வெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்

ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]

Search This Blog

Monday, December 28, 2009

‘சொர்க்கவாசல்’ ...சொர்க்-கத்துக்குப் போகவில்-லையா?


நாடு முழுவதும் 108 வைணவக் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்-கள் அனைத்திலும் இன்று இரவு கண் விழித்து ஏகாதசி விரதம் இருந்து விடியற்காலை சொர்க்க-வாசல் திறப்பு.


ஸ்ரீரங்கநாதன் ஸ்தோத்-திரத்தை 1008 முறை சொல்-பவர்களுக்கு இப்பிறவி-யில் எல்லா க்ஷேமங்-களும் பேஷாகக் கிடைக்-குமாம்.

மத்திய, மாநில அரசு-கள் எதற்காக தேவை-யில்லாமல் கோடிக்கணக்-கில் பணத்தைக் கொட்டி திட்டங்களை வகுக்கின்-றன என்று தெரிய-வில்லை. அய்ந்தாண்டு திட்டங்கள் எல்லாம் எதற்காக?

பேசாமல் இந்தியா-வின் குடியரசுத் தலை-வரும், பிரதமரும் இன்று இரவு ஸ்ரீரங்கநாதர் ஸ்தோத்திரத்தை 1008 முறை சொன்னால் தீர்ந்-தது கதை. 110 கோடி மக்-களுக்காக ஒரு இரவு கண் விழித்து இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லவேண்டியதுதானே!

பக்தியின் பெயரால் மக்களை எந்த அளவுக்கு முடமாக்கி வைத்திருந்-தால் இந்த 2009 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற தெருப் புழுதிக் கூத்து-களை அரங்கேற்றுவார்-கள்?

இந்த ஸ்ரீரங்கநாதன் ஸ்தோத்திரத்தில் ஒரே ஒரு பாடல்; ஒரு பானை சோற்-றுக்கு ஒரு பருக்கை-தானே பதம்?

‘தேவேந்திரனின் அமர லோகத்தில் வாசம் செய்து தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்-டாம் ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்-கும் பாக்கியம் எனக்குக் கொடுப்பீராக!’ எப்படிப்-பட்ட சுலோகம்!

அரிது அரிது மானிட-ராகப் பிறப்பது அரிது என்ற கருத்தையும் படித்-திருக்கிறோம். இப்படி நாயாகப் பிறக்கவேண்-டும் என்று கூறுவதையும் படிக்கும்பொழுது ஆறறி-வுள்ள ஒரு மனிதனின் புத்தியை எப்படியெல்லாம் நாசமாக்கி விட்டனர்! நாயாகப் பிறக்கவேண்டும் என்று ஒரு வேண்டு-கோளை ஒரு கல் சிலைக்கு முன் வைக்கும் அளவுக்கு அறிவின் தரத்தை பக்தி என்னும் ஆபாசக் குழியில் தள்ளி மிதித்து அசிங்கப்படுத்தி விட்டனரே!

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற தந்தை பெரியாரின் அறிவு மொழி, ஆகா, எவ்வளவு வானளாவியது! வையத்து அறிவுக் கண்ணின் ஊற்-றைத் திறக்கக் கூடியது!

கடைசியில் ஒன்று:

இன்று இரவு கண் விழித்து ஸ்ரீரங்கநாதர் ஸ்தோத்திரங்களை 1008 முறை ஓதி, விடியற்-காலையில் கோயிலில் டிக்கெட்டும் வாங்கிக் கொண்டு சொர்க்க வாசல் நுழைந்த பக்தர்களே, மீண்டும் வீட்டுக்குத் திரும்-புகிறீர்களே, சொர்க்-கத்துக்குப் போகவில்-லையா? (சாகவில்லையா) இது என்ன நியாயம்? வடலூர் இராமலிங்கனார் சொன்னதுபோல இது என்ன பிள்ளை விளை-யாட்டு!

யாரை ஏமாற்றுகிறீர்-கள்? அல்லது உங்க-ளையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளவில்லையா!

-விடுதலை (28.12.09) மயிலாடன்

3 comments:

கபிலன் said...

மிக்க நன்றி நினைவுபடுத்தியமைக்கு......!

Thamizhan said...

கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் என்பதற்கு முதல் எடுத்துக் காட்டு சொர்க்க வாசல்.
அப்புறம் எப்படி ஒழுக்கம் வரும்.
அங்கே சென்று நெரிசிலில் உரசிக் கொள்வதே சிலருக்குச் சொர்க்க லோகமா?
உண்மையிலேயே சொர்க்கத்திற்கு என்று திரும்ப முடியாதக் கதவு இருந்தால் எத்தனை பேர் போவார்கள்?

Web-Hosting said...

மகன்: அப்பா,நம்ம பாட்டி போன மாசம் செத்து சொர்கத்துக்கு போனாலே ,ஏன் இன்னும் திரும்பி வரலே ?

அப்பா : சொர்க்கத்து போனவா எல்லாம் திரும்ப வரமாட்டா ,சாமியிண்டே இருப்பாடா!

மகன்: நேற்று பெருமாள் கோயில் திறந்து சொர்க்க வாசல் போனவா நிறைய பேரை இன்னைக்கு டாஸ்மாக் கடையாண்டே பார்த்தேனே !!!

Post a Comment

Tamil 10 top sites [www.tamil10 .com ]