வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, November 21, 2015

நூல் விமர்சனம்...

எந்தப் புத்தகத்தையும் படித்து முடித்து வெளியேறிட முடியும் என நம்புகிறவன் நான். கதைகளாயினும், கட்டுரைகளாயினும் அவை முன்வைக்கும் கருத்துக்களை ஏற்றோ, மறுத்தோ நம்முடைய கை அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டிடும். நம் கண்முன்னே வார்த்தைகள் நகர்ந்து கொண்டேயிருக்கும். இப்படியான வாசக முறையை ஏற்பவரில்லை ஷோபா சக்தி. அப்படியெல்லாம் நீங்களோ, நானோ சட்டச்சடசடவென புரட்டிட அவருடைய படைப்பிற்குள் உறைந்திருக்கும் எளிய சொற்கள் நம்மை அனுமதிப்பதில்லை. வாழ்வின் துயரங்களைச் சேர்த்து கட்டியிருக்கும் கதைப் பிரதிகள் வாசகனை நிம்மதியிழக்கச் செய்பவை. அவருடைய "கொரில்லா", "தேசத்துரோகி","வேலைக்காரியின் புத்தகங்கள்" ஆகியவற்றை வாசித்திருப்பவர்கள் இத்தகைய மனநிலையை அடைந்திருப்பார்கள். 

இலங்கை போருக்குப் பிறகான தமிழ்நிலத்தின் கதையையும், நிகழும் அரசியல் போக்கின் துயரைத் தாங்கிட முடியாது தடுமாறிடும் ஜனத்திரளின் மனநிலையையும் எழுதிட எழுத்தாளன் தேர்வு செய்கிற நிலம் வன்னி நிலம். நாவல் நிகழும் காலம் வரலாற்றின் பக்கங்களில் துரோகத்தின் அடையாளமாகவும், இன அழித்தொழிப்பின் குரூரமாகவும் பதிந்துள்ள முள்ளிவாய்க்கால் பெருந்துயருக்குப் பிறகான நாட்கள் தான். 

க்ஷடீஓ நாவல் நாலா திசைகளிலும் காலத்தின் பெரும் பாதைக்குள் உருண்டு புரள்கிறது. வன்னிப் பெருநிலம் எனும் நிலப்பகுதி உருவாகி நிலைத்த தன்மையையும் கூட சொல்ல முடிகிறது எழுத்தாளனால். பண்டார வன்னியனை அந்நிய ஆதிக்க அரசுகளின் ஆயுதங்கள் தின்று தீர்த்தன. இறந்தே போனான் அவன் என வெள்ளைக்காரன் மட்டுமல்ல, தமிழ் இளைஞர்களும் எளிய மக்களும் கூட நம்பத் துவங்கினார்கள். ஆனாலும் பண்டார வன்னியன் பிழைத்திருக்கவே செய்கிறான். ரகசியமாக வன்னிக் காடுகளுக்குள் பதுங்கியிருந்து இனத்தின் விடுதலைக்காக இயங்குகிறான் என்பதையே நாவல் எடுத்துரைக்கிறது. எழுதப்பட்ட நாவலின் பகுதி நமக்கு எழுதப்படாத பகுதிகளையும் கூட வாசக மனதிற்குள் விரிக்கிறது. இது தான் எழுத்தின் பலம். முள்ளிவாய்க்கால் பெருந்துயரக் கொடூரங்கள் மனித உரிமை ஆர்வலர்கள் எனும் பெயரில் இலங்கைக்கு வருகிற ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாகி விட்டதே. களப்பலி நிகழ்ந்த நிலம் எனும் வாதையையும் கூட நாவல் வாசிப்பின் ஊடாக புரிந்துணர முடிகிறது. 

நாவலோ, சிறுகதையோ அல்லது புனைவோ கட்டுரைகளோ எவையாயினும் அதன் கட்டமைப்பை முடிவு செய்வது கருத்தியல் சார்ந்த அவதானிப்புகளே. க்ஷடீஓ கதைப் புத்தகத்தின் கட்டமைப்பும், வடிவ நேர்த்தியும் தனித்துப் பேசிட வேண்டியவை. மையக்கதையிலிருந்து நாற்பது கதைகள் சரம்சரமாக விரிந்து செல்கின்றன. அவையாவும் பெரிய பள்ளன் குள்ளம் எனும் வனம் சூழ்ந்திருக்கும் ஊரின் கதைகளாகவே காட்சிப்படுகின்றன. பெரிய பள்ளன்குளம் என்றறியப்படுகிற அந்த ஊரின் ஆழமும், அகலமுமான பெரும்குளம், மனித உழைப்பினால் வெட்டி வடிவமைக்கப்பட்ட குளமல்ல; இயற்கை அதன் சீரான மாற்றங்களினால் மனிதர்களுக்காக மட்டுமின்றி விலங்குகளுக்கும், தாவரங்களுக்குமாக இருந்தது. அந்தக் கரையில் விரிந்து படர்ந்திருக்கும் மதுரமரமும், ஆதாம்சாமி வீடும் வெறும் சடப்பொருட்கள் அல்ல. மாறாக அந்த ஊரின் பலநூறு வருட ஞாபகங்களைத் தேக்கி வைத்திருக்கும் குறிப்பேடுகள். நாற்பது கதைகளுக்கும் ஊடாகப் பிரதிகளும் சேர்த்து எழுதப்பட்டிருக்கின்றன. உபபிரதிகளுக்குள் ஷோபா சக்தி எழுதிச் செல்வது வன்னியின் வரலாற்றைத் தான். 1980களின் வரலாற்று, அரசியல் நிகழ்வுகளை நாவலுக்கு ஊடாக நகர்த்திட "உபபிரதி" எனும் சொல்முறை ஷோபாசக்திக்கு உதவுகிறது. நாவலுக்குள் வருகிற மற்றொரு முக்கியமான பகுதி உரைமொழிப் பதிவாகும். ஊரின் ஞாபகங்களை படைப்பாளியிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறவர்கள் யாவற்றையும் உரைமொழிப் பதிவாக்கித் தருகிறார்கள். அதை அப்படி, அப்படியே ஷோபா படைப்பின் இடைவெளிகளில் பயன்படுத்திக் கொள்கிறார்.

 எல்லாவற்றையும் பற்றறுத்து துறவு நிலையை எட்டுகிற பௌத்த நெறியின் உச்சமான நிர்வாணம் குறித்த நுட்பமான வியாக்கியானங்கள் நாவலெங்கும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. மனித நிர்வாணத்தைக் காடு மறைக்கக் கூடும் என நிலவு நம்பியிருக்கிறது. அமையாள் கிழவியின் பிணம் பெரும்பள்ளன் குளத்திற்குள் மீனாக நீந்திக் கொண்டிருக்கிறது நிர்வாணமாக. மீள்குடியேற்றம் நிகழ்கிறது என அரசதிகாரம் படோபடமாக அறிவித்திருக்கிறது. ஆனாலும் எதுவும் மாறிடவில்லை. தமிழர் குடியிருப்புகளில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு ஏதிலிகளாக விரட்டப்படுவதும், மீள் குடியமர்வு எனும் பெயரில் ராணுவக் குடியிருப்பாக அவை உருமாறுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. 

கதைகளுக்குள் காட்சிப்படுகிற மதுரமரக் கரைவீடு "டைடஸ் லெமுவேஸ் வீடு" என்கிற வரலாற்றுப் பதிவும், அதன் உண்மைத் தன்மைக்குச் சான்றாக வைக்கப்படுகிற புகைப்படங்களும் கூட வரலாற்றையும், புனைவையும் பிரித்தறிவதற்கான சூட்சுமத்தைக் கற்றுத் தருகின்றன. தேசாந்திரியாக அலைந்து திரிந்து, தர்க்கம் செய்து லெமுவேஸ் வந்திறங்கிய வன்னி நிலம் தான் பெரிய பள்ளன் குளம் கிராமம். ஒடுக்கப்பட்டுக் கிடந்த பள்ளர் இன மக்களுக்கு கல்வியும், மருத்துவமும் தந்து சமூகப்படி நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கும். மக்களோடு விவாதித்து அதே நிலத்தில் ஆதாம்சாமி ஆகிவிட்ட ஒரு விதத்தில் அவர்களுடைய பூர்வீக சாமியான அண்ணன்மார் சாமிகளைப் போலாகி விடுகிறார். நாம் அறிந்திருக்கும் வரலாற்று விவரங்கள் தான் இவை யாவும். வெள்ளை நிறத்தோலோடு ஆசிய நிலத்தில் மதப் பிரசங்கம் செய்ய வந்திட்டவர்கள் அனைவரும் நிலத்தின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றோடு ஊடாடி இங்கேயே சமாதியாகி விட்டனர். இதற்குள் இயங்கும் மனிதநேய மனநிலைகளைப் பலரும் இங்கே விவாதித்திருக்கவே செய்திருக்கிறார்கள்.

 க்ஷடீஓ வடிவில் எதிரிகள் எனக் கட்டமைக்கப்பட்டவர்களை சுற்றி வளைத்து தாக்குகிற போர் முறையையே நாவலின் தலைச் சொல்லாக வடித்திருக்கிறார் எழுத்தாளர். நாற்புறமும் சுத்தி வளைக்கப்பட்டு குழந்தைகளும், பெண்களும் பலியிடப்பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகள் எல்லாம் முடிந்த பிறகும் கூட தாங்கள் கண்ணுற்ற காட்சிகளை ஒரு போதும் மறப்பதேயில்லை. ஒருவிதத்தில் அது அவர்களுடைய ஆழ்மனதின் பதிவாகவே உறைந்து விடுகிறது. அதனால் தான் அவர்களின் விளையாட்டுக்களாக அவை யாவும் புது வடிவம் பெறுகின்றன. ஓடிப்பிடி விளையாட்டு, அம்மா, அப்பா விளையாட்டு, பூப்பறிக்க வருகிறோம் எனும் மரபான விளையாட்டுகளின் இடத்தில் இப்போதெல்லாம் பதிலீடு செய்யப்படுவதாக ஷோபா சக்தி காட்சிப்படுத்தும் விளையாட்டுக்கள் நிஜத்தில் விளையாட்டா அல்லது களத்தின் போர்க் காட்சிகளா என நாவலை வாசிக்கிற நாம் தடுமாறிப் போகிறோம். பிள்ளைகள் புலிகளாகவும், ராணுவ வீரனாகவும் ஒருமாறி நிகழ்த்துகிற போர்க்களக் காட்சிகளை வாசித்திட முடியாது தடுமாறுகிறோம். இந்தக் குழந்தை விளையாட்டில் கலந்திருக்கும் சிறுவன் தொலைதூரத்திலிருந்து பெரிய பள்ளன் குளம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தவன். 

எல்லாம் முடிந்த பிறகும் கூட இன்னும் காழ்ப்பின் எச்சமும், கோபமும் படிந்திருப்பதாகவே சிங்கள அரசு எந்திரம் நீடித்திருக்கிறது என்பதையே நாவலின் கடைசிக்கதைகள் முன் வைக்கின்றன. சாதித் துவேஷத்திலிருந்து ஊரின் அடையாளத்தை துடைத்திட எண்ணிய இளைஞர்கள் பெரிய பள்ளன் குளம் கிராமத்தின் பெயரை கார்த்திகைக் குளம் என மாற்றிட முயற்சிக்கிறார்கள். ஆனாலும் நடப்பது வேறாகிறது. அருகாமை வெள்ளாங்குளத்துக்காரர்களின் முஸ்தீபும் அரசதிகாரத்தின் இயல்பான இனவெறியும் பெரிய பள்ளன் குளம் கிராமத்து மக்களை ஊரை விட்டே அப்புறப்படுத்துகிறது. எல்லோரும் வெளியேறிய பிறகும் எஞ்சியிருப்பது வாசகன் யோசித்தேயிராத காட்சிகளால் கதையை நகர்த்துகிற சாதுர்யமான எழுத்து ஷோபாசக்தியினுடையது. நிஜத்தில் ஊமைச் சிறுவனாக கிராமத்திற்குள் நுழைந்தவன் இளம் புத்த துறவி. அவன் நிலையிலிருந்து ராணுவத்தினரோடு விவாதிக்கிறான். ஊரில் இருக்கும் எவருக்கும் முழு உடல் இல்லை. அங்க`ஹீனர்களின் நிலமாக்கி விட்டீர்கள் போரின் பெயரால் என போரின் வன்மத்தைக் கட்டுடைக்கிறான் சிறுவன். வரலாறு ஒரு முழுவட்டம் தான் போல் தெரிகிறது. அசோகனுக்கு நிகழ்த்திய போதனையைப் போல போதனை தான் இருந்தது என்ன செய்ய, அரசதிகாரம் இளகாத இரும்பாயிருந்திடும் போது.

நன்றி: தீக்கதிர் , 22-11-2015



Tamil 10 top sites [www.tamil10 .com ]