வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Thursday, March 25, 2010

ஸ்ரீராமநவமி கொண்டாடும் சூத்திரத் தமிழர்களே..கொஞ்சம் சிந்தியுங்கள்.!

இன்றைக்கு (24.3.2010) இராமன் பிறந்த நாளாம்! ஸ்ரீ இராம நவமி என்ற பெயரே, தமி-ழர்-களுக்கும், அக்கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்பதைக் காட்டும். கடவுளுக்குப் பிறப்பும்_ இறப்பும் இல்லை என்று கூறும் கடவுள் நம்-பிக்கையாளர்கள் _பக்தர்களின் மனக்குழப்பம் மலைபோன்றது என்பதற்கு இந்தக் கடவுள்-களின் பிறந்த நாள் நிகழ்வுகளே போதுமானது ஆகும்.


ஸ்ரீராமநவமி
கிருஷ்ணஜெயந்தி (கோகுலாஷ்டமி)
விநாயகர் சதுர்த்தி இப்படிப் பலப்பல.

கேட்டால் ஆண்டவன் பூமியில் அவ-தரித்தார். ஆகவே இந்நிலை_ பிறப்புகளைக் கொண்டாடும் நிலை என்ற ஒரு பொய்ச் சமாதானத்தைக் கூறுவார்கள். அப்படியானால் விஷ்ணு_- திருமால்_- போன்று ஏன் சிவன் 10 அவதாரங்களை எடுக்கவில்லை? என்று கேட்டால் பதில் வராது!

10 அவதாரங்களிலேயே மிக அதிகமாக மக்களிடம் பிரபலமாக்கப்பட்ட அவதாரங்கள்_- கதைகள் இராமனுடையதும், கிருஷ்ணனு-டையதும்தான்.

முதலில் இராமன் காரணம், அந்த புரு-ஷோத்த இராமனின் முக்கியப் பணி பார்ப்பன வர்ணாஸ்ரம தர்மத்தைக் காப்பாற்றவும், பெண் அடிமைத்தனத்தைப் பேணிக் காப்பாற்றவும், ஆன பல தர்மங்கள் பரப்புவதற்குப் பயன்படும் என்பதால்தான்!

அமைதியான நாட்டில், இன்று நம் மக்கள் மத்தியில் அமளி, துமளி, கொலை, கொள்ளை, மதச்சண்டையில் மண்டை உடைதல் எல்லாம் நிகழ்வது, இராமன் பிறந்த இடத்தில் கோயில் கட்டுவோம் என்று முஸ்லிம் மதத்தினரை வம்புக்கு அழைத்ததால்தானே!

தீவிரவாதத்திற்கு உரமிடுவது இந்து மதத்தின் பேரால் பார்ப்பன வெறி அமைப்புகள் நடத்தும் அரசியல்தானே!

ஸ்ரீராமநவமி கொண்டாடுவோருக்கு 1928_லேயே_- அதாவது 82 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பச்சை அட்டை குடிஅரசு வார ஏடு மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு இன்றுவரை எவரும் பதில் அளித்ததே இல்லை!

1928 இல் வடநாட்டு சர்தார் வல்லபாய் படேல் (இவர் பார்ப்பனரல்லாதவராக இருந்தாலும்) பார்ப்பன இந்து மதவெறியராக இருந்து, காந்தியாரிடமே உண்மையாக அவர் வாழ்ந்தபோதும் சரி, - மறைந்த காந்தியார் பின்ன-ரும் சரி இல்லாது, பிரதமர் நேருவுக்குப் பின், துணைப் பிரதமர் தகுதியில் வாழ்ந்த ஒருவர்; மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் எழுதிய மிஸீபீவீணீ ஷ்வீஸீ யீக்ஷீமீமீபீஷீனீ என்ற நூலில் இந்த உண்மையை மனம் நொந்து கொட்டியுள்ளார் அபுல்கலாம். பார்ப்பனர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து சுயமரியாதை இயக்கத்தைத் தாக்கிப் பேச வைத்து, பத்திரிகை விளம்பரத்தை சுயமரியாதை இயக்கத்திற்குத் தாராளமாகத் தந்தனர்!

அதற்கு ஒரு தலையங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் (1928 இல்) எழுதியது ஸ்ரீராமநவமி கொண்டாடுவோருக்கும் பொறி தட்டும் கேள்விகளாகும்!

இதோ தந்தை பெரியார் தம் சிந்தனையைத் தூண்டும் கேள்விக்கணைகள்:

தவிர இராமனையும், சீதையையும் சுயமரியாதை இயக்கம் இழித்துச் சொல்கிறது என்று திரு. படேல் சொல்லியிருக்கிறார்.

எந்த இராமனையும், சீதையையும் என்று திரு. படேல் சொல்லி இருந்தால் யோக்கியமாக இருந்திருக்கும்.

(1) பார்ப்பான் காலில் விழுந்த இராமனையா?
(2) மாமிசம் சாப்பிட்ட இராமனையா?
(3) கொலை செய்த (சம்பூகனை, வாலியை) இராமனையா? பார்ப்பனரல்லாத சம்பூகன் என்ற சூத்திரன் கடவுளைத் தோத்திரம்_- தபசு செய்ததற்காகக் கொன்ற இராமனையா?
(4) சுயநலத்திற்காக தம்பி பேச்சைக் கேட்-டுக்கொண்டு, நியாய அநியாயம் பார்க்காமல் பாரபட்சமாய் அண்ணனை (வாலியை)க் கொன்ற இராமனையா? _ (அதுவும் மரத்திற்குப் பின் மறைந்திருந்து).
(5) வருணாசிரமத்தை ஆதரித்த இராம-னையா?
(6) கடைசியாகப் பெண்ஜாதி (சீதை) நட-வடிக்கை மீது சந்தேகப்பட்டு கர்ப்பத்துடன் காட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்த இராமனையா?

எந்த இராமனை, எந்த இராமனை? என்று படேலைக் கேட்கிறோம்.

அதுபோல நாம் குற்றம் சொல்லும் சீதையும்,

(1) இராமாயண சீதையா? அல்லது
(2) காந்தியுடைய வேறு சீதையா? என்பதைச் சொல்லிவிட்டால் ஒரு வரியில் ஒழிந்துபோகும்! அதுவரை இராமன் இழிவும், சீதை குற்றமும் மூடி மறைக்க முடியாதென்று கண்டிப்பாய் சொல்வோம்.

இதைச் சொல்லி பாமர மக்களைக் கிளப்பி விடுவதற்காக சுயமரியாதை இயக்கம் சிறிதும் பயப்படாது என்று சொல்லுவோம்!

என்னே அருமையான சிந்தனை?

இராமன்_- சீதை_- இராமாயணம்- இவைகளை வைத்துத்தானே வடநாட்டவர்கள் அரசியல் நடத்த மூலதனம் தேடுகிறார்கள்?

1971 இல் இராமனைச் செருப்பால் அடித்தவர்களோடு (தி.க.வினரோடு) இணைந்த தி.மு.க. _ கலைஞர் கட்சிக்கா உங்கள் ஓட்டு என்று, காமராசரும், ஆச்சாரியாரும் இணைந்து குரல் கொடுத்தும்கூட, தமிழர்கள் ஏமாறாமல், தி.மு.க.வுக்கு 184 சட்டமன்ற இடங்களைத் தந்து, காங்கிரஸ் பெற்ற 50 இடங்களை 15 ஆக ஆக்கியது எந்த அடிப்படையில்?

தந்தை பெரியார் தம் சுயமரியாதை இயக்கம் செய்த பிரச்சாரத்தால்தானே?

அது மட்டுமா? 1992 இல் இந்தியாவின் இதர மாநிலங்கள் மதக் கலவரத்தால் நூற்றுக்கணக்கான கொலை,- கொள்ளை-களில் சிக்கித் தவித்த நேரத்தில்_- தமிழ் நாடுதானே அமைதிப் பூங்கா? மத நல்லிணக்கத்தோடு, சகோதரத்துவத்துடன் இருந்த ஒரே மாநிலம்! திராவிடர் இயக்கச் சாதனைதானே!

எனவே, நாட்டை அப்போதும் சரி_- இப்போதும் சரி_- காப்பாற்றியது _ காப்பாற்றுவது_ அயோத்தி இராமன் அல்ல!

சுயமரியாதை இயக்கம் கண்ட ஈரோட்டு இராமன் என்ற இராவணன்தான் என்பது வரலாற்றின் பதிவு அல்லவா?

எனவே, ஸ்ரீராமநவமி கொண்டாடும் சூத்திரத் தமிழர்களே, சம்பூகனின் வதையைக் கொஞ்சம் சிந்தியுங்கள்.

காலாவதியான மருந்துகளைவிட மிகவும் ஆபத்தானது காலாவதியான கடவுள், மதக் கருத்துகளை ஏற்பது_ மூளைக்கு!

----- நன்றி விடுதலை ஆசிரியர் வீரமணி கட்டுரை (24.03.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]