக நடத்தப்பட்ட ஆப்பிரிக்கர்களின் சந்ததியினராம்.

படையல்கள் எல்-லாம் மாமிசம்தானாம். இப்படியெல்லாம் படைத்-தால் தங்களுக்குத் தேவையானதை எல்லாம் காப்ரி கடவுளால் கிடைக்குமாம்.

இதில் ஆச்சரியப்படு-வதற்கு ஒன்றுமில்லை. கடவுளை உண்டாக்கிய-வர்கள் மனிதர்கள்தானே! அப்படியிருக்கும்போது தன்னைப் போன்ற உருவ அமைப்பும், தனது உணவு மற்றும் பழக்க வழக்கங்களை தம்மால் உருவகப்படுத்-தப்பட்ட அந்தக் கட-வுளின்மீது ஏற்றுவதும் இயல்புதானே.

கோவாவில் மட்டு-மல்ல. உலகம் முழு-வதும் கடவுள் உண்டாக்-கப்பட்ட விதம் இந்தக் கதியில்தான்.

ஆப்பிரிக்காவில் கற்பிக்கப்பட்ட கடவுள்-கள் யானையின் மீது சவாரி செய்யும்_ கார-ணம் அங்கு யானைகள் அதிகம்.

எஸ்கிமோக்கள் வாழும் பகுதிகளில் உருவகப்படுத்தப்பட்ட கடவுள்கள் எல்லாம் மிருகத்தோலை உடுத்துக் கொண்டிருக்கும். காரணம். அங்கு குளிர் அதிகம். அம்மக்கள் தாங்கள் உடுத்திக் கொண்-டிருக்கும் அதே மிருகத் தோலை தங்-களால் படைக்கப்பட்ட கடவுள்களுக்கும் கொடுத்திருக்கின்றார்கள்.

நீக்ரோக்களின் கட-வுள்களின் தலை முடி-யும் சுருண்டு இருக்கும். காரணம் வெளிப்படை-யானதே.

கடவுளைக் கற்பித்த-வன் மனிதன் என்பதற்-கும், அது காட்டுமிராண்-டிக்கால கற்பனை என்-பதற்கும் வேறு என்ன எடுத்துக்காட்டுகள் தேவையோ!

- விடுதலை மயிலாடன் (24.03.2010)

Tamil 10 top sites [www.tamil10 .com ]