வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, February 22, 2011

திராவிட நாகரிகமும் ஆரிய நாகரிகமும்

திராவிட நாகரிகத்தின் வரலாறு:

ஆரிய நாகரிகத்தின் தோற்றத்தை பல வரலாற்று ஆசிரியர்கள் வரை-யறுத்துக் கூறியுள்ளனர்.  ஆரிய நாகரி-கத்தின் வரலாற்றுத் தடயங்கள் மிட்-டனி நாட்டில் கிடைத்துள்ளன.  அதன்-படி ஆரியர்கள் மிட்டனி நாட்டில் இருந்து தங்கள் மேய்ச்சல் (Steppe) வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினர் என்று அறியலாம் அதன் பின் பார-சீகத்தில் தங்கி அவெஸ்தன் மொழியி-னுடன் உறவு கொண்டு அவெஸ்தன் வேத புராணத்தின் கருத்துகளைச் சுமந்து-கொண்டு ஆரியர்கள் இந்தியா-வில் கி.மு. 1500 இல் நுழைந்தபோது ரிக்-வேதமாக பரிமளித்தது. 

இந்தரிக் வேதம் நூல் வடிவாக மாற்றம் பெற்ற காலத்தைத்தான் சமஸ்கிருதத்தின் முன்னோடி மொழியான வேத மொழியின் தோற்றமாக அறிஞர்கள் கூறுவது கி.மு. 1200 முதல் 1000 வரை.  இந்தத் தகவலை மேலை நாட்டு மொழி அறிஞர் T.Burrow தன் நூலில் (“The sanskrit Language”) கூறுகிறார்.  எனவே வேதகால நாகரிகத்தை நிலைபெற்ற ஆரியர் கலாச்சாரமாக கருதலாம்.


ஆனால் இந்திய நாகரிகம் மிகவும் தொன்மையானது.  இந்திய நாகரிகத்-தின் வரலாற்றுத் தடயங்கள் சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியில் வெளிப்-பட்டன.  சிந்து சமவெளி நாகரிகத்தின் கால அளவு கி.மு. 3000 முதல் 1700 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சிந்து சமவெளி நாகரிக சின்னங்களில் கிடைத்துள்ளவற்றில் முக்கியமானவை _ பெண் தெய்வத்தின் சிலை, பசுபதியின் சிலை, காளையின் வடிவம் எழுத்து வடிவங்கள், எடைக்கற்கள் ஆகியன. இத்தகைய நாகரிகத்துக்கு சொந்தக்-காரர்கள் இந்தியர்கள் சிந்து சமவெளி-நாகரிகத்தை ஆரிய நாகரிகமாக சித்-திரிக்கும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டன.

சிந்து சமவெளி நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் இந்தியாவின் பூர்விக குடிமக்கள் ஆவார்கள்.  அத்தகைய பூர்-விக குடிமக்களின் மிகவும் தொன்மை-யானவர்கள் தமிழர்களே ஆவர்.  ஏனென்றால் அப்போது இந்தோ ஆரிய மொழிகள், மற்றும் திராவிட மொழிகள் எதுவும் தோன்றவில்லை. 

எனவே சிந்துசமவெளி நாகரிகத்துக்கு உரிமை கொண்டாடும் நிலையில் இருப்பவர்கள் இந்திய நிலப்பரப்பில் தமிழர்கள் மட்டுமே உள்ளனர்.  இதை உறுதிப்படுத்தும் வகையில் பல ஆதாரங்கள் சொல்லலாம்.  அவற்றில் சிலவற்றை சொல்லுகின்றேன்.

கடல் கொண்ட தென்னாடு எனும் நூலில் கா. அப்பாத்துரையார், கடலில் மூழ்கிய லெமுரியா கண்டம் ஆஸ்தி-ரேலியா கண்டத்தினையும், ஆப்பிரிக்-காக் கண்டத்தினையும் இணைத்து ஒரே நிலப்பரப்பாக விளங்கியது.  இது நடந்தது 40000 ஆண்டுகளுக்கு முன்னர். மேற்கண்ட கண்டங்களில் ஆஸ்திரேலி-யாவின் பூர்விகக் குடி மக்களின் முன்னேற்றம் வெள்ளையர்களின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டது.

இதே போல் ஆப்பிரிக்க கண்டத்திலும் பல காலம் மனித உரிமைகள் பறிக்-கப்பட்டு அய்ரோப்பிய இன மக்களால் நசுக்கப்பட்டனர்.  இதன் தொடர்ச்-சியாக இந்திய மற்றும் ஆசியக் கண்டமும் ஆரியர் படையெடுப்பு முதல் வெள்-ளையர் படையெடுப்புவரை அடக்கு முறைக்குப் பலியாகின.  எத்தனையோ படையெடுப்புகளுக்குப் பின்னரும் தமிழும் அதன் அடிப்படையான தமிழர் நாகரிகமும் தொடர்ந்து சீரும் சிறப்புடன் விளங்குகிறது. 

இதனையே டாக்டர் மு. வரதராசன் அவர்களும், கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்களும் தங்கள் நூ-ல் களில் தமிழ்மொழி பற்றிய கருத்தினை கீழ்க்கண்டவாறு வெளியிட்டுள்ளார்கள்.  இந்த உலகில் 3000 ஆண்டுகளாக தொடர்ந்து இளமை குன்றாது மக்கள் பேச்சு வழக்கில் உள்ள ஒரே மொழி தமிழ் மொழி ஆகும்.

மேலும் பழங்காலத்திலேயே தமி-ழர்கள் கடல் வாணிகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடல் வாணிகத்திற்கு படகுகளைப் பயன்படுத்-தியதை உறுதி செய்யும் சொல் நாவாய், இந்தச் சொல் Navy எனும் ஆங்கிலச் சொல்லாக மாறியதாக சொல்வதில் தவறில்லை. 

ஏனென்றால் ஆங்கிலம் பிற்காலத்தில் தான் கிரேக்க மொழியில் இருந்து தோன்றியது.  இதை விளக்க Fank Joseph எழுதிய கடல் அகழ்வா-ராய்ச்சி குறித்த Atlantis and Lost civilization எனும் நூலிலிருந்து சில பகுதிகள் தரப்பட்டுள்ளன.

“The lemurians developed their own written language and carried it with them as they travelled east and west, where it became the Indus Valley script at Mohen Jo Darao, Indias first civilization”

“.............. about the only thing they shared with Atlantis was maritime skills”

லெமுரிய நாகரிகமே சிந்து சமவெளி நாகரிகமாக பரிமளித்தது என்பதனை அறியலாம்.  இந்த சிந்து சமவெளி நாகரி-கத்தின் வரலாற்று சின்னங்கள் தமிழ-கத்தில், பூம்புகாரில், செம்பியன் கண்டியூரிலும், கேரளாவில் எடைக்கல் என்ற இடத்திலும் சென்ற ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்திகள் தமிழரின் தொன்மையான நாகரிகத்தை வெளிப்படுத்துகின்றன.

நாகரிகத்தின் சிறந்த வெளிப்பாடு -மொழிகள்:

வரலாற்று ஆசிரியர்கள் நாகரிகங்-களை ஒப்பிடும் போது உடைகளைப்-பற்றியும், உறைவிடங்களைய் பற்றியும், உணவு வகைகளைப் பற்றியும், உலோ-கங்களின் பயன்பாட்டையும் விவரிப்-பார்கள்.  மேலே விவரித்த பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியது மொழியும், அதன் வளர்ச்சியும் ஆகும்.  அந்த வகையில் இந்தியாவில் நுழைந்த ஆரியக் கலாச்சாரத்தையும், ஆரிய மொழிகளைப்பற்றியும் சில கருத்து-களைச் சொல்ல விரும்புகிறேன்.

ஆரியர் கலாச்சாரம்: ஆரியர் கலாச்சாரம் “Steppe” என்ற இனத்தைச் சார்ந்ததாகும்.  இது ரஷ்யாவின் தென்பகுதிகளில் மிகுந்து காணப்பட்-டது.  மேய்ச்சல் கலாச்சாரம் நாடோடி வாழ்க்கை ஆகும்.  கூடாரம் அடித்துத் தங்குவதும், கொள்ளையடிப்பதும், ஒரே இடத்தில் தங்காமல் பசுமையான இடங்களைத் தேடி கால்நடையுடன் செல்வது ஆகும். 

இத்தகைய ஆரியர்கள் இந்தியாவில் பல குழுக்களாகப் பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டனர். (ரிக்வேதம்)  வெற்றி பெற்றவர்கள் பாரத-வம்சம், குருவம்சம், பாஞ்சால வம்சம் எனப் பலபிரிவுகளாக கங்கைக் கரையில் வாழ்ந்தார்கள்.  இங்கே குறித்துக்-கொள்ள வேண்டியது என்னவென்றால், ஆரியர்கள் வரும்போது கங்கை நதி இருந்-தது.  கங்கை உருவானதற்கும் ஆரியர்-களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

மேலும் வால்மீகி இராமா-யணத்தில் சொல்லப்படும் கதை ஆதார-மற்றது.  கங்கைக் கரையில் குடியேறிய ஆரியர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்-தார்கள்.  ஆனால் பின்னர் உயர்ந்த வர்ணத்தினர் விவசாயம் செய்வது தடைசெய்யப்பட்டது.  இருந்தபோதி-லும் உணவு தானியங்களை தானமாகப் பெறுவது, பிச்சை எடுப்பது தடை-செய்யப்படவில்லை.

எனவே, ஆரிய கலாச்சாரம் வேதம் ஓதுவதிலும், தானம் பெறுவதிலும் அடங்கிவிட்டது.

இவ்-வாறு ஆரிய நாகரிகம் வெளிப்பட்டது, யாகத்தில் ஈடுபட்டதால்தான் பல கால்நடைகள் அழிக்கப்பட்டன.  இத-னால் விவசாயம் பாதிக்கப்பட்டது.  விவசாயிகள் கொதித்து எழுந்தனர்.  எனவே, புதிய மதங்கள் உருவாகின. புத்த மதங்கள் இந்தியாவின் வட-கிழக்கே உருவானவை இந்த மதமும் சமண மதமும் ஆகும். 

வடமேற்கே இருந்து வந்த ஆரிய மதத்திற்கு எதிர்ப்பு வடக்கிழக்கே இருந்து வந்தது.  இந்த மதங்கள் அசோகர் காலத்தில் தெற்கே பரவின.  எனவே ஆரியர்கள் தங்கள் வலு-விழந்து தெற்கே வந்த போது புத்த, சமண மதங்கள் வலுவான நிலையில் இருந்தன.

இந்திய அய்ரோப்பிய மொழிக் குடும்பமும்  - சமஸ்கிருதமும் இந்தோ ஆர்யமொழிகளும் -சமஸ்கிருதமும்.

1786இல் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் வங்காளத்தில் கவர்னராகப் பணியாற்றினார்.  அப்போது அவர் சமஸ்கிருதம் படித்து, அதனை அய்-ரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டார்.  அதன் அடிப்படையில் இந்தோ _ ஆரியமொழிக் குடும்பத்தையும், இரானிய மொழிக் குடும்பத்தையும் உருவாக்கினார்.  இதில் இந்திய மொழிகளைச் சேர்ந்த அஸ்ஸாமி தொடங்கி மராத்தி வரை சேர்த்தார்.  இதில் திராவிட மொழிகளைச் சேர்க்கவில்லை.  இந்த மொழிக்குடும்பம் அமைப்பு மொழி ஆராய்ச்சியில் இன்று-வரை முக்கியப் பங்கு வகிக்கிறது. 

அதில் உள்ள குறைபாடு:

(1) பல வட இந்திய மொழிகள் சமஸ்கிருதத்தின் அடிப்-படையில் உருவானதாக ஒரு தோற்றம் தருகின்றது

(2) இந்திய மொழிகளான திராவிட மொழிகளைச் சேர்க்காதது தவறு.

சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லாத மொழி, எந்த மாநிலத்திலும் ஆட்சி மொழியாக இல்லாத மொழி.  2001 கணக்கீட்டின்படி சில ஆயிரம் மக்களே பேசக்கூடிய மொழி:  இது எவ்வாறு இந்திய மொழிகள் உரு-வானதற்கு காரணமாக இருக்க முடியும்? 

மேலும் பாலி மொழியும், பிராகிருதமும் அசோகப் பேரரசர் காலத்தில் சிறந்து விளங்கின.  அப்போது சமஸ்கிருதம் வளர்ச்சி பெறவில்லை.  சமஸ்கிருதம் வளர்ந்த கதையை மேலைநாட்டு அறிஞர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

1) தனது சொற்களை சில முன்/பின் இணைப்புகளை சேர்த்து புதிய சொற்களை உருவாக்குதல்.

2) பிராகிருதம், பாலி போன்று சாதாரண மக்களால் பேசப்பட்ட மொழிகளில் இருந்து கடன் வாங்குதல்.

3) திராவிட மொழிகளில் இருந்து கடன் பெறுதல்.

4)  Austral Asiatic மொழிக் குடும்பத்-தில் இருந்து கடன் பெறுதல்.

5) கிரேக்கர், பாரசீகர் படையெடுப்-புகளால் ஏற்பட்ட கலப்புச் சொற்கள்.

6) புத்த, சமண சமயங்களின் இலக்கியங்களில் இருந்து பெறுதல். இப்படி பல வகையிலும் இந்தியாவில் நுழைந்த பின் ஆரியர்கள் தங்கள் மொழியை வளர்த்தனர். 

இந்தியாவி-லிருந்து சொற்களை பெற்ற ஒரு மொழி, மார்த்தி, பெங்காலி போன்ற மொழி-களை உருவாக்கினதாக சர் வில்லியம் ஜோன்ஸ் கூறுவது சரியல்ல (இந்திய தேசிய மொழிகளின் பட்டியல் தனியே தரப்பட்டுள்ளது).

மேலும் பாலி மொழி இந்திய மக்களால் பேசப்பட்டது ஆகும்.  இந்த மொழி தற்போது வழக்கில் உள்ள தமிழ்ச் சொற்களை உள்ளடக்கியது.  உதாரணம்:_ அம்மா, ஆமாம், அய்யா, குமுதம், குவளை (பாலி சொற்களின் பட்டியல் தனியே இணைக்கப்பட்டுள்-ளது.

திராவிட மொழியும், நாகரிகமும்

மொழியும், அதன் எழுத்துகளும் ஓர் இனத்தின் நாகரிகத்தை வெளிப்படுத்து-கின்றன.  தமிழ் தொன்மையானது.  அதன் எழுத்துகள் கண்ணெழுத்து, கோல் எழுத்து, ஆப்பு எழுத்து (கண்டுபிடித்தவர்  Sir. Henry Raulinson), சித்திர எழுத்து, (சிந்து சமவெளி அகழ்-வாராய்ச்சி), பிரம்மி எழுத்து (அசோகர் காலம்) என பல நிலைகளைக் கடந்து தற்போதுள்ள வட்டெழுத்து என்ற நிலையை சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் அடைந்தது (ஆதாரம் மு.வரத-ராசனார்). 

இத்தகைய தமிழ்மொழி திராவிட மொழிக் குடும்பமாக மாறியது. இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 மொழிகளை ஒப்பிட்டு ஒப்பிலக்கணம் எழுதினார், 1856 இல்  Bishop Cald Well.  அந்த திராவிட மொழிக் குடும்பத்தில் தற்போது 23 மொழிகள் உலகெங்கும் உள்ளதாக  Stanford B. Steever தனது நூலில் கூறுகிறார்.  (பட்டியல் இணைக்-கப்பட்டுள்ளது).

அதன்படி உலகெங்-கும் திராவிட மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை 220 மில்லியன் (ஆதாரம்  World Atlas 1991).  இதில் பெரும்பகுதி இந்தியாவில் வசிக்கிறார்கள் இவர்களின் நகரிகம் தொன்மையானது.  திராவிடர் நாகரிகத்தால் இந்தியா சிறப்பு பெற்றது.

உதாரணம், சிந்து சமவெளி நாகரிகம்.  இந்தியாவிற்கு வெளியே இருந்துவந்த பல மொழி-களுக்கும், பல நாகரிகங்களுக்கும் தனது மொழியையும், நாகரிகத்தையும் தந்து உதவியவர்கள் திராவிடர்கள். 

இந்தத் திராவிடர்மொழி வடமேற்கே பலுசிஸ்தானில் பிராகுயி என்ற மொழியாகவும், வடகிழக்கே ராஜ்கமல் என்ற மொழியாகவும் பேசப்பட்டு வருகின்றது.  திராவிட நாகரிகத்தின் தோற்றம் பற்றி இதுவரை எந்த வரையறையும் நிர்ணயிக்கப்படவில்லை.  இந்திய தீபகற்பத்தின் தோற்றம் வரையறுக்கப்படும்போது திராவிட நாகரிகத்தின் தோற்றம் வரையறுக்-கப்படும்.

ஆரிய மொழிகளில் இருந்து உரு-வானதாகச் சொல்லப்படும் அஸ்ஸாம், வங்காளம் போன்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட பல கணக்கீடுகளின்படி மூலமொழியான சமஸ்கிருதத்தில் பேசுபவர் எவரும் இல்லை.  அதே சமயத்தில் திராவிட மொழி பேசுபவர்-கள் பல ஆயிரக்கணக்கில் உள்ளனர்.  மேலும் தென்னிந்தியாவில் சமஸ்-கிருதம் பரவும் முன்பே புத்த சமண மதங்கள் வலுவடைந்துவிட்டன.  எனவே சமஸ்கிருதத்தின் தாக்கம் அதிகம் இல்லை.  இதை விளக்கப் பாலி மொழியில் உள்ள சொற்களில் சில தென்னாட்டில் பயன்படுத்தப்படும் சொற்களாக உள்ளன.  அவை:  கத்தரிக்-கோல், பரிகாசம், அனேகம், அதிதூரம், அதிபதி, நிலையம், நகரம், அங்காடி, கரிசல், கலகம், புஷ்பவதி, கர்ப்பிணி, கூனி (பட்டியல் இணைக்கப்பட்-டுள்ளது).

திராவிடர் எழுச்சி மற்றும் ஆரிய நாகரிகத்தின் வீழ்ச்சி

ஆரியரின் நாகரிகமான வேதகால நாகரிகத்தின் வீழ்ச்சி புத்த சமண மதங்-களால் உருவானது.  இந்த மதங்கள் இந்தியர்களால், இந்தியர்களுக்காக இந்திய மொழிகளில் நடத்தப்பட்டன.  இவை கடவுளை ஆராதிக்கும் பணியை விடுத்து, மக்கள் நலனைப் போற்றின.  அன்பு, அஹிம்சை போன்ற கொள்கை-களை வலியுறுத்தின. 

புத்த மதத்தைப் பரப்பிய அசோகர் எனும் இந்தியாவின் முதல் பேரரசர், யுத்தத்தினைத் தவிர்த்து, தன் குடிமக்களை தனது சொந்த மகன், மகள் போல நடத்தினார் (ஆதாரம் கல்வெட்டு). தருவது  History எனும் நூல் ஆசிரியர்  Adam Hart - Davis)  ஆரியக் கலாச்சாரத்தின் வீழ்ச்சியானது சிந்து சமவெளி அகழ்வராய்ச்சிகளுக்குப் பிறகு மேலும் தீவிரமடைந்தது.  அதை கீழே காண்போம்.

சிந்து சமவெளி நாகரிகமும், திராவிடர்களும்

1) பண்டைய காலத்தில் சிறந்த நாகரிகங்களாக சொல்லப்படுபவை எகிப்தியநாகரிகம், சுமேரிய நாகரிகம், லெமுரிய நாகரிகம், தமிழர்/திராவிடர் நாகரிகம் ஆகும்.  இந்த நாகரிகங்களின் மய்யப்பகுதியாக சிந்து சமவெளி அமைந்துள்ளது.  எனவே 1922 இல் ஜான் மார்சல் அகழ்வாராய்ச்சி செய்த கண்டுபிடிப்புகள் ஆதிமனிதன் பிறந்த இடத்தையும், அவன் பெற்ற நாகரிகத்தையும் வெளிப்படுத்த உதவும்.

2) இதில் லெமுரிய கண்டம் கட-லால் மூழ்கடிக்கப்பட்டபோது அதில் வசித்த மனிதர்கள் மற்ற நிலப்பரப்பு-களுக்கும், உயர்ந்த மலைப்பகுதிகளுக்-கும் தப்பிச் சென்றுவிட்டனர் என்று வரலாறு கூறுகிறது.

ஆதாரம்: கடல் கொண்ட தென்னாடு  By கா. அப்பா-துரையார்,  Atlantis and other Lost Civilisation By Frank Joseph.

3) எஞ்சியுள்ளவற்றில் திராவிடர் நாகரிகமும், சுமேரிய நாகரிகமும் சமகாலத்தவை, ஒன்றான இயல்பு உடைய-வையும் ஆகும். Cambridge History of India Vol. 1 என்னும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது: 

திராவிட இனத்திற்கும், சுமேரிய இனத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை சந்தேகத்-திற்கு இடமில்லாதது. சுமேரியர்கள் கூட (திராவிடர்களைப் போல) சப்பையான மூக்கினை உடையவர்-களாக இருந்தார்கள்.

டாக்டர் குகா கூறுவது: மெசப-டோமியா அருகில் உள்ள  Ur  (ஊர்) என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மண்டையோடும், மதராஸ் இராஜ-தானியில் ஆதிச்ச நல்லூரில் கண்டெ-டுக்கப்பட்ட மண்டையோடும், இலங்-கையில்  Veddah (வேடன்)இல் கண்டெ-டுக்கப்பட்ட மண்டையோடும் ஒன்றுக்-கொன்று தொடர்பு உடையவை.

4) மேலே கூறிய கருத்துகள் முற்போக்கு மற்றும் ஒற்றுமை உண்டாக்-கும் மனம் கொண்டவர்களின் நேரான அணுகுமுறை ஆகும்.  அதற்கு எதிராக பிளவு சக்திகளின் தீய அணுகுமுறையால் சுயநலத்தோடு சிந்துவெளி நாகரிகத்தை ஆரியநாகரிகம் என சித்திரிக்க செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன.  விவரம் பின்-வருமாறு:

அ) ஆரியர்களின் வாதங்களை சிந்து சமவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய சர்.ஜான் மார்ஷல் நிராகரித்தார்.

ஆ) வேத காலத்தை சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்டதாக காண்-பிக்க முயற்சித்தார்கள்.  ஆனால் அவர்-களின் வேதமே அனுமதிக்கவில்லை. 

வேதத்தில் சொல்லப்பட்ட செய்திகள், கருத்துகள், வேதகாலத்தை பின்னோக்-கித் தள்ள அனுமதிக்கவில்லை.  வேதங்களில் ஒருசில மனிதர்களின் எண்ணத்தில் உதித்த மாயத்தோற்றம், சிந்து சமவெளி நாகரிகம் சூரிய ஒளியில் மின்னும் உண்மையானபருப்பொருள்.

இ) வேதகால நாகரிகம் கிராம நாக-ரிகம்; சிந்து வெளி நாகரிகம் நகர நாக-ரிகம்.
ஈ) ஆரியர்கள் மாமிசம் சாப்பிட்-டார்கள். ஆனால் மீன் சாப்பிட-வில்லை.  சிந்து வெளிமக்கள் மீன் சாப்-பிட்டார்கள்.

உ) ஆரியர் குதிரையைப் பயன்-படுத்தினர்:  சிந்துவெளி மக்கள் குதிரை உபயோகம் அறியாதவர்கள்.

ஊ) சிந்துவெளியினர் லிங்கத்தை, பெண்களை, வணங்கினார்கள்.  ஆரியர்-கள் இந்திரனை வணங்கினார்கள்.

எ) சிந்துவெளியினர் எழுதத் தெரிந்தவர்கள், வணிகர்கள் ஆரியர்கள் எழுதத் தெரியாதவர்கள்.

ஏ) ஆரியர்கள் பசுவை வணங்-குபவர்கள். சிந்து சமவெளியினர் காளையை வணங்குபவர்கள். காளையை குதிரையாக சித்திரிக்க முயன்றது தோல்வியுற்றது (செய்தி:  ஜனவரி 2010 தேதியிட்ட  Frontline ஏடு).

இந்த வேறுபாடுகள் சிந்துசமவெளி நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களாக ஆரியர்கள் இருக்க முடியாது என்பதை வெளிப்படுத்துகின்றது.

முடிவுரை:

வேதந்தான் இந்த உலகத்தின் தோற்றத்திற்குக் காரணம்:

வேத கால நாகரிகந்தான் இந்தியாவின் நாகரிகம்; இந்திய மொழிகளின் தாய்மொழி சமஸ்கிருதந்தான்; என பல வகையான மாயத் தோற்றங்களை உருவாக்கியி-ருந்தார்கள், ஆரியர்கள்.  அந்த ஆரியர்-களின் எண்ணங்களுக்கு சம்மட்டி அடி தரும் வகையில்,

சிந்த சமவெளி நாகரிகம், அகழ்வாராய்ச்சிகளால் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது, 1922 இல்  Sir John Marshal என்பவரால்.  வேதகால நாகரிகத்தைவிட பலமடங்கு உயரிய நாகரி-கத்துக்குச் சொந்தக்காரர் _ ஆரியரின் வருகைக்கு முன் இருந்த இந்திய பூர்விகக் குடி மக்கள்.  அந்த பூர்விகக் குடி மக்களில் தொன்மை-யானவர்கள் தமிழர்களே என்பதை அறிவோம். 

இதை வலுப்படுத்தும் வகை-யில் ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது. 

இது உலகத்தில் முதல் மனிதன் தோன்-றிய, ஆப்பிரிக்காவில் _ எத்தியோப்பி-யாவின் நாகரீகத்தை சொல்கின்ற நூலில் காணப்படுகின்றது _ நூலின் பெயர்  “Ethiopia and the Origin of Civilization, Page -12)

அதனை இங்கு தருகிறேன். Ethiopia and the origin of civilization by John G. Jackson (Page12)

“The opinions of Sir Henry Rawlison are reinforced by the researches of his equally distinguished brother Professor George Rawlison in his essay “On the Ethnic Affinities of the Races of Western Asia” which directs our attention to - “The uniform voice of primitive antiquity, which speak of Ethiopians as a single race, dwelling along shores Southern Ocean From India to the Pillars of Hercules (Herodotus Vol.I, Book I, Appendix Essay XI-Section 5).  Rawlin adds in explanation notes, which we here reproduced: “Recent linguistic discovery tends to show the Casthite or Ethiopian race did, in the earliest times, extent itself from the Indus along the sea coast along the shores of the Southern Ocean from Abissinia to India.  The while Peninsula to India, was peopled by a race of this character before the influx of the Aryans, it extended from the Indus along the sea coast through the modern Baluchistan and Kerman.....”

Franck Joseph தனது நூலில் தெரிவித்தபடியும், அப்பாத்துரையார் தனது நூலில் தெரிவித்து இருந்தபடியும், நமக்கு தெரிவது எத்தியோப்பியா, சிந்து வெளிப்பகுதிகள், இந்திய பகுதி, லெமுரியாக் கண்டம் முதலானவை ஒரே இன மக்களை ஆரியர்கள் வரு-கைக்கு முன் கொண்டிருந்தன என்பது ஆகும்.  அந்த இனத்தின் தடயங்கள் சிந்து சமவெளி குறித்து ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.  அதை இந்தியா-விற்குத் தந்தவர்கள் திராவிடர்கள் ஆவர்.

உலகத்திலேயே மிகப் பலம் பொருந்-திய நாடான இங்கிலாந்தி கப்பல் படைக்கு  Navy என்ற பெயர் தந்தது தமிழ்சொல் நாவாய்

இந்திய நாட்டிற்கு ஜம்புகத்தீவு என்ற பெயர் இருப்பதாக பாலிமொழி கூறுகிறது.  இந்த  Jambu என்ற வார்த்-தைக்கு  rose apple  என்று பாலி மொழி-யில் பெயர் அதாவது நாவல் பழம்; ஆங்கிலத்தின் Jamun fruit என்று பெயர். இந்தியில் ஜாமுன். எனவே வடமொழி-களில் குறிப்பிடும் ஜம்புத்தீவும் தமிழில் குறிப்பிடும் நாவலந்தீவும் ஒன்றே எனக் கொள்ளலாம். 

எனவே இந்தியாவின் உண்மையான பெயர் ஜம்புத்தீவு அல்லது நாவலந்தீவு.  எனவே தற்போது இந்தியில் பாரத் என்றும் உருதில் இந்துஸ்தான் என்றும் அழைக்கப்படும் இந்தியாவை நாவலந்தீவு எனப் பெய-ரிடப்பட, செம்மொழி கண்ட தமிழக முதல்வர் கோரினால் அது சால சிறந்-தது.

முதல்வரைத் தந்தது திருக்குவளை:  இந்தத் திருக்குவளைதான் இந்தியா-விற்கு வழிகாட்டுகிறது.  இந்தக் குவளை மலர் பாலிமொழியில் குவலயா என்று சொல்லப்படுகின்றது.  இது வடக்கும் தெற்கும் இணைந்ததைக் காட்டுகின்றது.

எனவே, திராவிடர்கள் தமிழர் என்று அழைக்கப்பட்டாலும், மதராஸி என்று அழைக்கப்பட்டாலும், அரவாடு என்று அழைக்கப்பட்டாலும் அவர்கள் நாவலந்-தீவில் உள்ள இந்தியரே!

---------P. கோவிந்தராசன் B.E., M.B.A.,(M.A.) அவர்கள் விடுதலை (13.02.2011) மலரில் எழுதியது


2 comments:

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

பரணீதரன் said...

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]