வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, January 05, 2012

பார்ப்பானை (பிராமணன்) தெரியுது....அவன் உன்னை கீழ்மகனாக சித்தரிக்கும் சூத்திர பட்டம்?


ஒரு நண்பர் கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது, கீதை பற்றி ரஷ்யாவில் நடந்த பிரச்சனை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன்....அப்பொழுது, நான்கு வருணம் பற்றியும் சொன்னேன்....அதற்க்கு அவர், சூத்திரன் என்றால் என்ன? என்றார்...சரி, உங்கள் வாழ்க்கையில் நடந்த சிலவற்றை பற்றி நான் கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள் என்றேன்....சரி என்றார்.

நான் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பினேன்.

என் கேள்வி: கல்யாணம் எப்படி பண்ணுனிங்க?
அவர் பதில்: பார்ப்பான்(அய்யர்) வந்து பண்ணினார்

என் கேள்வி: ரெண்டு வீடு வாங்கினீர்களே அது திறப்பு விழா என்று ஏதும் செய்தீர்களா?
அவர் பதில்: ஆமாம், கிரகபிரவேசம் அய்யர் (பார்ப்பான்) வந்து ஓம குண்டம்
 வளர்த்து உள்ளே போனோம்.

என் கேள்வி: கார்,பைக் வாங்கி இருக்கிங்களே, அதற்க்கு எதாவது?
அவர் பதில்: அதற்க்கு (அய்யரை) பார்பானை அழைக்கவில்லை...நான் கோவிலுக்கு பொய் அவரிடம் சொல்லி பூஜை போட்டு கொண்டுதான் வீட்டிற்கு எடுத்து வந்தேன்.

இப்படி இருப்பதால் தான் சூத்திரன் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியவில்லை....பார்ப்பானை (பிராமணன்) தெரியுது......அவன் உன்னை கீழ்மகனாக சித்தரிக்கும் சூத்திர பட்டம் உங்களுக்கே தெரியவில்லை.....

இதனால் தான் அவன் இன்னும் குதியாட்டம் போட்டுகொண்டு திரியுறான்....என்று சொன்னேன்.....இதனை சொன்ன பிறகு ஒரு நீளமான அமைதிதான் அவரது பதிலாக இருந்தது.



No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]