வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Tuesday, May 04, 2010

மருத்துவர்களால் குணமாக்கப்படாத நோய் குழவிக் கல்லால் குணமாகிவிடுமா?

கோயில்களுக்குச் சென்று நேர்த்திக் கடன் கழித்துவிட்டுத் திரும்பு-பவர்கள் விபத்தில் பலியாகி மரணம் அடையும் பரிதாபச் செய்திகள் நாளும் வந்த வண்ணம் உள்ளன.


திருவாரூரையடுத்த எட்டுக்குடி முருகன் கோயி-லுக்குச் சென்று வந்த சென்னை திருவொற்றியூ-ரைச் சேர்ந்த பக்தகள் 5 பேர் சாலை விபத்தில் பரி-தாபமாகப் பலியானார்கள். மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்-டனர் என்பது நாளேடுகளில் வெளிவந்த தகவல்கள் (29.4.2010).

அதேபோல, கேரள மாநிலம் கானூர் மற்றும் பாலக்காடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேளாங்-கன்னிக்கு மாதாவைத் தரி-சிக்க காரில் வந்தபோது திரு-வாரூர் அருகே அம்மையப்-பன் அருகே நின்று கொண்-டிருந்த லாரிமீது மோதி அந்த இடத்திலேயே 8 பேர் பலியானார்கள் என்பது ஏப்ரல் 30 ஆம் தேதி ஏடு-களில் இடம்பெற்ற தகவல்.

ஓர் ஆண்டு என்று கணக்கிட்டால், இதுபோல ஆயிரம் ஆயிரம் விபத்து-கள்; அதில் ஆயிரம் ஆயி-ரம் பக்தர்கள் மரணம்!

இவ்வளவுக்குப் பிறகும் கடவுள், கோயில், பக்தி, தரி-சனம், நேர்த்திக் கடன் என்று மக்கள் அலைகிறார்-கள் என்றால், அவர்களின் பக்தியை, புத்தியை என்ன-வென்று சொல்ல!

ஒருகணம் சிந்தித்தால், புத்திக்கு வேலை கொடுத்-தாலே நல்ல முடிவுக்கு வந்துவிடலாமே!

கோயில்களும் சரி, அதற்குள் வைக்கப்பட்டிருக்-கும் கடவுள் சிலைகளும் சரி, மனிதனால் உருவாக்கப்-பட்டவைதானே!


ஓசையுள்ள கல்லை நீர்
உடைத்து ரண்டாய் செய்துமே
வாசலில் வைத்த கல்லை
மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்த கல்லில்
பூவும் நீரும் சாத்துறீர்!
ஈசனுக்கு உகந்த கல்லு
எந்த கல்லு சொல்லுமே!

என்று சித்தர் பாடினாரே  கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?

இப்பொழுது ஒரு தகவல் தமிழ்த் திரைப்பட உலகில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் மனோரமா! திராவிடர் கழகம் நடத்திய புரட்சிக்கவிஞர் விழாவில் அவருக்கு மக்கள் கலை-யரசி என்று பட்டம் கூட வழங்கப்பட்டது. அதற்குத் தகுதியானவர் அவர் என்-பதில் அய்யமில்லை.

அவருக்கு மூட்டு வலி-யாம். வயதான காலத்தில் பெண்களுக்குப் பொதுவாக வரக்கூடிய தொல்லைதான் இது. இதற்காக கேரளா சென்று ஆயுர் வேத சிகிச்-சைகூட எடுத்துக்கொண்டா-ராம்; குணமாகவில்லையாம்.

அடுத்து முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசனம் செய்தாராம் _ வேலை ஆகவில்லை. இறுதியில் திருப்பதி சென்று மொட்டை போட்டுக்-கொண்டு காரில் திரும்புகை-யில், விபத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டுள்ளாராம். அவர் விரைவில் குணம் அடையவேண்டும் என்பதே நமது ஆவல்!

இதற்குப் பிறகாவது மனோரமாக்கள் திருந்துவார்-களா? திருந்தவேண்டும் என்-பதே நமது வேண்டுகோள்.

மருத்துவர்களால் குணமாக்கப்படாத நோய் குழவிக் கல்லால் குணமாகிவிடுமா?

- விடுதலை மயிலாடன் (04.05.2010)

No comments:

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]