வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Saturday, August 14, 2010

அன்றில் இருந்து பெரியாரின் டிரஸ்டுகள் மீது குறிவைக்கும் துரோகிகள்

பெரியாரின் டிரஸ்டுகள் ஒரு திறந்த புத்தகம் என்கிற இந்த நூலின் 6,7,8 பக்கங்களில் இருந்து
--------------------------------------------------------------------------
தந்தை பெரியார் மறைவுக்கு பின் அன்னை மணியம்மையார் மறைவு காலத்தில் ,இந்த வருமான வரி பாக்கி 17 லட்சத்திலிருந்து 57 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது . 1978 (மார்ச்) அம்மா அவர்கள் மறைந்த ,என்னை செயலாளராக ஆக்கிய பிறகு இந்த வருமான வரி பாக்கி சுமார் 80 லட்சமாக உயர்த்தப்பட்ட கொடுமைக்கு ஆளானோம். அது மட்டுமா தந்தை பெரியார் காலத்தில் இந்த வருமானவரி துவங்கி நடைபெற்றது. அவர்கள் மறைவுக்கு பின்னர் "எமெர்ஜென்சி " முழுமையாக பயன்படுத்தி ,இலாகாவின் பார்ப்பன மேல் அதிகாரிகள் "சாமி ஆடி " பழிவாங்கும் தன்மையில் ஆட்டம் போட்டனர் . சொத்துக்கள் மீது அட்டாச்மென்ட் ,டிரஸ்ட் சொத்துகளிலிருந்து வரும் வாடகை வருமானத்தை முடக்கியும் ,வங்கி கணக்குகளில் உள்ள தொகைகள் பறிப்பு - முடக்கம் இவளவும் பெரியார் திடலிலே பகிரங்கமாக அட்டாச்மென்ட் நோட்டீஸ் ஒட்டல் வேலை ,-இவளவும் நடந்தன. அதை எதிர்த்து மீண்ட நிலையில் அம்மா(மணியம்மையார்) மறைந்து ,நான் பொறுப்பேற்ற பிறகு கழகத்தினை விட்டு விலக்கப்பட்ட மூவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ,டிரஸ்டினை எதிர்த்து வழக்கு போட்டனர்.(திருவாரூர் கே.தங்கராசு,டி.எம்.சண்முகம்,கு.கிருட்டிணசாமி). அரசே தலையிட்டு வருமானங்களை எல்லாம் பெறுபவர் (official receiver) போட வேண்டும் என்றும்,அரசே இந்த அறக்கட்டளையை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கோரினர்.

அன்று திராவிடர் கழகம் கலைஞர் கருணாநிதிக்கு ஆதரவாக இருக்கிறது என்ற நினைப்பில் ,எம்.ஜி.ஆர். அவர்கள் ,அம்மாவால் விளக்கபட்டவர்களுக்கு முதலில் திரை மறைவிலும் பிறகு வெளிப்படையாகவும் ஆதரவு தந்து இம்மாதிரி செயல் களுக்கு வழக்கறிஞர் உதவி - உபயம் கூட செய்தது! நான் பொறுப்பேற்று ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் உயர் நீதி மன்ற வழக்கு ,அதோடு கூட ஒரு சில மாதங்களில் வருமான வரித்துறை மேல் முறையீட்டு (Icome Tax Appellate Tribunal) மன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. அதற்க்கு முதலில் வருமான வரித்துறை அதிகாரி ,அதற்கடுத்து மேல் அதிகாரி,அதற்கடுத்த நிலையில் (Icome Tax Assistant Commissinar) இப்படி பலரும் பழைய பாக்கியை உறுதி செய்து விட்ட நிலையில் தான்,மூன்றாவது கட்டமாக இந்த அப்பீல் (அதற்கடுத்து இருண்டு மேல்படிகள் உயர்நீதிமன்றம்,உச்ச நீதி மன்றம் என்பவையே !) அதில் இரண்டு "மேல் ஜாதி " நீதிபதிகள் என்பவர்கள் விசாரித்தனர். மேல் சாதி உணர்வுக்கு ஆட்படாமல் ,அப்பெருமக்கள் நல்ல தீர்ப்பு 1978 இல் வழங்கினர்

1.ரூ.80 லட்சம் வருமானவரி போட்டது செல்லாது என்ற நமது வாதம் ஏற்கப்பட்டது.

2 .பெரியாருடையது "அறக்கட்டளை தான் " என்று வருமான வரித்துறையினர் ஏற்று கொள்ள வேண்டும் என்பது இரண்டு முக்கிய வெற்றிகளாகும். அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகள் பின்னோக்கி (with retrospective effect) இதை அறக்கட்டளையாக (public charitable trust) ஆக வருமான வரித்துறை அங்கிகரித்த ஆணைகளையும் பெற்றோம்.
-------------------------------------------------------------
பெரியாரின் டிரஸ்டுகள் ஒரு திறந்த புத்தகம் என்கிற இந்த நூலின் 12 ஆம் பக்கத்தில் இருந்து
-------------------------------------------------------அதற்க்கு பிறகு 1997 இயக்க கட்டுப்பாட்டை மீறிய காரணத்தால் கழகத்திலிருந்து நீக்கிவைக்கப்பட்ட திரு.பாலகுரு என்பவரும் அவருடைய கோஷ்டியினரும் அவர்களுக்கு மறைமுகமாக தொடர்ந்து உதவி வந்த வழக்கறிஞர் திரு.துரைசாமி யும் நமது டிரஸ்டுகளின் மீது வழக்கினை மற்றொரு ரூபத்தில் "ரிட்" ஆக சென்னை உயர்நீதி மன்றத்தில் போட்டனர் .அதை விசாரித்து தீர்ப்பு கூறிய நீதிபதி பத்மநாபன் இவர்களது வாதங்கள் ஏற்க்க கூடியவை அல்ல என்பதை சுட்டிக்காட்டி அந்த வழக்குகளை தள்ளுபடி செய்ததோடு ,அதற்க்கு முந்தைய நீதிபதி கனகராஜ் அளித்த அனுமதியையும் கூட தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறினார். இது 1996-97 நடைபெற்றது தீர்ப்பு வெளிவந்தது. தொல்லைகள் வந்தாலும் வளர்ச்சி பணிகள் தொடர்கின்றன. இந்த வழக்குகளின் தொல்லை ஒருபுறம் தொடர்ந்து கொண்டே இருந்தாலும்,நமது இரு அரகட்டளைகளின் சார்பில் துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்ற அமைப்புகள் நல்ல வளர்ச்சி பெற்று ,சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

1 comment:

Thamizhan said...

டிரஸ்ட்டுக்கு ஆசைப்பட்டவர்கள் வெளியே அனுப்பப் பட்டார்கள். ஆசைப்படாதவர்கள் பொறுப்புகளில் திணிக்கப் பட்டுள்ளனர். அன்றும் ,இன்றும் அதே கதை தான்.

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]