வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, September 27, 2010

இனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது வேகவே வேகாது!

கேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்ற துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி...?

பதில்: பிராமணர்கள் உயர்ஜாதி-யினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது. சமுதாய நீரோட்-டத்தில் தங்களையும் அவர்கள் இணைத்-துக் கொண்ட நிலையில், அவர்களை ஒதுக்குவதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுது தோன்றியிருப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப்பிரிவினை ஆபத்து!

(கல்கி 19.9.2010 பக்கம் 30)

_ -இவ்வாறு கல்கி இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

28.8.2010 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் பக்கம் எட்டில் தலைப்புச் செய்தியாக:

Ignored by Political Parties and Denied Welfare, Large Sections of a Traditionally Elite in Poverty
Brahmins on the margins, Fight for survival எனும் தலைப்பில் வெளி வந்தது.

இதில் சோ ராமசாமியின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.“Brahmins are not wanted in Tamilnadu, beyond that I do not want to comment’’ என்று கூறியுள்ளார்.

ஆதங்கத்தோடோ ஆத்திரத்-தோடோதான் அய்யர்வாளின் வாயிலி-ருந்து இச்சொற்கள் கொப்பளித்துக் கிளம்பியிருக்க வேண்டும்.

அவர் எந்தக் கண்ணோட்டத்தில் சொல்லியிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல பார்ப்பனர்கள் என்பவர்கள் எங்கும் தேவைப்படாதவர்கள்தான்.

மனிதர்களாக இருப்பவர்கள் தேவையானவர்களே! பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் என்ற இறுமாப்புடன் - _ இன்றைக்கும் ஒவ்-வொரு ஆண்டும் அந்த ஜாதி ஆணவச் சின்னமான பூணூலைப் புதுப்பித்துக் கொள்பவர்கள், அக்கிரகாரத்துச் சிறுவர்களுக்குப் பூணூல் கல்யாணம் செய்து கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை இதன்மூலம் இழிவு-படுத்தக் கூடியவர்கள் சமுதாயத்துக்குத் தேவையானவர்கள் அல்லவே.

ஆச்சரியமாகக்கூட இருக்கிறது. இப்பொழுது எழுந்திருக்கும் இதே கேள்வியை தந்தை பெரியார் கேட்டு, அதற்கு விடையும் சொல்லியிருக்கிறார்.

நாம் உழைக்கிறோம்; உழுகிறோம். நம்மால் தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யா விட்டால், இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம்; நம்மால்தான் அத்தனைப் பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம்தான் வீடு கட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால்தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதிகளெல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலிய வசதிகள் அளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறோம்.

பார்ப்பனன் எவனாவது உழைக்கிறானா? எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கட்டுகிறாளா? கல் உடைக்கிறாளா? ஏன்? இவைகள் எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவைகள் எல்லாம் மாறி நாம் முன்னேற வேண்டு மென்றுதான் கேட்கிறோம் (விடுதலை 31.7.1951) என்று தந்தை பெரியார் இன்-றைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சி-னைக்கு எழுந்துள்ள வினாவுக்கு 60 ஆண்டு-களுக்கு முன்பே பதில் கூறியுள்-ளார்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் பார்ப்பனர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உழலுவதாகவும், புரோகிதர்களுக்கு மாத வருவாய் ஆயிரம் ரூபாய்க்கும் கீழ்தான் என்றும், அவர்களின் மனைவிமார்கள் சமையல் வேலை செய்கிறார்கள் என்றும், பிள்ளைகளை நல்ல கல்விக் கூடங்-களில் சேர்க்க முடியவில்லை என்றும் அந்த ஏடு மூக்கால் அழுதுள்ளது. மயி-லாப்பூர் திருவல்லிக்கேணி பகுதிகளில் பழைய வீடுகளில், ஒரு அறையை வாட-கைக்கு எடுத்து வாழும் அவலத்தில் உள்ளனர் என்றெல்லாம் பட்டியலிடப்-பட்டுள்ளது.

மயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்-பினர் எஸ்.வி. சேகர் சொல்லியுள்ளதாக ஒரு புள்ளி விவரத்தையும் அந்த ஏடு கூறுகிறது. 50 சதவீதத்துக்கும் மேற்-பட்ட பார்ப்பனர்கள் அன்றாட வாழ்-வுக்கு வாய்க்கும் கைக்குமாக அல்லாடிக் கொண்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

அவர்கள் கூறுவது எல்லாம் உண்மை எனின் வறுமைப் பிணி அவர்-களைப் பிய்த்துத் தின்பது உண்மை-யெனின், சகலவிதமான கூலி வேலை-களையும் செய்ய வேண்டியதுதானே?

தந்தை பெரியார் அன்று வினா எழுப்பியபோல கல் உடைக்கி-றார்களா? களை எடுக்கிறார்களா? ரிக்ஷா இழுக்கிறார்களா? துணி வெளுக்கி-றார்களா? சவரத் தொழில் செய்கி-றார்களா? ஏன் இவற்றைச் செய்வ-தில்லை? வறுமையிலும் வருணா-சிரமம் இருப்பது ஏன்? அறிவார்ந்த முறையில் ஆத்திரக் குரங்காகத் தாவிடாமல் பதில் சொல்லட்டுமே. அரசு வேலை கிடைப்பதில்லை என்று புலம்பு-கிறார்கள். அவர்களின் சதவிகி-தமான மூன்று சதவிகிதம் கிடைக்க-வில்லை என்று கூற வருகிறார்களா? அல்லது அதற்கு முன் நூற்றுக்குத் தொண்-ணூறு விழுக்காடு விழுங்கிக் கொண்டு கிடந்தார்களே -_ அந்த நிலை பறி போய்-விட்டது என்று பதறுகி-றார்களா? என்பதைத் தெரிந்து கொள்-ளவே நமக்கு ஆசை.

2001-ஆம் ஆண்டு முதல் இந்நாள்-வரை கடந்த 10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்-கள் யார்?

பி. சங்கர், சுகவனேஸ்வரர், லட்சுமி-பிரனேஷ், நாராயணன், எல்.கே. திரிபாதி, கே.எஸ். ஸ்ரீபதி, மாலதி என்று வரிசையாக 7 பேர் தொடர்ந்து தமிழ்-நாட்டில் அரசின் தலைமைச் செய-லாளர்களாக பார்ப்பனர்களே இருந்து வருகின்றனரே! இதேபோல தாழ்த்தப்-பட்டவர்களோ, பிற்படுத்தப்-பட்டவர்-களோ, மிகவும் பிற்படுத்தப்-பட்டவர்-களோ தொடர்ந்து தலைமைச் செய-லாளராக இருக்கும் வாய்ப்பு உண்டா?

பார்ப்பனர்களின் ஆதிக்க மேலாண்மை இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவைப்படுமா?

மத்திய அரசு துறைகளில் தாழ்த்-தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட-வர்களும் இன்னும் ஏழு சதவிகிதத்தைத் தாண்டவில்லையே! -_ சென்னை அய்.அய்.டி.யில் ஆசிரியர்கள் மொத்தம் 427 இதில் தாழ்த்தப்பட்டோர் இருவர், பிற்படுத்தப்பட்டோர் 20, முசுலிம்கள் பூஜ்ஜியம், மீதி அத்தனை இடங்களும் பார்ப்பனர் வயிற்றில்தானே அறுத்து வைக்கப்பட்டுள்ளன.

அரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் அருகி, தனியார்த் துறை-களும், பன்னாட்டு நிறுவனங்களும் நாளும் பெருகி வருகின்றன. அவற்றில் உச்சப் பதவிகளில், மேலாண்மைப் பதவிகளில் நங்கூரம் பாய்ச்சிக் கிடப்பவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேல் பார்ப்பனர்கள்தானே?

இந்த நிறுவனங்களுக்கு பணிய-மர்த்தம் செய்யும் பெரிய பொறுப்பில் இவர்கள்தானே இருக்கிறார்கள்? முதுகைத் தடவிப் பார்த்து, பூணூலை வருடிப் பார்த்துத்தானே பட்டுப்-பீதாம்பரம் கொடுத்துப் பணிகளில் அமர்த்துகின்றனர். மறுக்க முடியுமா? எடுத்துக்காட்டாக டைடல் பார்க்கில் ஒரு கணக்கெடுத்து (ஷிக்ஷீஸ்மீஹ்)ப் பார்க்கட்டும்; பார்ப்பனர்களின் பம்மாத்-தின் குட்டு உடைபட்டுப் போய் விடுமே!

தந்தை பெரியாரைப் பொறுத்தோ, திராவிடர் கழகத்தைப் பொறுத்தோ பார்ப்பனர்கள் வறுமைத் தீயில் புழுவாய்த் துடிக்க வேண்டும் என்று நினைக்கிற மனிதநேயமற்றவர்கள் அல்லர். அப்படித் துடித்தால் அது அவாள் அவாள் தலையெழுத்து என்று கர்மா தத்துவம் பேசுபவர்களும் அல்லர்.

அவர்கள் நன்றாகவே செழித்து வளரட்டும். மாட மாளிகையில், கூட கோபுரங்களில் சொகுசு மெத்தைகளில் உருண்டு புரளட்டும்.

இதுகுறித்து 64 ஆண்டுகளுக்கு முன்பே (குடிஅரசு 9.11.1946) பார்ப்பான் பணக்காரனானால் எனும் தலைப்பில் தம் எண்ணத்தைக் கல்லுப் பிள்ளை-யார் போல பதிவு செய்துள்ளாரே!

எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரசாரத்தின் கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக்-கூடாது, அவன் ஏழையாகவே இருக்க-வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் ஷண்முகம் செட்டியார், சர்.ராமசாமி முதலியார் போன்றவராக, கோடீசுவ-ரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே; எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். பணக்காரத்தன்மை ஒரு சமுகத்துக்குக் கேடானதல்ல, அந்த முறை தொல்-லையானது, _ சாந்தியற்றது என்று சொல்லலாம் என்றாலும், அது பணக்காரனுக்குத் தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடிய-தும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும்.

ஆனால் இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்-பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் சமஉரிமையையும் தடுப்பதுமாகும். அது ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால் என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது எனது பதிலாகும்.

(குடிஅரசு 9.11.1946)

பார்ப்பனர்களுக்காகப் பரிதாபப்-படுவோர் தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும், சொல்லுக்கும் -_ நாணயம் இருந்தால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுபவர்கள் யார்?

ஆச்சாரியார் கை சாத்துக்கொடுத்து, பல்கி வாலாவை வக்கீலாக நியமித்து, உச்சநீதிமன்றத்தில் விவாதம் செய்ய வைத்து, சாதகமான தீர்ப்புகளைப் பெற்று வரும் முஸ்தீபுகளை எல்லாம் நாடறியுமே.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்றால் என்ன எழுதுகிறார் திருவா-ளர் சோ ராமசாமி? மொழி ஆர்வமா? மத துவேஷமா? என்று துக்ளக் தலை-யங்கம் தீட்டுகிறதே! (துக்ளக் 18.11.1998)

தமிழில் அர்ச்சனை செய்தால் அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடி-யுமேதவிர, அவற்றின் புனித சக்தியைப் பாதுகாக்க உதவாது என்று எழுதி-னாரே! அடேயப்பா, இப்பொழுது என்ன சொல்கிறார்? பார்ப்பனர்கள் தமிழ்-நாட்டுக்குத் தேவையில்லை _ இது குறித்து வேறு எதையும் சொல்ல விரும்ப-வில்லை என்று வியர்த்து விறுவிறுத்து போகிறாரே!

எவ்வளவுக்கெவ்வளவு உப்பு சாப்-பிட்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு தண்ணீர் குடித்துத்தானே தீரவேண்டும்.

பிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் மறைந்து போய்-விட்டது என்று கல்கி பதில் சொல்-கிறதே (காலந்தாழ்ந்தாவது பார்ப்-பனர்கள் அகங்காரமாய் இருந்தனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது கல்கி என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது) அந்தக் கல்கிக்கு ஒன்றை நினைவூட்ட வேண்டும்.

தமிழ்நாடு பிராமணர் சங்கம் சென்னை அண்ணாநகர் டி.கே. ரெங்க-நாதய்யர் ஸ்ரீ கிருஷ்ணா தோட்டத்தில் வெள்ளி விழா மாநாடு நடத்தியதே, நினைவிருக்கிறதா? (டிசம்பர் 2005)

அந்த மாநாட்டில் பார்ப்பனர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள்? அரிவாளைத் தூக்கிக் கொண்டு சாமி ஆடவில்லையா?

2006ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான் நிர்ணயிப்பார்கள். நம்மைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படனும், நாம் நம்-முடைய நிலையை உணர்த்த ஆவணி அவிட்டம் அன்று வீட்டிற்குள் இருந்து பூணூல் மாற்றக் கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் வந்து பூணூலைப் போட வேண்டும் என்று ஜாதி ஆணவத் திமிரேறி முறுக்கிப் பேசினார்களே -_ மறந்து விட்டீர்களா?

தமிழன் என்று சொல்லடா! தலை-நிமிர்ந்து நில்லடா - _ அது ஒரு சுலோகம்.

பிராமணன் என்று சொல்லடா! பெருமையுடன் நில்லடா _ இது நம்மசுலோகம் என்று கர்ச்சித்தார்களே _ இதுதான் பார்ப்பனர்களின் அகங்-காரம் ஆணவம் அடங்கி விட்டது என்பதற்கான அர்த்தமா?

பொறியாளரான சுஜாதா என்ற எழுத்தாளரே, அம்மாநாட்டில் பங்கு கொண்டு தன் பார்ப்பனத்தனத்தைப் பூரிப்போடு வெளிப்படுத்துகிறார் என்றால், யாரை நினைத்துத் தமிழர்கள் ஏமாறுவது?

பார்ப்பனர்களின் அமைப்பான சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர்சங்கம் விடுத்த அழைப்பினைப் பெருந்தன்மையுடன் ஏற்று, அங்கு சென்று சில முக்கிய கருத்துகளைப் பொறுப்புடன் எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் அல்லவா?

பார்ப்பனர்கள் மட்டுமே நிறைந்த அந்த அவையிலே தந்தை பெரியார் பேசியது என்ன?

நம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடம் இல்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால் அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம் - அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார் (லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பார்ப்பன அமைப்பின் செயலாளர்) அதாவது பிராமணர்களும் கால தேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது (5.1.1953இல் பெரியார் உரை விடுதலை 8.1.1953).

அய்யா கூறி அரை நூற்றாண்டு ஆகி-விட்டது. ஆரிய பார்ப்பனர்கள் திருந்தினார்களா?

தமிழ் செம்மொழி ஆனால், வீட்-டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்-குமா என்று தானே தினமலர் கேள்வி கேட்கிறது?

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்-டாக அரசு அறிவிக்க முடியாது _ அதை யார் மதிக்கப் போகிறார்கள் என்று தானே சோராமசாமி சொல்கிறார்.

இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள், ஏதோ தாங்கள் திருந்தி விட்டது போலவும், ஆணவம் அடங்கி விட்டது போலவும் தமிழ் நாட்டில் பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டது போலவும் நரி நீலிக் கண்ணீர் வடிக்கிறது _ பெரியார் பிறப்பதற்கு முன் வேண்டுமானால் ஏமாந்திருக்-கலாம்; பெரியார் எங்கள் ஞானக் கண்களையல்லவா திறந்து விட்டி-ருக்கிறார் சுயமரியாதை உணர்வையல்-லவா சூடுபடுத்தி எட்டி எழுப்பியுள்-ளார் _ இனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது  வேகவே வேகாது!

---- நன்றி விடுதலை (25-09-2010) ஞாயிறு மலர், அடங்கி விட்டதா அகங்காராம் எனும் தலைப்பில்  கவிஞர்  கலி.பூங்குன்றன் எழுதியது
                                                     

Sunday, September 26, 2010

தினமணிக்கும், தினமலருக்கும் ஏன் இந்த அழுக்கு புத்தி?

தினமணியும், தினமலரும் கலைஞர் அரசை எதிர்க்கக் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதாகத் தெரி கிறது. துக்ளக் சோவின் பாணி பார்ப்பனக் கிண்டல் கள் இந்தக் கின்னரர்களின் எழுதுகோல் முனைகளில் தெறிக்கின்றன.

வாரத்துக்கு 5 நாள் கோழி முட்டை சத்துணவு மய்யத்தில் நமது குழந்தை களுக்கு அளிக்கப்படுகின் றன. தினமலர் எழுதுகிறது; சனிக்கிழமை அரை நாள் பள்ளி உள்ளதே அப் பொழுது அரை முட்டை போடப்படுமா? என்று கேலிச்சித்திரம் தீட்டுகிறது.
 
தினமணியின் மதி எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
 
சத்துணவில் வாரத் துக்கு 5 நாள் முட்டையாம்! நல்லது, அதையே கலக்கி, ஆம்லேட், பொடிமாஸ், ஆஃப் பாயில், ஃபுல்பாயில்னு நாளுக்கு ஒரு அயிட்டமா கொடுத்தால் பசங்களும் சலிப்பு தட்டாமல் சாப்பிடு வாங்களே..!
 
தினமலர், தினமணிக்கு ஏன் இந்தப் புத்தி? ஒருக் கால் எந்தப் பாப்பாரக் குஞ் சுக்கும் இந்த முட்டை அளிப் பால் பயனில்லை என்ற நினைப்பு இருக்குமோ!
இந்த ஒரு பிரச்சினை மட்டுமல்ல; தமிழ் செம் மொழி ஆனால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா? என்று கிண் டலடிக்கிறது.
 
சத்துணவு அளிப்பதும், வாரத்தில் 5 நாள்கள் முட்டை கொடுப்பதும் சாதாரண மான ஒன்றல்ல - தொலை நோக்கோடு பார்க்கும் பொழுதுதான் இதில் உள்ள அருமையும், விளைவும் புரியும்.
 
இந்தியாவில் 5 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படுகின் றனர். ஆண்டு ஒன்றுக்கு குழந்தைகள் பாதிக்குமேல் மரணம் அடைவது இந்த ஊட்டச் சத்துக் குறைவால் தான்!
இந்தச் செய்தியையும் ஒரு பக்கத்தில் தினமலர் (4.5.2006) தான் வெளி யிடுகிறது.
47 விழுக்காடு குழந் தைகளுக்கு நம் நாட்டில் ஊட்டச்சத்து இல்லை என் கிற தகவலை வெளியிட்டது தினமணிதான் (5.5.2004).
 
இப்படி ஒரு பக்கத்தில் ஊட்டச் சத்தின் அவசி யத்தை வெளியிடும் தின மணியும், தினமலரும் ஊட்டச்சத்தினை கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு அளிக்கும்போது, இந்த ஏடுகள் நல்ல புத்தியோடு பாராட்ட மனம் இல்லா விட்டாலும் கேலியும், கிண் டலும் செய்யாமலாவது இருக்கலாம் அல்லவா!
 
வாரத்துக்கு 5 நாள்கள் முட்டை அளித்தால், பார்ப்ப னர் அல்லாத குழந்தைகள் ஊட்டச் சத்து பெற்று, உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச் சியும் பெற்று, தேர்வுகளில் இதுவரை முட்டை மார்க்கு வாங்கியவர்கள் இனி அக் மார்க் முத்திரை பொறிப் பார்களோ என்கிற 

அழுக் குப் புத்திதான் இந்தப் பார்ப்பனர்களுக்கு.
அழுக்கு என்றால் அசிங்கம் மட்டுமல்ல - பொறாமையும்தான்!
-விடுதலை (26.09.2010) மயிலாடன்
                                               



Saturday, September 25, 2010

இந்தியா முழுமையும் சமஸ்கிருதப் பள்ளிகளா?

மதுரைப் பதிப்பு மாலை முரசு ஏட்டில் (21.9.2010) கீழ்க்கண்ட சேதி இடம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பண்டைக் காலத்தில் மக்களிடையே புழக்கத்தில் இருந்து வந்த சமஸ்கிருத மொழி படிப்படியாக தனது செல்வாக்கை இழந்தது. இருப்பினும் செம்மொழி என்ற தகுதியுடைய சமஸ்கிருத மொழி அறிவுக் களஞ்சியமாகத் திகழ்வதால், சமஸ்கிருத கல்விக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களைத் தொடங்கி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதையடுத்து, முதலாவதாக மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் சமஸ்கிருதப் பள்ளி தொடங்கப்படுகிறது.

இதில் 55 சதவிகித இடங்கள் அகில இந்திய பணிகளில் இருக்கும் அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்காக ஒதுக்கப் பட்டுள்ளன. 15 சதவிகித இடங்கள் ஏழை, எளிய மாணவர் களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்கள் பொதுப் பிரிவின்கீழ் வருகின்றன. பொதுவாக 25 சதவிகித இடங்களை நலிந்த பிரிவினருக்கு ஒதுக்குவது வழக்கம்.
ஆனால், சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்களில் 15 சதவிகித இடங்கள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்திருப்பதால், இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள் அரசு சாரா அமைப்புகளிடமிருந்து நன்கொடை பெறலாம். அதன் வாயிலாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆவது பட்டியலில் இந்தியாவில் 22 மொழிகள் இருக்கின்றன. இதில் சமஸ்கிருதம் இடம் பெற்றுள்ளது. ஆனாலும், இம்மொழி செத்த மொழியாகக் கருதப்படும் (Dead Language) நிலையில் உள்ளது.

இந்தியா (1999) பப்ளிக்கேஷன் டிவிஷன் (Ministry of Information and Broadcasting, Govt of India) இந்தியாவில் 18 மொழிகள் பேசும் மக்களின் புள்ளி விவரங்களை வெளி யிட்டுள்ளது. 1971 இல் 2212 பேர், 1981 இல் 6106 பேர், 1991 இல் 49,736 பேர், 1971 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் சூநபடபைடெந என்றும் 1991 இல் வெறும் 0.01 சதவிகிதம் என்றும் அதிகாரப்பூர்வமான மத்திய அரசின் தகவலாக வெளியிடப் பட்டுள்ளது. 1971 மற்றும் 1981 இல் புறக்கணிக்கத்தக்க (Negligible) என்ற சொல்லையே இந்திய அரசு தெரிவித்துள்ளது.

பார்ப்பனர்கள் உள்பட நாட்டு மக்களால் புறக்கணிக்கப் பட்ட செத்த மொழிக்கு உயிரூட்டும் வேலையில் மத்திய அரசு ஏன் இறங்கியுள்ளது என்பது முக்கியமான கேள்வியாகும்.

பெரும்பான்மை மக்களின் பணம் சிறுபான்மைப் பார்ப் பனர்களின் தாய்மொழி என்கிற காரணத்தாலும், மத்திய மனித வளத்துறை அமைச்சர் அச்சமூகத்தவர் என்பதாலும்தானே இந்த விரயம்?

குடிஅரசான பத்து ஆண்டுகளுக்குள் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும் என்று இந்திய அரசமைப்பின் 45 ஆம் பிரிவு அறுதியிட்டுக் கூறியிருந்தும், பல பத்தாண்டுகள் பறந்தோடியும் அந்த நிலை எட்டப்படவில்லை.
2002 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மறுபடியும் 86 ஆவது அரசமைப்புச் சட்டத்
திருத்தமாக நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இன்றைய நிலையில்கூட, இந்தியாவில் எழுத்தறிவு என்பது 64.84 சதவிகிதம்தான்; இதில் பெண்கள் 54.16 சத விகிதம்தான்.

கிராமப்புறங்களில் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி விடுபவர்களில் பழங்குடியினர் 87.7 விழுக்காடு, தாழ்த்தப்பட்ட வர்கள் 86.5 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோர் 75.1 விழுக்காடு என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. (செப்டம்பர் 8, 2006, எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி).

இந்த வெட்கம் கெட்ட நிலையில், கிடந்தது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வை என்ற பழமொழிக்கேற்ப, செத்துச் சுண்ணாம்பாகிப் போன ஒரு மொழியைக் கற்பிக்க இந்தியா முழுமையும் கல்விக் கூடங்கள் திறக்கப்படுகின்றன என்றால், இதன் பொருள் என்ன?

1925 இல் சேலம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொன்னாரே - வெள்ளைக்காரன் வெளியேறிய சுதந்திர இந் தியாவில் டெமாக்கிரஸி இருக்காது; மாறாக பிராமினோ கிரஸிதான் இருக்கும் என்றாரே - அதுதானே இதன் பொருள்?

பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஒரு ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து, கோடிக் கணக்கான ரூபாய்களைக் கொட்டி அழுதார்கள். திராவிடர் கழகம்தான் அப்பொழுதும் எதிர்ப்புக் குரல் கொடுத்தது. தமிழையும் அவ்வாறு அறிவிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டார். முதலமைச்சர் கலைஞர் அவர்களும் வேண்டுகோள் விடுத்தார். கடைசிவரை அந்தப் பார்ப்பன நந்தி அசைந்து கொடுக்கவில்லையே.

இப்பொழுது மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லை. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காங்கிரஸ் தலைமையில், மத்தியில் நடந்துகொண்டு இருக்கிறது. ஆட்சி மாறினாலும், அடிப்படையில் பார்ப்பனத் தன்மை என்கிற நங்கூரம் அப்படியேதான் இருக்கிறது என்பதற்கு அடை யாளமாக இதனைக் கருதவேண்டியுள்ளது.

55 சதவிகித இடங்கள் அகில இந்தியப் பணிகளில் இருக்கும் அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்காக இத் தகைய சமஸ்கிருதப் பள்ளிகளில் இடங்கள் ஒதுக்கப்படுமாம்.
ஈரோட்டு நுண்ணாடியைக் கொண்டு பார்த்தால், இதில் நெளியும் கிருமிகள் யாவை என்பது எளிதில் விளங்கிவிடுமே.

மத்திய அரசுத் துறைகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர் இடம்பெற்றிருக்கும் வேலை வாய்ப்பு 12 சத விகிதத்தைத் தாண்டாத நிலையில், மீதி உள்ள இடங்களை ஆக்கிரமித்து இருப்பவர்கள் பார்ப்பனர்கள்தான். அவர் களுக்குத்தான் இந்த 55 விழுக்காடு இடங்கள். பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகளுக்கு 55 விழுக்காடு என்று நேரடியாகச் சொல்லாமல் - கொஞ்சம் சுற்றி வளைத்து மத்திய அரசுப் பணிகளில் இருக்கும் அதிகாரிகள் வீட்டுப் பிள்ளைகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் பெற்றுள்ள இதர கட்சிகள் இதனை எதிர்த்துக் குரல் கொடுக்குமாக! தடுத்து நிறுத்துமாக!

------- நன்றி விடுதலை தலையங்கம்  (25.09.2010)

Thursday, September 23, 2010

தலித் பெண்ணிடம் ரொட்டி சாப்பிட்ட நாயும் தலித்தாம்? என்ன கொடுமை

ஒரு தலித்தாக பிறந்தால் மேல்சாதி காரன் விட்டு நாய்க்கு கூட ரொட்டி கொடுக்க கூடாதா? இந்த கொடுமை மத்திய பிரதேசம் போபாலில் அரங்கேறியுள்ளது.. இன்றைய (24.09.2010) times of india 9th Page பத்திரிக்கை செய்தி.....மேல்சாதிகாரன் வீட்டு நாய்க்கு ரொட்டி ஊட்டிய தலித் பெண்ணுக்கு அந்த ஊர் பஞ்சாயத்து ரூபாய் 15000 அபராதம் விதித்துள்ளது..என்ன கொடுமை..அத்...துடன் அந்த நாயும் இனி தலித் வீட்டில் தான் இருக்கவேண்டுமாம். 

The title of the article "Dog cast(e) aside for eating dalit’s roti" by today's times of is given below.

Bhopal: A dog’s life couldn’t get worse. A mongrel brought up in an upper caste home in Morena was kicked out after the Rajput family members discovered that their Sheru had fed a roti of a Dalit woman and was now an “untouchable”. Next, Sheru was tied to a pole in the village’s Dalit locality. His controversial case is now pending with the district collector, the state police and the Scheduled Caste Atrocities police station in Morena district of north Madhya Pradesh.
    The black cur, of no particular pedigree, was accustomed to the creature comforts in the home of its influential Rajput owners in Manikpur village in Morena. Its master, identified by the police as Rampal Singh, is a rich farmer with local political connections.
    A week ago Sunita Jatav, a Dalit woman, was serving lunch to her farm labourer husband. “There was a ‘roti’ left over from lunch. I saw the dog roaming and fed it the last bread,” Sunita said. “But when Rampal Singh saw me feeding the dog and grew furious and yelled: “Cobbler woman, how dare you feed my dog with your roti?” He rebuked me publicly. I kept quiet thinking the matter would end there. But it got worse,” she said.
    On Monday, Rampal ex-communicated his own pet dog. A village panchayat was called, which decided that Sheru would now have to live with Sunita and her family because it had become an untouchable. “It’s no longer Rampal’s pet and can’t be called a village dog either. It shall now on live on the Dalit side of the village,” the elders adjudged. Sunita Jatav was fined Rs 15,000.
    An outraged Sunita and her brother Nahar Singh Jatav rushed to Sumawali police station. They were directed to take the matter to the SC/ST Atrocities police station in Kalyan. “When we went there, the officer asked us why we fed the dog,” recalls Nahar. “So we went to the DSP in the SC/ST Atrocities department and submitted a memorandum to him, as also to the district collector. But no one has registered our FIR so far.”
    DSP SC/ST Atrocities (Morena), Baldev Singh, said “We are investigating the allegation. A police team will be sent to the village for the inquiry after which the FIR will be filed.”
    Collector M K Agarwal said: “Untouchability in any form is a crime. This case has been brought before the magistrate and since the SC/ST Atrocities police station registers these cases, instructions have been issued to appropriate personnel for punitive action.”

காவல்துறையில் புகார் தெரிவிக்க சென்ற பொது காவல்துறை அதிகாரியே கேட்டிருக்கிறார் நீங்கள் ஏன் ரொட்டி ஊட்டினீர்கள் என்று? இதுவரை யாரும் FIR பதிவு செய்யவே இல்லையாம்..நினைத்தாலே பதறுகிறது நெஞ்சம்...பெரியாரின் தொண்டு தமிழகத்தில் இந்த மாறி கொடுஞ்செயல்களை அழித்துவிட்டிருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.









                                                                                                            




அயோத்தி பற்றி இல.கணேசன்களின் உரத்த சிந்தனையும்..நமது கருத்தும்

ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் வைத்தியநாதய்யர்  இந்த தினமணி பத்திரிக்கைக்கு பொறுப்பேற்றது போதும், அன்றைய நாளில் இருந்து தினமணி ஆர்.எஸ்.எஸ் கொள்கை பத்திரிக்கையாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது. அது பத்தாது என்று இன்று (23.09.2010) திரு.இல.கணேசன் எழுதிய "அயோத்திப் பிரச்னை - ஓர் உரத்த சிந்தனை!" என்ற கட்டுரையை வெளியிட்டு  வெளிப்படையாகவே அதனை நிருபித்துள்ளார் தினமணி ஆசிரியர். அதில் பாருங்கள் கட்டுரை ஆசிரியர் இல.கணேசன் எடுத்ததும் எப்படி ஆரம்பிக்கிறார் என்றால் நான் ஒரு பாரதிய ஜனதா கட்சிக்காரன். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரன். இந்த பா.ஜ.க. என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள்?.இப்படித்தான் துவங்குகிறார். போதும் இல கணேசன் அவர்களே நீங்கள் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் என்பதை வெளிப்படையாக ஒப்புகொண்டமைக்கு நன்றி. பி.ஜே.பி வேறு ஆர்.எஸ்.எஸ் வேறு என்று விவாதம் செய்யும் தமிழர்களே தெரிந்து கொள்ளுங்கள் இல கணேசன் அவர்களின் கூற்று மூலம்.

மேலும் அந்த கட்டுரையில் என்ன சொல்லுகிறார் பாருங்கள் "சிலர் இது பாபரது கல்லறை எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் கட்டியதால் பாபர் மசூதி. ஹிந்து ஆலயத்தை இடித்து கட்டியதா அல்லது காலி மனையில் கட்டப்பட்டதா என்பது வழக்கு. 1950-லிருந்து நடைபெறும் வழக்கு, நாளை தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறது. இனி எவரும் பாபர் மசூதி கட்ட முடியாது. மன்மோகன் சிங் கட்டினால் அது மன்மோகன் மசூதி என்றே அழைக்கப்படும்.

பாபர் யார்? அவர் இந்தியரல்ல, அந்நியர். படையெடுத்து ஆக்கிரமிக்க வந்த அந்நியர். இரண்டாவது முறை அவர் தொடுத்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட அவர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோயிலை இடித்துக் கட்ட முயற்சித்த மசூதிக் கட்டடம்.

அன்னியனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடிமைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக்கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடிமைச் சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.

பாபர் எங்கள் மதத்தவன், அதனால் அந்தச் சின்னம் அடிமைச் சின்னமானாலும் அது போற்றுதலுக்குரியது எனக் கருதுவது தேசபக்தியின் வெளிப்பாடாக ஆகாது."

அவர் மேலே சொல்லி இருப்பது போல பாபர் மசூதி ஒரு அடிமை சின்னம் என்றால் (அதாவது பாபர் படையெடுத்து வெளிநாட்டில் இருந்து வந்தவராம்...என்ன அறிவு இல.கணேசன்களுக்கு....பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று அய்யா சொன்னது மிக சரி )...அப்புறம் எதற்கு எக்மோர் ரயில்வே, ரிப்பன் பில்டிங், சென்ட்ரல் ஸ்டேஷன்...இப்படி வெள்ளை காரன் கட்டின அனைத்தும் அடிமை சின்னம் தானே? அப்புறம் எதற்கு இன்னும் இங்கே இருக்கு...அதனையும் இந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஒரு வழி பண்ணவேண்டியது தானே?. கயவர் கும்பல்..யாரை வாய் ஜாலத்தால் ஏமாற்ற பார்க்கிறார் என்று தெரியவில்லை.

இந்த ஆரிய பார்ப்பனக் கூட்டமே வந்தேறிகள். இவர்கள் அடிமை சின்னம் பற்றி பேசுகிறார்கள். வந்தேறிகளாக வந்து குடியேறியதும் இல்லாமல் வாய் ஜாலம். முதலில் இந்த பார்ப்பனர்களுக்கு  மொழி உண்டா?,நாடு உண்டா?..இப்படி ஏதும் இல்லாமல் வரும் இடத்தில் யார் மொழி இருக்கிறதோ அதனை படித்து விட்டு அவர்களையே அடிமையாக்கும் கூட்டம் இந்த பார்ப்பனக் கூட்டம். இவா அடிமை சின்னம் பற்றி பேசலாமா? இந்த பார்ப்பனர்கள் எப்படி புத்த கோவில்களை இந்து கோவில்களாக மாற்றினார்கள் என்ற யோக்கிதை  இதோ விடுதலை நாளேடு மிகவும் அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளதே...விடுதலையில் மயிலாடன் அவர்கள் 23-2-2010 ஆதாரங்களுடன் எழுதியதை அப்படியே தருகிறேன்.

மயிலை சீனி. வேங்கடசாமி என்னும் ஆராய்ச்சியாளர் பவுத்தமும் தமிழும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் வெளி மதில்சுவரில் சில புத்த விக்கரகங்கள் பலவகை சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனான கிருஷ்ண தேவராயரால் 1509 இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோயில்களை இடித்து, அந்தக் கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்கவேண்டும். அதனால்தான் இப்புத்த விக்கரகங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன. காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த விக்ரகம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் பரி நிர்வாணம் அடையும் நிலையில் உள்ளது போன்ற கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. (பவுத்தமும், தமிழும், பக்கம் 54).

ஏகாம்பர ஈசுவரர் கோயிலில்தான் இந்தக் கதையென்றால், காமாட்சியம்மன் கோயில் மட்டும் என்ன வாழ்கிறது?).

காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி ஆலயம் இவ்வாலயத்தில் பல புத்த விக்கரகங்கள் இருந்தன. அவைகளில் ஆறு அடி உயரம் உள்ள நின்ற வண்ணமாக அமைக்கப்பட்ட சாஸ்தா (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்பொழுது சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காமாட்சியம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்போது காணப்படவில்லை. இக்கோயிலில் இருந்த வேறு புத்த விக்கரகங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்கு முன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்த விக்கரகம் ஒன்று இப்போதும் நன்னிலையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தைக் கட்டியபோது, அதன் அடியில் சில புத்த விக்கரகங்களைப் புதைத்து இருக்கிறார்களாம். (பவுத்தமும், தமிழும், பக்கம் 55).

புரிகிறதா? புத்தர் கோயில்களை எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றியவர்கள் இப்பொழுது தொலைக்காட்சி வாயிலாகவும் இத்தகைய மாய்மாலங்களைச் செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது. இந்த யோக்கியர்கள்தான் ராமன் கோயிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டினார் பாபர் என்று கயிறு திரிக்கிறார்கள்.

இப்படி ஆண்ட புளுகு ஆகச புளுகு புளுகும் ஆர்.எஸ்.எஸ் க்கு இது புதிது அல்ல. அதில் இருக்கும் இல.கணேசன்களுக்கும், தினமணிகளுக்கும் இது புதிது அல்ல. எனவே இவர்கள் நினைவில் கொள்ள வேண்டியது இது பெரியார் மண். இங்கு மதத்திற்கு இடம் கிடையாது..மனிதனுக்கு தான் இடம். இதனை மறந்து ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ஆட்டம் போட்டால்....நினைவு படுத்த வேண்டிவரும்.எச்சரிக்கை!

குறிப்பு: இந்த கட்டுரை பற்றி போட்ட பின்னூட்டம் அனைத்து தினமணி இணையதளத்தில் அழித்து விட்டார்கள்.அவர்கள் கொள்கை பற்றி விமர்சனம் செய்து பின்னூட்டம் இருந்தால் அழிக்கும் தினமணியே உங்கள் சுயரூபம் தோலுரிக்கப்படும்.
                                                                                                     



Wednesday, September 22, 2010

உனக்கு இந்தியா வேண்டுமா? இராமாயணம் வேண்டுமா?

 பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் சார்பில் நேற்று (21.9.2010) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பெரியாரின் இலக்கியப் பார்வை - புதுவெள்ளம் - புதுநோக்கு என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 13.1.1936 அன்று திரு.வி.க. தலைமையில் தந்தை பெரியார் ஆற்றிய உரையை மய்யப்படுத்தி, அதன் சாராம்சத்தை எடுத்துக்காட்டிய விளக்கவுரையாக அது அமைந்திருந்தது.

பொதுவாக தந்தை பெரியார்பற்றி தமிழர்களில் புரியாதவர்களும், பார்ப்பனர்கள் திட்டமிட்டும் ஒரு பிரச்சாரத்தைச் செய்வதுண்டு. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார் என்பதுதான் அந்தப் பிரச்சாரம். வெறும் சொற்களின்மீதான பார்வையால் மட்டும் சொல்லப்படும் குற்றச்சாற்று இது. ஆனால், தமிழ் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தந்தை பெரியார் பாடுபட்டதுபோலவும், கருத்துகளைச் சொன்னதுபோலவும் - ஆக்க ரீதியாக இன்னொருவர் செய்தார்; சொன்னார் என்று கூறிட முடியாது.

தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப்பற்றிய என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லியிருக்கின்றேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ்மொழி - ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்குத் தனி வெறுப்பில்லை (விடுதலை, 1.12.1970) என்று தெளிவாகத் தம் கருத்தினை வெளிப்படுத்தியவர் தந்தை பெரியார்.

இதன் பொருள் ஆங்கிலத்திற்கு நிகராக தமிழும், விஞ்ஞான மொழியாக வளர்ச்சி பெறவேண்டும் என்பதுதானே தவிர, தமிழை அவமானப்படுத்தியதாகவோ, தரம் தாழ்த்தி சொன்னதாகவோ பொருளாகாது.

தமிழையும், மதத்தையும் தனியே பிரித்துவிடவேண்டும் என்று தந்தை பெரியார் கூறியதையும், மதச் சார்பற்றவர் களுக்குத் தமிழில் இருப்பது எது என்று தந்தை பெரியார் வினா எழுப்பியதையும் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக்காட்டினார்.

தமிழ் மொழியிலிருந்து புராணங்களையும், இதிகாசங் களையும் கழித்துவிட்டால், எஞ்சி நிற்பது எதுவாக இருக்கும் என்பது அர்த்த வளமிக்க வினாவாகும்.

மதம் என்னும் சூளையில் தமிழ் நட்டால் முளையாது என்று புரட்சிக்கவிஞர் பாடியதும் இந்த அடிப்படையில்தான்.

நமது தமிழ்ப் புலவர்களுக்குப் புராண ஞானம் இருக்கும் அளவுக்கு பொது ஞானமோ, அறிவியல் ஞானமோ இருப்பதில்லையே என்று தந்தை பெரியார் கூறியதும், நமது புலவர்களின் அறிவு காலத்துக்கேற்ற அளவு மேம்படவேண்டும் என்ற எண்ணத்தில்தான்.

தமிழிலேயே வருணம் புகுத்தப்பட்டு இருப்பதுபற்றி தந்தை பெரியார் கேட்கிறார். மக்கள், தேவர், நாகர் உயர்திணை என்று தமிழ் இலக்கணத்திலேயே கூறப் பட்டுள்ளதே என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு அன்றைக்கு அய்யாவோடு இருந்த திரு.வி.க., நமசிவா யனார், கந்தையா போன்ற புலவர்கள்முதல் இன்றுவரை உள்ள புலவர்களும் விடையிறுத்ததில்லையே!

இந்த இடத்தில் இன்னொன்றும் முக்கியமாகச் சுட்டிக்காட்டத்தக்கது ஒன்றுண்டு. பாக்களில் சிறந்ததான வெண்பாவால் பார்ப்பனர்களை மட்டும் பாடவேண்டும்; அரசனுக்கு ஆசிரியப்பா, வைசியருக்கு கலிப்பா, சூத்தி ரருக்கு வஞ்சிப்பா என்று வருணப் பிரிவை இலக்கணத்தில் (வச்சணந்தி மாலை) திணிக்கப்பட்டுள்ளதே!

பாட்டியலில் பன்னீருயிரும், முதலாறு மெய்யும், பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறு மெய்கள் அரச வருணம் (சத்திரியர்) என்றும், அடுத்த நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் இலக்கணம் கூறப்பட்டதற்கு என்ன சமாதானம்?

தந்தை பெரியார் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார்; ஒன்றின் மீது வினாவை எழுப்புகிறார் என்றால், அது நோய்நாடி, அதன் முதல் நாடுவதாகத்தான் இருக்கும்.

லென்ஸ் வைத்து தந்தை பெரியார் படித்ததுபற்றி கூறிய விடுதலை ஆசிரியர் அவர்கள், நமது இலக்கியங்களில், புராணங்களில் நெளியும் கிருமிகளைக் கண்டுபிடிக்கத் தான் என்று நயத்தோடும், அதேநேரத்தில் ஆழ்ந்த பொருளோடும் கூறினார்.

ஒரு வெள்ளைக்காரனைப் பார்த்து உனக்கு இங்கிலாந்து வேண்டுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? என்று கேட்டால், எனக்கு இங்கிலாந்து வேண்டாம்; ஷேக்ஸ்பியர்தான் வேண்டும் என்று கூறுவான் என்று தந்தை பெரியார் பச்சையப்பன் கல்லூரியில் கூறியதை எடுத்துக்காட்டி, அடுத்து அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் சொன்ன கருத்து அவையில் வெடிச்சிரிப்பையும், அத்தோடு விவேக அலையையும் எழுப்பியது.

உனக்கு இந்தியா வேண்டுமா? இராமாயணம் வேண்டுமா? என்று நம்மைப் பார்த்துக் கேட்டால், இந்த இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்ல முடியும் என்று தந்தை பெரியார் சொன்னதற்கு ஆமாம் போடுவதைத் தவிர வேறு வழி என்ன?

இலக்கியம் முதல் இனக் கோட்பாடுவரை எதைத் தொட்டாலும் தந்தை பெரியார் தன்னிகரற்ற சூரியனாகவே தகிக்கிறார் என்பதுதான் உண்மை! உண்மையிலும் பேருண்மை!!

----- விடுதலை தலையங்கம் (22.09.2010)

இந்து மதத்தில் எல்லாம் ஆண் - பெண் உடற்சேர்க்கை பற்றிதான்!

இந்து மதத்தில் அ தொடங்கி ஃ முடிய உள்ள எல்லாச் சமாச்சாரங்களும் ஆண் - பெண் உடற்சேர்க்கை பற்றிதான்! தனிமையில் பாதுகாக்கப்படும் நாகரிகமாகக் கருதியவற்றை நடுவீதியில் அம்மணமாக்கிக் கொண்டாடு வதுதான் இந்து மதத்தின் இழிவும் - ஆபாசமும் நெளியும் தத்துவார்த்த சாக்கடையாகும்.

திருநீறு என்றாலும், சந் தனம் என்றாலும், நாமம் என்றாலும், இத்தியாதி இத் தியாதிதான். பெண்கள் நெற்றி யில் வைத்துக் கொள்கிறார்களே - அதன் சமாச்சாரம்தான் என்ன?

சிவபெருமான் என்ற இந்து மதக் கடவுளின் இடுப்பில் பார்வதியும், தலையில் கங்கை யும் மனைவிகளாக உள்ளனர் - தலையில் உள்ள கங்காதேவி மாதவிடாயின்போது கசிந்த ரத்தம் சிவபெருமான் நெற்றியில் வடிவதுதான் இந்தக் குங்கும மாம்.

இந்தச் சிவபெருமான் இருக்கிறானே... அசல் காட்டு மிராண்டி. இதுகுறித்து தந்தை பெரியார் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.

புலித்தோல் அரைக்கு இசைத்து

வெள்ளருக்கம்பூ சடைக்கு முடிந்து

சுடலைப் பொடி பூசி

கொன்றைப் பூச்சூடி

தும்பை மாலை அணிந்து

மண்டை ஓடு கையேந்தி

எலும்பு வடம் தாங்கி

மான், மழு, ஈட்டி,

சூலம் கைப்பிடித்து

கோவண ஆண்டியாய்

விடை(மாடு) ஏறி

ஒரு காலைத் தூக்கிக்கொண்டு

பேயோடு ஆடுகிறவன்

காட்டுமிராண்டியாய் இல்லாமல்

நகரவாசி - நாகரிகக்காரனாக

இருக்க முடியுமா?

(விடுதலை, 18.7.1956)

என்று தந்தை பெரியார் எழுதியுள்ளதில் ஒரு கால் புள் ளியை மறுக்கத்தான் முடியுமா?

அப்படிப்பட்ட காட்டு மிராண்டிக் காலத்தில் எந்த அளவுக்கு அறிவு இருந்ததோ அந்த அளவுக்குத்தான் இது போன்ற குங்குமக் கதைகளைப் புனைந்திருப்பார்கள்.

புராணப் பிரசங்கிகள் என்ன கூறுகிறார்கள்?

மலட்டு நிலத்தை மாத விலக்கான பெண்களைக் கொண்டு உழச் செய்யின், விளைச்சல் ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஒரு காலத்தில் நிலவியது. மாதவிலக்கு சினைப் படும் வளத்தை அறிமுகப்படுத்து வது என்பது உண்மையே! இச்சிறப்பை அறிவிக்கும் முகமாகவே புராதன காலத்தில் மாத விலக்கு வேளையில் ஏற்படும் இரத்தக் கசிவைத் திலகமாக நெற்றியில் பெண்கள் இட்டுத் தமது கருவளத்தைத் தெரிவித்து வந்தனர் என்பர். இன்னும் இவ்வழக்கம் குங்குமப் பொட்டாக பெண்கள் நெற்றியில் திகழ்வதைக் காண்கிறோம்.

(செ. கணேசலிங்கம் எழுதிய பெண்ணடிமை தீர... எனும் நூலிலிருந்து)

எப்படி இருக்கிறது இந்து மதத்தின் ரசனையும் - புத்தியும்1

இப்பொழுது நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு இந்த அய்தீகம் தெரியுமா என்றால், தெரியாது தான். உடுத்திக் கொள்ளும் உடை, செருப்பு இவற்றிற்குப் பொருத்தமாக (ஆயவஉ) வண்ண வண்ணப் பொட்டுகளை நெற் றியில் வைத்துக் கொள்கின் றனர்.

இதுகுறித்து பிரபல தோல் நோய் வல்லுநர் மருத்துவர் தம்பையா கூறுவதைக் கவனிக்கவேண்டும்.

நாற்பது வருடத்துக்கு மேல் நான் ப்ராக்டீஸ் பண்றேன். 15 வருடங்களுக்கு முன் பிருந்துதான் குங்குமம், விபூதி அலர்ஜியாகிற பேஷண்டுகள் வர்றது அதிகரிக்க ஆரம்பிச்சுது. நவீன உலகத்தில் குங்குமத்தில் என்னென்ன கெமிக்கல்ஸ் கலக்கப்படுகின்றன - இதனால் தோலில் பிரச்சினைகள் ஏற் படுகின்றன. முதலில் குங்குமம், விபூதி இடுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு, பிறகுதான் சிகிச்சையைத் தொடங்குவேன் என்று பிரபல மருத்துவர் தம் பையா கூறியுள்ளார் (ஜூனியர் விகடன், 26.10.1997).

குங்குமக் கதை எதில் தொடங்கி எதில் முடிந்திருக்கிறது பார்த்தீர்களா?

- விடுதலை மயிலாடன், 22.09.2010
                                                                        

Friday, September 17, 2010

கிருமிலேயர் வேண்டுமாம் தினமணி சொல்லுகிறது...

இடஒதிக்கீடு என்றாலே பார்ப்பனர்களுக்கும் அவா நாளேடுகளுக்கும் அடிவயிற்றை முறுக்குவது வழக்கம். அதன் படி நேற்றைய (17-09-2010) தினமணி "ஏன்? எப்படி? எதற்கு?"  என்று ஒரு தலையங்கம்...இதில் கிருமிலேயர் முறை ஒத்துகொள்வார்களா? என்று கேள்வி...தினமணி ஆசிரியருக்கே தெரிகிறது ஒப்புகொள்ள மாட்டார்கள் என்று...பிறகு எதற்கு அந்த கேள்வி....முதலில் இந்த  தினமணி சாதிவாரி கணக்கெடுப்பே வேண்டாம் என்று கூச்சல் போட்டது....பிறகு இவர்களுடைய கூச்சல் எடுபடவில்லை என்றதும்  இப்பொழுது சாதி ஒழிய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாதாம்...அனால் கிருமிலேயேர் கொண்டு வரவேண்டும் என்று தினமணி  கூப்பாடு போட ஆரம்பித்திருக்கிறது.....அப்படி ஒரு கூப்பாடு எங்கிருந்து கிளம்பவேண்டும்? யாரால் கிளப்பப்பட வேண்டும்? பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லவா? வழக்கு போட்ட முன்னேறிய சாதியினருக்கு என்ன இதில் அக்கறை? ஆடு நினைகிறதே என்று ஓநாய் அழுத கதை போன்ற தல்லவா இது? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேட்ட கேள்வி தான் நமக்கு நினைவு வருகிறது.....அனால் இது தினமணிக்கு நினைவு வருமா?  

முதலில் தினமணி ஆசிரியருக்கு பொருளாதாரம் ஏற்ற இறக்கம் உடையது ஆனால் சாதி மாறாதது என்பது தெரியும்.. இருந்தும் இனப்பற்று இப்படி தலையங்கம் தீட்டச்சொல்லி தூண்டுகிறது...என்ன செய்ய எல்லா அவா மயம் மாறி வரும் சூழலில் இப்படி அவா கூட்டம் ஆட்டம் போடுவது வழக்கம்தானே... இடஒதிக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் இல்லை...அது காலம் காலமாக எங்களுக்கு மறுக்க பட்டு வந்த உரிமைகளை பெற உதவும் ஆயுதம்.....வீணாக தினமணிகள் கூச்சல் போடவேண்டாம்..


Thursday, September 09, 2010

சென்னை கோட்டூர்புரத்தில் திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் - சர்வதேச கௌரவம்.

சென்னை கோட்டூர்புரத்தில் திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் அண்ணா நூற்றாண்டு நூலகம்.
சென்னை, செப்.9: சென்னை கோட்டூர்புரத்தில்    180 கோடியில் கட்டப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பழமையான ஓலைச்சுவடிகள் முதல் டிஜிட்டல் புத்தகங்கள் வரை இடம்பெறும் அண்ணா நூற்றாண்டு நூலகம் செப்டம்பர் 15-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கோட்டூர்புரத்தில் நவீன நூலகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கின. இந்தப் பணிகள் இப்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

இந்த நூலகம் தொடங்கப்படுவதற்கு முன்பே உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைப்புப் பெற்றுள்ளது. இதன் மூலம், உலகத்தில் உள்ள புகழ்பெற்ற பல நூலகங்களில் உள்ள தகவல்களை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நூலகத்தில் இடம்பெற உள்ள பழமையான ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திறக்கப்படுவதற்கு முன்பே யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் நூலகத்தின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பு நாடுகளில் கலாசாரமும் பாரம்பரியமும் மிக்க புத்தகங்கள், தகவல்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் வடிவில் தொகுப்பதற்காக உலக டிஜிட்டல் நூலகம் (வேர்ல்டு டிஜிட்டல் லைப்ரரி) 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.

சர்வதேச கலாசாரங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பலதரப்பட்ட கலாசாரங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் அளிப்பதோடு, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு இலவசமாக தகவல் வழங்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
                  விளையாட்டுகளுக்கு இடையே புத்தகங்கள் படிக்கும் வகையில் உருவாக்கப்படும் சிறுவர்கள் பிரிவு.

இந்தியாவிலேயே 2-வது நூலகம்...

பல நாடுகளின் தேசிய நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், பாரம்பரிய நிறுவனங்கள் என 90-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்குதாரர்களாக உள்ளன. இந்தியாவில் இருந்து காஷ்மீரில் உள்ள அல்லாமா இக்பால் நூலகம் மட்டுமே இதில் இணைந்துள்ளது. இரண்டாவதாக, அண்ணா நூற்றாண்டு நூலகம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைக்கப்பட உள்ள 70 ஆயிரம் ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்கள் ஆகியவை டிஜிட்டல்மயமாக்கும் வகையில் படம்பிடிக்கப்பட உள்ளன.

4 லட்சம் புத்தகங்களுடன் தொடக்கம்: சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ள நூலகம் முதலில் நான்கு லட்சம் புத்தகங்களுடன் தொடங்கப்பட உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்துத் தலைப்புகளிலும் 12 லட்சம் புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெற உள்ளன என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அவர் தினமணி நிருபரிடம் கூறியது:

முதல்வர் கருணாநிதியின் அறிவுரைப்படி,  மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள்,அறிஞர்கள், கல்வியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறார்கள், முதியோர், சாதாரண மக்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

தரைத்தளம் உள்பட மொத்தம் 9 தளங்களில் மொத்தம் 3.8 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

கீழ்த்திசை நூலகத்தில் அரிய ஓலைச் சுவடிகள் முதல் ஆன்லைன் புத்தகங்கள் (இ-புக்ஸ்), பத்திரிகைகள் வரை இதில் இடம்பெறுகின்றன. மாற்றுத்திறனாளிகள் (பார்வைத்திறன் இல்லாதவர்கள்), சிறுவர்களுக்கான பிரிவுகள் தனிக்கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

இதர வசதிகள்: இதோடு, 1,200 பேர் அமரும் வகையிலான நவீன வசதிகள் கொண்ட அரங்கமும், 800 பேர் அமரும் வகையில் திறந்தவெளி அரங்கமும் இதில் உருவாக்கப்பட்டுள்ளன. இலக்கிய நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இவற்றில் நடத்தலாம். அதோடு புத்தக வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தலாம். இதுதவிர, 150 பேர் அமரும் வகையில் மாநாட்டு அரங்கமும் உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகம், தெற்கு ஆசியாவிலேயே சிறந்த நூலகமாக இருக்கும். இந்த நூலகத்தை முதல்வர் கருணாநிதி செப்டம்பர் 15-ம் தேதி திறந்துவைக்க உள்ளார் என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

--------- நன்றி தினமணி (10.09.2010)
                                                                                     



Wednesday, September 08, 2010

திராவிடன் என்று சொல்லுவதிலே நாம் உரிமை பெறுகிறோம்

தமிழன் என்று சொல்லும் போது பெருமையும், திராவிடன் என்று சொல்லும் போது உரிமை உணர்வும் பெறுகிறோம் என்றார் தமிழக நிதி அமைச்சர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள். நேற்று (7.9.2010) சென்னை - பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தைத் தொடங்கி வைத்து தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:


எனது வாழ்க்கையில் முக்கியமான நாள்

இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க வேண்டும் என்று உணர்வுபூர்வமாக அழைத்த மரியாதைக் குரிய வீரமணி அவர்களுக்கு எனது உளமார்ந்த மகிழ்ச்சியை, நன்றியைத் தெரிவித்துக் கொள் கின்றேன்.

எனது பொது வாழ்க்கை வரலாற்றில் இதை ஒரு மிக முக்கியமான நாளாக நான் கருதுகின்றேன். நிலைகுலைந்து போன திராவிடத்தை, வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறவேண்டும் மேலும் வலிவூட்ட வேண்டும், விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வீரமணி அவர்களுடைய வழிகாட்டுதலோடு அவர் புரவலராக இருந்து கொண்டு இந்த திராவிடர் வரலாற்று மய்யம் இன்றைக்குத் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றது.

வீரமணி ஆற்றி வருகின்ற பணி

வீரமணி அவர்கள் ஆற்றிக் கொண்டு வருகின்ற பணி ஆழமான பணி, அழுத்தமான பணி! ஆகவே உள்ளபடியே இதில் கட்டாயம் இடம் பெற வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். நிச்சய மாக இந்த அமைப்பு வளரும். நல்ல ஒளிவிடக்கூடிய வகையிலே திகழும்; ஏற்றம் பெறும்.

அந்தக் காலத்திலேயே கேள்வி

தமிழர்கள் என்ற பெயர் இருந்தால் போதாதா? திராவிடர் கழகம் என்ற பெயர் இருக்க வேண்டுமா? என்று அந்தக் காலத்திலேயே சிலர் என்னிடம் கேட்டதுண்டு.

பார்ப்பனர்களை விலக்கினால் இருப்பது அவர்கள்தான் திராவிடர்கள் என்று சொன்னேன்.
பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்தை ஒழிக்க வேதங்களைப் பரப்பும் கூட்டத்தை ஒழிக்கப் புறப்பட்ட இயக்கம், திராவிடர் இயக்கம்.

தமிழன் என்று சொல்லுவதிலே நாம் பெருமை பெறுகிறோம். திராவிடன் என்று சொல்லுவதிலே நாம் உரிமை பெறுகிறோம்.

பெரியார் ஏற்படுத்திய உணர்வு

தந்தை பெரியார் அவர்கள் ஏற்படுத்திய உணர்வுதான் நீண்ட நெடுங்காலமாக இந்த மக்களுக்குப் பயன்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு ஆராய்ச்சி செய்ய வந்த ஜெர்மன்காரர்கள் எல்லாம் பார்த்தது வடமொழியைத்தான். வடமொழிக்கு முன்பே இருந்தது தமிழ் மொழி.

மாக்ஸ் முல்லர் பார்த்தது

பிராமணர்கள் வடமொழியை உயர்ந்த மொழி என்று சொன்னார்கள். தேவ பாஷை என்று சொன்னார்கள். இதைப் பார்த்த மேலை நாட்டு அறிஞர் மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் வடமொழி யைத்தான் பார்த்தார்கள். அதுதான் அவர்களுக்குத் தெரிந்த மொழியாக, அறியக்கூடிய மொழியாக அன்றைக்கு இருந்தது. வடமொழிதான் சிறந்த மொழி என்று சொல்லி மாக்ஸ் முல்லரே வேதத்தை மொழி பெயர்த்தார்.

நீதிமன்றங்களில் சமஸ்கிருதம்

நீதிமன்றங்களில் அன்றைக்கு வாதாடக்கூடிய மொழிகளாக பார்சி மொழி, சமஸ்கிருதம்தான் இருந்தன. பார்சி மொழி முஸ்லிம்களுக்காகவும் சமஸ்கிருத மொழி இந்து மக்களின் எண்ணத்தை, கலாச்சாரத்தை எடுத்துச் சொல்லக்கூடிய மொழி யாகவும் அன்றைக்கு நீதிமன்றங்களிலே இருந்தன.

எல்லா மொழிகளுக்கும் சமஸ்கிருதம்தான் மூலம். இதிலிருந்து தான் தமிழ், தெலுங்கு மலை யாளம் போன்ற மொழிகள் தோன்றின என்று ஒரு கருத்தைப் பிரச்சாரத்தின் மூலம் பரப்பினார்கள்.

பிராமணர்களைத் தவிர மீதி யாரும் மனிதர்கள் இல்லை என்று பிராமணர்களே சொன்னார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய ஆதிக்கம் இருந் தது. பிரம்மா முகத்தில் பிறந்தவன் பிராமணன் என்றால், மற்றவன் தொடையில் பிறந்தவன் என் றால் தொடையையா பார்த்துக் கொண்டிருப் பார்கள்?

சமஸ்கிருத உதவி இல்லை என்றால் தமிழ் மொழி இயங்காது என்று சொன்னார்கள். இந்தியா - ஆரிய நாடாம்!

இந்தியா என்றால் அது ஆரிய நாடு என்று சொன்னார்கள். மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆராய்ச்சியில் அந்தக் காலத்தில் தமிழ் மொழி இருந்திருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

தமிழ்மொழி ஒரு தனி மொழி. அது ஒரு தனி குடும்பம். அது திராவிடக் குடும்பம் என்பதை 1858ஆம் ஆண்டிலே கால்டுவெல் சொன்னது ஒப் பியன் மொழி நூல் வாயிலாக நிலை நாட்டப் பட்டிருக்கிறது.

ஜம்சுகிருத மொழி

நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் வடமொழியைப் புறக்கணித்து தமிழ் மொழிக்காகப் பாடுபட்டவர்கள். அவர் பேசுகிற பொழுது வடமொழியைத் தாழ்த்தி - புரியும்படி கேலியாகப் பேசுவார். ஜம்சுகிருத மொழி அது உயர்ந்தவர்களின் மொழி என்று சொல்லப்படுகிறது.அந்த ஜம்சு கிருத மொழி செத்துப்போன மொழி என்று பேசும்பொழுது சொல்லுவார்.

நானும், நாவலரும் ஒன்றாக படித்த காலத்தில்

நானும், நாவலர் நெடுஞ்செழியனும் ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்த காலம். அவர் மன்றத் தலைவராக இருந்தார், நான் செயலாளராக இருந் தேன். நாவலர் சோமசுந்தர பாரதியார் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தபொழுது வடமொழி ஜம்சு கிருதம் செத்துப்போன மொழி என்று சொன்னார்.

ஒருவர் திடீரென எழுந்து பேச அனுமதி கேட்டார். நாவலர் சோமசுந்தர பாரதியும் அனுமதி தந்தார். அவர் சொன்னார் -

சமஸ்கிருத மொழி பிறக்கவே இல்லையே, பிறந்தால் தானே செத்துப்போவதற்கு? என்று இப்படி ஒரு பதிலைச் சொன்னார்.

சமஸ்கிருதம்-பிச்சைப் பாத்திரம் போன்றது

சமஸ்கிருத மொழி பாலி மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்ட மொழி, அது பிச்சைப் பாத்திரம் போன்றது. பார்ப்பனிய ஆதிக்கத்தால் நாட்டை ஆண்டது.

புத்தர், மகாவீரர்கூட தமிழ் வழியிலேதான் வந்தவர்கள்தாம். பிராமணர்கள் மேல் ஜாதிக் காரர்கள் என்பதை புத்தர் ஒத்துக் கொள்ளவில்லை. கடவுளை ஏற்காதவர் புத்தர்.

ஹத்தி தும்பா கல்வெட்டு

ஹத்தி தும்பா என்ற கல்வெட்டு புவனேஸ்வருக்கு அருகில் உள்ளது. கி.மு. 175ஆம் ஆண்டுகளுக்கும் முன்பு எழுதப்பட்ட கல்வெட்டு; தமிழ் மூவேந்தர்களின் கூட்டணியை உடைத்தது. கரவேலா என்ற மன்னன்தான் என்று சொன்னார்.

இவர் சொன்னதை நினைத்துப் பார்த் தேன். மூவேந்தர் கூட்டணியை உடைத் தவன் கரவேலா.

அதற்குப் பிறகுதான் சிலப்பதிகாரம் தோன்றியிருக்க வேண்டும். அதனால் தான் கனகவிசயன் என்ற பிராமணன் தலையில் கல்லைக் கொண்டு வந்தான் சேரன் செங்குட்டுவன் என்றிருக்கிறது. தனித்தனியே இப்படி பார்ப்பனர்களை பழிவாங்கியிருக்கலாம்.

கூட்டணியை உடைத்தாலும், தனிப்பட்ட முறையிலே வெற்றி பெறு வான் தமிழன் (பலத்த கைதட்டல்). புத்தரை விட தெளிவானவர் திரு வள்ளுவர்.

திருவள்ளுவர் சொன்ன கருத்து களைப் பார்த்தால் உலகத்தில் இது வரை யாரும் அந்த மாதிரி, அந்த அளவுக்கு கருத்துச் சொல்லியிருக்க முடியாது. திருவள்ளுவன் ஒரு தமிழன். அவன் ஓட்டு கேட்காதவன். அவன் இந்த ஜாதி என்று யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. திருக்குறள் நூல் தான் தமிழுக்கே உள்ள தனிப் பெருமை.
திருக்குறள் மனித குல மேம்பாட் டிற்கான நூல். மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதற்காகவே எழுதப் பட்ட நூல். இல்லற வாழ்வில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற கருத்து களைச் சொல்லிக் கொடுத்த நூல்.

ஆரியர்கள் எல்லாம் செல்வாக்குப் பெறாத காலத்தில் அவர் இருந்திருக் கிறார். திருக்குறளை எழுதியிருக் கின்றார். ஆரியத்திற்கு எதிரானது திராவிடம். இந்து
மதத்தைப் பரப்பு வதுதான் ஆரியத்தின் நிலை.

தந்தை பெரியார் ஆரியத்தை பார்ப்பனர்களை புயலென எதிர்த்தார். எனக்கு சோறு எங்கே என்று கேட்டார்; என்னுடைய பங்கு எங்கே என்று கேட்டார். இல்லை என்றார்கள். பார்த்தார், கடையையே இழுத்து மூடு என்று சொல்லி மக்களுக்காகப் போராட்டம் நடத்தியவர்.

சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லா தாருக்கு நடந்த கொடுமை! வ.வே.சு. அய்யருக்கு எதிர்ப்பு தெரிவித்தார் பெரியார்.

தமிழர்களை மனித நேயத்தோடு நடத்த வேண்டுமென்பதற்காக தோற்று விக்கப்பட்ட இயக்கம் தான் திராவிடர் இயக்கம்.

தமிழ்ச் செம்மொழி என்பதையும், ஆரிய மொழிகளை விட உயர்ந்த மொழி என்பதையும் நிலைநாட்டியவர் கலைஞர்.

ஃபாதர் ஹீராஸ் வெளிநாட்டுக் காரர். அவரிடம் நாங்கள் கையொப்பம் (ஆட்டோகிராப்) கேட்ட பொழுது அவர் என்ன எழுதிக் கொடுத்தார் என்றால், நான் ஸ்பெயின் நாட்டி லிருந்து வந்த திராவிடன் என்று எழுதிக் கொடுத்தார்.

இந்த அமைப்பு தமிழர்களுக்கு திராவிடர் வரலாற்றை எடுத்துச் சொல்லக்கூடிய அமைப்பாகத் திகழும். நாமெல்லாம் விழிப்போடு இருக்க வேண்டும். கூட்டாக இருந்து தமிழ் மக்களுக்காக திராவிடர் வரலாற்றை எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கு வீரமணி அவர்கள் நங்கூரமாக இருக்கிறார். நமது தமிழக முதல்வர் கலைஞர் வெற்றிக் கொடி யைப் பறக்கவிடுபவராக இருக்கிறார்.

- இவ்வாறு பேராசிரியர் தனது உரையில் குறிப்பிட்டார்.

------ நன்றி விடுதலை (08.09.2010)

Sunday, September 05, 2010

ஆச்சாரியார், தாம் செய்த தியாகத்துக்காக (?) அவர் கோரியது என்ன தெரியுமா?

தியாகம் என்பது, சுயநலத் துக்கான பயன் எதிர்பாராது, பொது நலத்துக்காகப் பாடுபடு வதும், எவ்விதமான அவ மானங்களையும் லட்சியம் செய் யாமல், பல இன்னல்களுக்கும் தயாராகித் தொண்டாற்றுவதும் ஆகும் (விடுதலை 12.1.1966) - என்று தியாகம் என்பதற்குத் தெளிவான சூத்திரத்தைச் சொல் லியுள்ளார் தொண்டு செய்து பழுத்த பழமாம் தந்தை பெரியார்.

இந்த இலக்கணச் சூத்தி ரத்தைப் பொருத்திப் பார்த்தால், அது இன்று பிறந்தாள் காணும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம் பரனாரையே சாரும்.

வெள்ளையனை எதிர்த்து, சுதேசிக் கப்பல் நடத்தி, இரட்டை ஆயுள் தண்டனை ஏற்றவர் - சிறையில் செக்கிழுத்தவர் - இவரைத் தவிர வேறு யாருக்கு உரியது. 1908இல் கோவை சிறைக்கு அவர் எப்படி இழுத்துச் செல்லப்பட்டார்? கை, கால் களைச் சங்கிலியால் பிணைந் திருந்தார்கள். என்ன கொடுமை யடா! சட்டம் படித்த சான் றாண்மை மிக்கத் தலைவருக்கு இந்தக் கதி!

அதே நேரத்தில் வெள்ளை யனே வெளியேறு எனும் ஆகஸ்ட் கிளர்ச்சி போராட்டத்தில் அண்டர்கிரவுண்ட் ஆகி, கட்சியை விட்டே வெளியேறிய சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் (ராஜாஜி) காந்தியாரின் சம்பந்தி ஆகி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆன நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

படிப்பில் என்ன குறைச்சலா! வழக்கறிஞர்; பல அரிய ஆய்வு நூல்களைத் தந்தவர், தலை சிறந்த மேடைப் பேச்சாளர் - எழுத்தாளர் - தியாகத்தின் சிகரம் - அத்தகையவரின் வாழ்வு வறுமைத் தீயில் பொசுங்கிப் போனதன் காரணமென்ன?

ஆச்சாரியார்; பிரா மணாள்; வ.உ.சி. - சூத்திரன் என்பதைத் தவிர இந்த இரு பேர்களுக்கும் உள்ள இடை வெளி என்ன?

ஆச்சாரியார், தாம் செய்த தியாகத்துக்காக (?) அவர் கோரியது என்ன தெரியுமா?
குங்குமம் (7.4.2000) இதழின் 67ஆம் பக்கத்தில் இதோ ஒரு செய்தி:
1973-74ஆம் ஆண்டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்து கோப்பு களைக் கண்ணுறும் வாய்ப் புள்ள ஒருவர் கூறியது: ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான், நெடுங்காலம் வாழப் போவ தாகவும், அக்காலம் முழுதும் தனக்கு வர வேண்டிய பணி ஓய்வு காலத் தொகைகளைக் கணக்கிட்டால், கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பைவிடக் கூடுதலாக வரும் என்றும்; எனவே அரசு கிண்டி ராஜ்பவன் நிலம் முழுதும் தனக்குக் கொடுத்திட வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக் கையை அரசு நிராகரித்துவிட்டது. (குங்குமம் 7.4.2000 பக்கம் 67) அதே நேரத்தில் வ.உ.சி. அவர்கள், தன்மகனுக்கு ஒரு வேலை வாய்ப்பு வேண்டி தந்தை பெரியார் அவர்களின் பரிந்துரை கேட்டுக் கடிதம் எழுதிய நிலைதான்.

காங்கிரசுக்காக சகல தியாகங்களும் செய்த வ.உ.சி. இறுதிக் காலத்தில் காங்கிரசில் இல்லை; தந்தை பெரியார் அவர்களின் தன்மான இயக்கத் திற்கு ஆதரவு காட்டினார்; சுய மரியாதை இயக்க மாநாடுகளில் கலந்து கொண்டார்.

மாவட்ட துணை ஆட்சி யராக இருந்த ஆஷ் துரைக்கு மிகவும் நெருக்கமானவர் ரங்கசாமி அய்யங்கார். அவருக்கு முகச் சவரம் செய்து கொண் டிருந்தார் ஒரு தொழிலாளி. அய்யங்கார் வ.உ.சி.யைப் பற்றி அவதூறாகப் பேச, அவ்வளவு தான் அந்தத் தோழர் பாதி சவரம் செய்த நிலையிலேயே அவரை அப்படியே விட்டுவிட்டு கோபாவேசத்தோடு வெளியேறி னார். அந்த அளவுக்குத் தொழி லாளர்கள் மத்தியில் மதிப்புப் பெற்றிருந்தவர் வ.உ.சி., வ.உ.சி.யின் பிறந்த நாளான இன்று (1872) உண் மையான தியாகத்தைப் போற்று வோமாக!
-விடுதலை (05.09.2010) மயிலாடன்

Saturday, September 04, 2010

ஏழுமலையான் வெறும் வெத்து வேட்டு..ஏழுமலையானுக்கே நாமம்

நாமக் கடவுள் திருப்பதி ஏழுமலையானுக்கே நாமம் போடும் வேலை திருப்பதி கோயில் வட்டாரத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

கோவிந்தக் கடவுளுக்கே கோவிந்தா கோவிந்தா என்று கோவிந்தம் போட வைத்து விட்டனர். திருப்பதிக் கோயில் நகைகள் பற்றிய ஒழுங்கான கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கும் அளவுக்கு ஆங்கே மோசடிகள் முற்றி வெடிக்க ஆரம்பித்துவிட்டன.

அரசியல் சாராத சில அமைப்புகள் நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றன. உலகத்தையே காப்பாற்றுவதாக நீட்டி முழக்கப்படும் உலகநாதனை ஏழுமலையானைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கோஷம் போட்டுப் பயணத்தைத் தொடங்கின.
உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருப்பதியிலிருந்து ஒரு கோடி தந்திகளை பிரதமருக்கு அனுப்பிடப் போகிறார்களாம்.

சினிமா நடிகர் சிரஞ்சீவி தமது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர்களுடன் நடந்து சென்று கோவிந்தக் கடவுளை கோவிந்தா ஆகாமல் காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சருமான சந்திரபாபு நாயுடுவும் களத்தில் குதித்து விட்டார். திருப்பதியில் நடைபெறும் ஊழல்பற்றி சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உரத்த குரலில் பேசி வருகிறார்.

டில்லியில் செய்தியாளர்களிடமே இதனைக் கூறியுள்ளார். கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் திடீரென மாயமாகி விட்டன. வஸ்திர அலங்கார சேவை டிக்கெட் விற்றதில் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. சி.பி.அய். விசாரணை நடத்தி ஊழல் பெருச்சாளிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இவர்கள் ஒன்றும் நாத்திகர்கள் அல்லர் ஏழுமலையானை அனுதினமும் சாமியறையில் வைத்து சாஷ்டாங்கக் கும்பிடு போடக் கூடியவர்கள்தாம்.

சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் ஏழுமலையானை சிறப்புத் தரிசனத்தின் மூலம் கும்பிடுத் தண்டம் போடுபவர்கள்தாம்.

அத்தகைய ஆத்திக சிரோன்மணிகளே குற்றப் பத்திரிகை படிக்கிறார்கள் என்றால் நிலைமை மிகமிக மோசமாக இருக்கிறது ஏழுமலையான் கோயிலில் என்பதுதான் மறுக்கப்பட முடியாத உண்மையாகும். 16,200 பேர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஊழியர்களாம். நாள் ஒன்றுக்கு 85 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் பக்தர்கள் திரளுகிறார்களாம். உண்டியல் வசூல் நாள் ஒன்றுக்கு ஒரு கோடியைத் தாண்டுமாம். அன்றாடம் எண்ணப்பட்டு பத்து வங்கிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறதாம். (உண்டியல் எண்ணும்போது சக்தி வாய்ந்த காமிராக்களை வைத்துக் கண்காணிக்கிறார்கள் வாழ்க பக்த கோடிகளின் நேர்மை!)

ஸ்டேட் பாங்கில் மூன்றரை டன் தங்கம் இருப்பு உள்ளதாம். நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிகளாம்.

நீண்ட நெடுங்காலமாகக் கோயில் பெருச்சாளிகளான பார்ப்பனர்கள் கொள்ளை அடித்துக் குபேர வாழ்வு வாழ்ந்து கொண்டுள்ளனர் அண்மையில் தான் இவை வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளன.

நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பெஜரி வாட கோபால் ரெட்டி என்பவர் திருப்பதி கோயிலுக்குச் சொந்தமான நகைகளின் கண்காட்சி நடத்தும் யோசனை ஒன்றைத் தெரிவித்தார்.

இதற்காக, சோழர், பல்லவர், கிருஷ்ணதேவராயர், விஜயநகர மன்னர் போன்றவர்கள் திருப்பதி ஏழுமலையானுக்கு அளித்த நன்கொடைகளின் உபயங்களின் விவரத்தைத் தெரிவிக்குமாறு திருப்பதி தேவஸ்தானத்துக்குத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவற்றிற்குரிய பதில் தர முடியாது என்று திருப்பதி தேவஸ்தானம் பதில் எழுதிற்று. மன்னர் கிருஷ்ண தேவராயர் தமது ஆட்சிக்காலத்தில் ஏழுமலையானைத் தரிசிக்க ஏழு முறை வந்துள்ளாராம். ஒவ்வொரு முறையும் விலை உயர்ந்த பவுன், வைர நகைகளைக் காணிக்கையாகக் கொட்டியிருக்கிறார்.

1513ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி தமது மனைவிகள் இருவருடன் (திருமலாதேவி, சின்னாதேவி) கிருஷ்ணதேவராயர் நாமக் கடவுளைத் தரிசனம் செய்ய வந்த போது நவரத்தினக் கிரீடம் ஒன்றையும், 25 வெள்ளித் தட்டுகளையும், 2 தங்கக் கிண்ணங்களையும் காணிக்கையாகப் படைத்திருக்கிறார்.

1513ஆம் ஆண்டு மே 2ஆம் தேதியும்; ஜூன் 13 ஆம் தேதியும் அடுத்தடுத்துத் திருப்பதிக்கு வந்திருக்கிறார். மூலவருக்கு விலை மதிப்பில்லா நகைகளை அளித்துள்ளார். உற்சவர்களுக்கு 3 தங்க மணி மகுடங்களை வழங்கியுள்ளார்.

1514 ஜூலை 6ஆம் தேதி 30 ஆயிரம் வராகன்களில் தங்கக் காசுகளால் ஏழுமலையானுக்குக் கனகாபிஷேகம் செய்துள்ளார்.

1515ஆம் ஆண்டில் ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க மகர தோரணம் ஒன்றை காணிக்கையாக்கினார்.

1518இல் செப்டம்பர் 9ஆம் நாளன்று கோயில் கருவறை விமானக் கோபுரத்தில் 30 ஆயிரம் வராகனில் தங்கத் தகடு பதித்தார்.

1521 பிப்ரவரி 17இல் நவரத்தினக் கிரீடத்தைச் சூட்டினார்; விலை மதிப்பு மிக்க வைரப் பீதாம்பரத்தையும் தம் பக்தியின் பரிசாக அளித்தார்.

கிருஷ்ண தேவராயர் முடிசூட்டிய 500ஆவது ஆண்டினை ஒட்டி பெரு விழா எடுப்பது என்றும், அப்பொழுது, ஏழுமலையான் கோயிலுக்குக் கிருஷ்ண தேவராயர் காணிக்கையாக அளித்த நகைகளைக் கண்காட்சியாக வைப்பது என்றும் முடிவு செய்த நிலையில்தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் திடுக்கிட வைக்கும் மோசடிகள் அம்பலத்திற்கு வர ஆரம்பித்தன.

அந்த நகைகளை எல்லாம் உருக்கி டாலர்களாக மாற்றி விட்டோம் என்று கூற ஆரம்பித்தனர். அது நம்பும்படியாக இல்லை என்று பக்தர்களே குமுற ஆரம்பித்து விட்டனர். டாலர் மோசடி டாலர் சேஷாத்திரி என்பது தேவஸ்தான வட்டாரத்தில் பிரபலமான பெயர். நகைப் பாதுகாப்புப் பிரிவில் முக்கிய நபராக இருந்தார். ஓய்வுக்குப்பிறகும் ஒப்பந்த அடிப்படையில் அதே பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தார்.
இவர் அந்தப் பொறுப்பில் இருந்தபோதுதான் 500 கிராம் எடை கொண்ட 300 தங்க டாலர்கள் காணாமல் போயின; யாரோ ஓர் அப்பாவி பணி நீக்கம் செய்யப்பட்டார். டாலர் சேஷாத்திரி என்னும் அளவுக்குப் பேர் கெட்ட இந்த சேஷாத்திரியின் நகத்தில் மண் படாத அளவுக்குச் செல்வாக்குச் சங்கு சக்கரத்தைக் கையில் ஏந்தி நின்றார்.

இரண்டு நாள்கள் விற்பனைக்குத் தேவைப்படும் டாலர்களைத்தான் விற்பனைப் பிரிவுக்குக் கொடுக்க வேண்டும். ஆனால், அந்த விதிமுறைகளையெல்லாம் வீசி எறிந்துவிட்டு, மூன்று மாதங்களுக்குத் தேவையான டாலர்களை விற்பனைப் பிரிவுக்குத் தாராளமாக அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

அவர்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரி ரமணகுமார். தேவஸ்தானத்துக்குப் பரிந்துரை செய்திருந்தும், அதனை யாரும் சட்டை செய்யவில்லை. சேஷாத்திரியல்லவா சட்டம் அவர்களைச் சேவிக்குமே தவிர செயல்படாது.

தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பானாம் கோவிந்தன். அவனின் நகைகளையே காப்பாற்றிக் கொள்ள முடியாத அந்தச் செங்குத்துக் கல்லுக்குச் சக்தியிருக்கிறது என்று நம்பி பணத்தையும் பவுன்களையும் கொட்டிக் குவிக்கிறார்களே இந்த மக்களை என்னவென்று சொல்லுவது!

உண்டியல்களின் பக்கத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் நிற்கிறார்களே இது ஒன்று போதாதா, ஏழுமலையான் வெறும் வெத்து வேட்டு என்பதற்கு?

-----------  விடுதலை (05.09.2010) ஞாயிறு மலர்
                                                               

Friday, September 03, 2010

பெரியார் சிலையைச் சேதப்படுத்தினால் கழகம் சோர்ந்துவிடாது

மூன்று இடங்களில் பெரியார் சிலை அடுத்தடுத்து சேதப்படுத்தப்பட்டிருப்பது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட சதியே!
காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்
கழகத் தோழர்களே, அழுக்குருண்டை பிள்ளையார்பற்றி பிரச்சாரம்
புயல் வேகத்தில் நடக்கட்டும்! நடக்கட்டும்!!
தந்தை பெரியார் பிறந்த நாளை தமிழின விழாவாக வீட்டுக்கு
வீடு கொண்டாடுவோம், கொண்டாடுவோம்! தமிழர் தலைவர் அறிக்கை

தந்தை பெரியார் சிலை மூன்று இடங்களில் சேதப்படுத்தப்பட்டது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

திருச்சி அண்ணா நகரில் இருந்த தந்தை பெரியார் சிலையும், அந்தப் பகுதியிலே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அரசு சார்பில் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையும் ஒரே சமயத்தில் (கடந்த செவ்வாய்க் கிழமை இரவு) விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டமிட்ட வகையிலான விஷமம்

இந்தப் பதற்றம் அடங்குவதற்குள், நெல்லை மாவட்டம் கடையநல்லூரையடுத்த மங்கலாபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இருந்த தந்தை பெரியார் சிலை செப்டம்பர் முதல் தேதி இரவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது ஏதோ எதிர்பாராவிதமாக நடந்த அசம்பாவித மாகக் கருதப்பட முடியாது. அடுத்தடுத்து இரண்டு நாள்களில் மூன்று இடங்களில் இது நடந்திருக்கிறது.
திட்டமிட்ட வகையில் இதன் பின்னணியில் ஒரு சதிக் கும்பல் இருந்திருக்கிறது என்று கருதுவதற்கு நிச்சயம் இடம் உண்டு. காவல்துறை திசை திருப்ப முயற்சிக்கக் கூடாது.

தமிழினத்துக்கே அறைகூவல்!

தந்தை பெரியார் சிலையைச் சீண்டுவது என்பது ஒட்டுமொத்தமான தமிழினத்திற்கு விடப்பட்ட அறை கூவலாகும்.

தந்தை பெரியார் ஒரு கட்சிக்கோ, ஓர் இயக் கத்துக்கோ சொந்தமானவர் அல்லர். ஒட்டுமொத்த தமிழினத்திற்கு உயிர் போன்றவர். தமிழினத்திற்குச் சுயமரியாதையையும், பகுத்தறிவையும் ஊட்டி, இனப் பகையின் ஆதிக்க வேரையறுத்து, புத்துணர்வை ஊட்டிய உலகத் தலைவர் அவர்.

எதிர்நீச்சல் போட்ட தலைவர்

அவர் வாழ்ந்த காலத்திலும் எதிர்நீச்சல் போட்டவர் அவர் மறைந்த இந்தக் காலகட்டத்திலும் அவரை மய்யப்படுத்தியே சர்ச்சைகளும், சிந்தனைகளும் சுழன்று கொண்டிருக்கின்றன. தந்தை பெரியாரின் தேவை மிக அதிகமாக உணரப்படும் காலகட்டம் இது.

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் காவித் தீவிரவாதம்பற்றி கூறிய கருத்தினை வரவேற்று சிதம்பரம் அவர்கள் சொன்னதில் என்ன குற்றம் என்று விடுதலையில் அறிக்கை வெளியிட்ட ஒரு சில நாள்களில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை இந்தக் கண்ணோட்டத்தில் பிரச்சினையை அணுகுவது அவசியம்.

காவல்துறையின் கவனத்திற்கு...!

யாரையோ இரண்டொருவர் மீது வழக்குப் போட்டு கோப்பினை முடிவுக்குக் கொண்டுவரும் சம்பிரதாயமான நடைமுறையை தந்தை பெரியார் சிலை சேதப் படுத்தப்பட்ட இந்தப் பிரச்சினையிலும் உள்ளூர்க் காவல் துறையினர் கடைப்பிடித்தால், அதனைத் தமிழகம் ஏற்காது.

திருச்சியில் தந்தை பெரியார் சிலை தகர்க்கப்பட்ட 24 மணிநேரத்தில் அதே இடத்தில் சிலையைக் கழகத் தோழர்கள் வைத்துவிட்டனர்; அது வேறு செய்தி.
செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்று கவிஞர் கருணானந்தம் அவர்கள் கூறியதுபோல, தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான அய்யா சிலைகளை நிறுவிட கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள்.

எந்த எண்ணத்தின் அடிப்படையில்?

தந்தை பெரியார் சிலையைத் தகர்க்கவேண்டும் என்று நினைக்கிற செயல்படுகிற அந்த எண்ணம் எந்த அடிப்படையில், எந்தப் பின்னணியில் என்பதுதான் முக்கியமானதாகும்.
தீவிரமான முறையில் கொள்கைப் பிரச்சாரம் செய்து வந்த தந்தை பெரியார் வன்முறையை ஒருபோதும் தூண்டியதில்லை பிள்ளையார் உடைப்புப் போராட் டத்தை அறிவித்த நேரத்தில்கூட கோயில்களில் உள்ள சிலைகளை உடைக்கச் சொல்லவில்லை. காசு கொடுத்துக் கடைகளில் வாங்கி, அதனைத்தான் உடைக்கச் சொன்னார்.

கோயில் சிலைகளை உடைக்க முடியாதா?

கோயில்களில் இருக்கும் சிலைகளை உடைப்பது என்பது பெரிய காரியமல்ல! அப்படி உடைக்கவேண்டும் என்றால், முன்னதாகவே அறிவித்து நாள் குறிப்பிட்டு, அந்தக் காரியத்தை எங்களால் நிச்சயம் செய்ய முடியும்.

ஆனால், அதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை; மக்கள் மனதில் உள்ள அறியாமை இருட்டை பகுத்தறிவின் அடிப்படையில் விரட்டுவதன் மூலமாகத்தான் நிரந்தரமான தீர்வைக் காண முடியும் என்பது தந்தை பெரியார் அவர்களின் அணுகுமுறை அதைத்தான் இன்றளவும் கழகம் பின்பற்றி வருகிறது.

முளையிலேயே கிள்ளி எறிக!

தமிழ்நாட்டின் அமைதிச் சூழலைக் கெடுக்க இத்தகு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்று காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறோம்.

பெரியார் சிலையைச் சேதப்படுத்தினால் கழகம் சோர்ந்துவிடாது; மாறாக வீறுகொண்டு எழுந்து, கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை, கா(லி)விகளின் பிற்போக்குச் சனாதனத்தைத் தோலுரிக்கும் பிரச்சாரத்தைப் பன்மடங்கு மேற்கொள்வோம்.

குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்ட ரீதியான கடமையினைச் செய்ய அரசுக்கு விட்டுவிடு வோம்.

திராவிடர் கழகம் கலைஞர் அரசுக்கு அரணாக இருப்பதை மாற்றவும், இப்படி ஒரு நிலையை உருவாக்கி, ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கப் பார்க்கின்றன ஆரியமும், அதன் கூலிகளும்!

எங்கள் பணியால், பிரச்சாரத்தால் சட்டம் ஒழுங்கு கெடாது; கெடவும் அனுமதிக்க மாட்டோம்.

அழுக்குருண்டை பிள்ளையார்பற்றி பிரச்சாரம் வேகமாக நடக்கட்டும்!
விநாயகர் சதுர்த்தி வரும் இந்தக் காலகட்டத்தில் அதனை மய்யப்படுத்தி, கழகத் தோழர்களே, நமது பிரச்சாரம் புயலாக நாலா திசைகளிலும் சுழன்று அடிக்கட்டும். அழுக்குருண்டைப் பிள்ளையார்பற்றி அதிவேகத்தில் பிரச்சாரம் நடக்கட்டும்; துண்டு அறிக் கைகளை வீட்டுக்கு வீடு விநியோகியுங்கள். சுவரெழுத்து, தட்டி வாசகம் எங்கும் நீக்கமறக் காணப்படட்டும்!

தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்திய காரணத்தால் ஓய்ந்து போனோமா மாறாக ஓங்கி எழுந்தோமா என்பதை நாடு காணட்டும்!
பெரியார் பிறந்த நாளினை பெருஞ்சிறப்புடன் கொண்டாடுவீர்!

வட்டியும் முதலுமாகச் சேர்த்து தந்தை பெரியார் அவர்களின் 132 ஆம் ஆண்டு பிறந்த நாளினை தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவர் வீட்டிலும் கொண் டாடவேண்டும்.
தமிழர்களை ஒருமுனைப்படுத்தும் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை அந்தக்
கண்ணோட்டத்தில் வளர்த்தெடுப்போம்!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே என்ற புரட்சிக்கவிஞரின் வரிகளை நிலைப்படுத்துவோம்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!

---நன்றி விடுதலை 

தலைவர்,
திராவிடர் கழகம்.


Wednesday, September 01, 2010

கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடு கிறார்களே இந்தக் கிருஷ்ணன் எப்படிப் பிறந்தானாம்?

இன்று கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம். பிறப்பு இறப்பு அற்றவர் உருவம் அற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் வாய்ப் பறை கொட்டுவோர் அதற்கு நேர் எதிராக அறிவு நாணயமற்ற முறையில் கடவுள் பிறந்தார் என்றும், இந்த உருவத்தில் உள்ளார் என்றும், அந்தக் கடவுளுக்கும் பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள், பிள்ளை குட்டிகள் உண்டு என்றும் கூறும் அபத்தத்தை ஆபாசத்தை என்னவென்று சொல்ல!

கடவுள் சண்டை போட்டார்; கொலை செய்தார் விபச்சாரம் செய்தார்; சூழ்ச்சி செய்தார்; தந்திரம் செய்தார் என்றெல்லாம் கடவுள்கள் இந்து மதத்தில் கற்பிக்கப்பட்ட திலிருந்து இந்து மதத்தின் சாக்கடை நாற்றத்தையும் இவ்வாறெல்லாம் தெருப்புழுதியாக எழுதி வைத்துள்ள ஆசாமிகளின் ஆபாச சேட்டைகளையும் ஆறறிவுள்ள மனிதர்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?
இன்றைக்குக் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடு கிறார்களே இந்தக் கிருஷ்ணன் எப்படிப் பிறந்தானாம்?

தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்கவேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயினவாம் இவ்வாறு கூறுவது இந்து மதத்தின் அபிதானகோசம்தான்.

எவ்வளவுக் காட்டுமிராண்டித்தனத்தில் கடவுளின் கீழ்த்தர உற்பத்தி நடந்திருக்கவேண்டும்?

கடவுள்தானே தேவர்களையும், ராட்சதர்களையும் படைத்தான் என்கின்றனர். அப்படி இருக்கும்போது கடவுளால் படைக்கப்பட்ட ராட்சதன், கடவுளால் படைக் கப்பட்ட இன்னொரு தேவர்களை எப்படித் துன்புறுத்துவான்? கடவுளின் வளர்ப்பு சரியில்லையா?

எந்த அவதாரம் எடுத்தாலும் ராட்சதனைக் கொன்றான் ராட்சதனைக் கொன்றான் என்று எழுதி வைத்துள்ளார் களே, அந்த ராட்சசன் வம்சம் அழிந்து போய்விட்டதா அல்லது தொடர்கிறதா?

வரலாற்று ஆசிரியர்கள் எல்லாம் பார்ப்பன பி.டி. சீனிவாசய்யங்கார் உள்பட, இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்து வந்த விவேகானந்தர் வரை ராட்சதர்கள் என்று இதிகாசங்களிலும், வேதங் களிலும், புராணங்களிலும் சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று எழுதியுள்ளார்களே இதன் பொருள் என்ன?

திராவிடர்களை இழிவுபடுத்த, மட்டந்தட்ட, கொன் றொழிக்க, இட்டுக்கட்டி எழுதப்பட்ட சரக்குகள்தான் இவை என்பது விளங்கவில்லையா?
நாட்டில் நடப்பது ஆரியர் திராவிடர் போராட்டம் என்று தந்தை பெரியார் சொன்னதும் தேவர்கள் அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்று சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 18.9.1953 அன்று திருவொற்றியூரில் பேசியதும் இதனை நிரூபிக்கின்றனவே!

பார்ப்பனர்களுக்காகப் போரிட்டவர்களுக்கு விழா கொண்டாடும்போது அவர்களை எதிர்த்துப் போரிட்ட திராவிடர்கள் என்ன செய்யவேண்டும்? அந்தக் கடவுள் களை வீதிக்கு வீதி போட்டுக் கொளுத்தவேண்டாமா?
தந்தை பெரியார் இராமன் படத்தை எரிக்கச் சொன்னதும், பிள்ளையார் பொம்மைகளை வீதிகளில் போட்டு உடைக்கச் சொன்னதும் இந்த அடிப்படையில் தானே?

புத்த மார்க்கத்தை ஒழிக்கத்தான் கிருஷ்ண அவதாரம் கற்பிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
புத்தர் ஒழுக்க நெறிகளைப் போதித்தார் கட்டுப் பாடுகளை, நியதிகளை வரையறுத்தார். ஆரியர்களின் யாகங்களை எதிர்த்தார். அவர்கள் வகுத்த வருணாசிரம அமைப்பை நிர்மூலப்படுத்தினார்.

அந்த ஒழுக்க நெறிகளுக்கு மாறாக ஆபாச உணர்வையும், விபச்சாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் ஒரு கதாபாத்திரத்தை (கிருஷ்ணனை) உருவாக்கி கவர்ச்சியைக் காட்டி மக்களை மதிமயங்கச் செய்த ஏற்பாடுதான் இது.
சினிமாக்காரர்களைக் காட்டியும், பாலுணர்வைத் தூண்டும் சமாச்சாரங்களை ஒளிபரப்பியும் மக்களை இப்பொழுது திசை திருப்பவில்லையா? மதி மயக்கம் செய்யவில்லையா? இந்த ஒழுக்கங்கெட்ட விவகாரங்களை இந்து மதத்தின் கிருஷ்ணாவதாரத்திலிருந்து கற்றுக் கொண்டவர்கள்தான் இவர்கள்.
குளிக்கும் பெண்களின் ஆடைகளைத் திருடிச் செல்வதும், நிர்வாணமாகக் கரைக்கு வந்து இரு கைகளை யும் உயரே தூக்கிக் கும்பிட்டால்தான் ஆடைகளைக் கொடுப்பேன் என்று அடாவடித்தனம் செய்ததும் தான் கிருஷ்ணக் கடவுளின் சிறப்பாம்.

இந்தக் கேவலமான கடவுளின் பிறந்த நாள் என்று கூறி அரசு விடுமுறை வேறு விடுகிறது. செல்வி ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த இந்த விடுமுறை இப்பொழுதும் தொடர்வது நியாயந்தானா?
---------- நன்றி விடுதலை தலையங்கம் (01-09-2010)

Tamil 10 top sites [www.tamil10 .com ]