வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, April 12, 2010

கல்கி இதழ் கூறுவது திருவிழாவா? பார்பன தந்திரமா? சிந்தீப்பீர்

திருவிழா ஸ்பெஷல் என்ற தலைப்பிட்டு இவ்-வாறு கல்கி இதழ் பல்-வேறு தகவல்களைத் தந்திருக்கிறது.


பிரமோத்சவம் என்-றால் என்ன என்பதில் ஆரம்-பித்து பல தகவல்-களை அது தந்திருக்கிறது.

சாமிக்கு எப்படி எப்-படியெல்லாம் அலங்-காரங்-கள் என்று ஆரம்பித்து, உத்ஸவங்களுக்குள்ளிருக்கும் தாத்தா _ பாட்டிக் கதை-கள்-வரை சொல்லப்பட்-டுள்ளது.

கிராம தேவதை உத்ஸ-வம் என்று தொடங்கி (கிராமத்துக் காவல் தெய்-வத்துக்கு நடைபெறும் விழாவாம்).

அனுக்ஞை, வாஸ்து சாந்தி, ம்ருத் சங்கிரகணம், ரக்ஷாபந்தனம், பேரீதாட-னம் அஸ்திர தேவர் பூஜை, திக்பந்தனம், விசர்-ஜனம், தீர்த்தவாரி ரக்ஷா விசர்ஜனம் என்று ஒரு நீண்ட பட்டியல் தரப்பட்-டுள்ளது.

இதனைப் படிக்கும் எவருக்கும் ஓர் அய்யப்-பாடு எழத்தான் செய்யும்_ எழுந்திடவும் வேண்டுமே!

இந்தச் சொற்களில் ஒன்றுகூட தமிழ் இல்-லையே, அனைத்தும் சமஸ்-கிருதத்தில்தானே இருக்-கிறது. அப்படியிருக்கும்-பொழுது தமிழ்நாட்டுக்-கும், தமிழர்களுக்கும், இந்தக் கோயில் விழாக்-களுக்கும் என்ன ஒட்டு உறவு?

நியாயமாக எழ வேண்-டிய அறிவார்ந்த வினா இது என்பதில் அய்ய-மில்லை.

ஆரியர் தமிழில் தமிழ்-நாட்டில் ஊடுருவியதன் பின்விளைவே இந்தக் கோயில் விழாக்கள் என்-பதற்குப் பெரிய பெரிய ஆய்வுகள் தேவைப்படா.

இந்தக் கோயில் சமாச்-சாரங்கள் என்பவற்றைத் தோலுரித்துப் பார்த்தால் பார்ப்பன ஜாதிக்கு அதி-முக்கியத்துவம் தலை-தூக்கி நிற்பதை எளிதில் அறிந்துகொள்ள முடி-யுமே!

கோயில், அதற்குள் வடித்து வைக்கப்பட்டுள்ள மூல விக்ரகம், இவற்றின்-மீது மக்களுக்கு மிகப்-பெரிய பக்தியை _ மரி-யாதையை உண்டு பண்-ணுவது; இவற்றோடு அணுக்கமாக _ நெருக்-கமாக_ தொடர்புடையவர்-களாக இருப்பவர்கள் பார்ப்பனர்கள் என்ற எண்-ணத்தை ஏற்படுத்துவது _ இந்தப் பின்னணியில் அவர்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள், கட-வுளால் மேல் நிலையில் படைக்கப்பட்டு இருப்பவர்-கள் என்ற நம்பிக்கையை அழுத்தமாக நிறுவுவது இதன் பின்னணியில் இருப்பதைக் கவனிக்க-வேண்டும்.

கடவுளுக்கு உகந்த மொழியும், பார்ப்பனர்-களின் சமஸ்கிருதம்தான் _ அதுதான் தெய்வ மொழி என்று ஆக்கப்-பட்டதன் சூழ்ச்சியைக் கவனித்தால்_ கடவுள் என்பதைவிட, அந்தப் பெயரைப் பயன்படுத்தி பார்ப்பன ஜாதி ஆதிக்-கத்தைக் கட்டுவதுதான் இந்தக் கோயில், குளங்-களின் தந்திரம் என்பதைப் பக்திப் போதையில் தத்-தளிக்கும் மக்கள் உணர்-வார்களா?

- விடுதலை (11.04.2010) மயிலாடன்



No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]